வில்பத்து விவகாரம் : ரிஷாத் நீதிமன்றை அவமதித்தாரா?

0 164

எம்.எப்.அய்னா

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­லயப் பகு­தியில் காட்டை அழித்­தமை (துப்­புரவு செய்­தமை), கட்­டு­மா­ணங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­த­மையை மையப்­ப­டுத்­திய ரிட் மனு மீதான விசா­ர­ணையின்போது, மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்த உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்­தாமை ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் நீதி­மன்றை அவ­ம­தித்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி குறித்த மனுவை எதிர்­வரும் 28 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்­கு எடுக்க மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது.

சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த இந்த மனுவை, மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன மற்றும் நீதி­பதி ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்­கிய அமர்வு முன்­னி­லையில் ஆராயப்­பட்­டது. இதன்­போதே இதற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அத்­துடன், மனு­தாரர் தரப்­பூ­டாக, குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள ரிஷாத் பதி­யூ­தீ­னுக்கு அறி­வித்தல் அனுப்­பவும் இதன்­போது மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.
சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு மனுவில், பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்­காவின் கல்­லாறு சர­ணா­லய காட்டுப் பகு­தியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்­டு­மா­ணங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­த­­தாக கூறப்­படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூ­தீ­ன் உட்­பட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி தாம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரிட் மனு­வொன்­றினை தாக்கல் செய்­தி­ருந்­த­தாக கூறப்­பட்­டுள்­ளது.

அம்­ம­னுவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தி­கதி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தா­கவும், அத்­தீர்ப்பில் அழிக்­கப்­பட்ட வனப்­ப­கு­தியை மீள உரு­வாக்க, அவர் அப்­ப­கு­தியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த மர நடுகை நட­வ­டிக்­கை­க­ளுக்­கான முழு­மை­யான செலவை கணித்து, இரு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு, வன பாது­காப்பு திணைக்­கள பணிப்­பாளர் நாய­கத்­துக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலையில், 1067 மில்­லியன் ரூபாவை மீள காடு­களை நடு­வ­தற்­காக செலுத்­து­மாறு அத்­தி­ணைக்­களம் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு நீதி­மன்றம் ஊடாக அறி­வித்­த­தாக மனு­தா­ரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அதன்­படி குறித்த பணத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூ­தீ­ன் இது­வரை செலுத்­த­வில்லை எனவும், அத­னூ­டாக அவர் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி­யி­ருப்­ப­த­ாகவும் இது நீதி­மன்றை அவ­ம­திக்கும் செயல் எனவும் மனு­தா­ரர்கள் குறிப்­பிட்டே இந்த நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை தாக்கல் செய்­துள்­ளனர்.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்த தீர்ப்பு என்ன ? :
முன்­ன­தாக கடந்த 2020 நவம்பர் 16 ஆம் திகதி, வில்­பத்து விவ­கா­ரத்தில், பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­லயப் பகு­தியில் காட்டை அழித்­தமை ( துப்­ப­ரவு செய்­தமை), கட்­டு­மா­ணங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­தமை சட்ட விரோ­த­மா­னது என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இந் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யூ­தீ­ன் பங்­க­ளிப்பு பொறுப்புக் கூற வேண்டும் என அப்­போது தீர்­மா­னித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், அழிக்­கப்­பட்ட வனப்­ப­கு­தியை மீள உரு­வாக்க, அவர் அப்­ப­கு­தியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என உத்­த­ர­விட்­டி­ருந்­தது..

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் அப்­போ­தைய நீதி­ப­தியும் தற்­போ­தைய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரு­மான ஜனக் டி சில்வா மற்றும் தற்­போ­தைய மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி நிசங்க பந்­துல கரு­ணா­ரத்ன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருந்­தது.

2015 இல் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த வழக்கு விசா­ர­ணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டே நிறை­வ­டைந்த நிலையில், கடந்த 2019 வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்ப்பு அறி­விக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும், வழக்கை விசா­ரித்த நீதி­பதி மஹிந்த சம­ய­வர்­தன தீர்ப்பை அறி­விக்க விருப்பம் தெரி­விக்­கா­மை­யினால் மனுவை ஆரம்­பத்தில் இருந்து மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் அப்­போ­தைய தலைமை நீதி­பதி யசந்த கோதா­கொட தீர்­மா­னித்தார்.

அதன்­ப­டியே மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வாவின் கீழ் இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் இவ்­வ­ழக்கை மீள விசா­ரித்­தது. அந்த விசா­ர­ணை­களே நிறை­வ­டைந்து தீர்ப்பு 2020 நவம்பர் 16 இல் அறி­விக்­கப்­பட்­டது.

இவ்­வ­ழக்கில் மனு­தா­ர­ரான சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் சார்பில் சட்­டத்­த­ரணி ரவீந்­ரநாத் தாபரே, எஸ். பொன்­னம்­பெ­ரும ஆகிய சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­ன­துடன், 1 முதல் 6, 8,9 ஆம் பிர­தி­வா­திகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி மனோ­கர ஜய­சிங்க ஆஜ­ரானார். 7 ஆம் பிர­தி­வா­தி­யான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூ­தீ­ன் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, சட்­டத்­த­ர­ணி­க­ளான பசீர் அஹமர் மற்றும் என்.எம்.ரியாஸ் ஆகி­யோ­ருடன் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
இவ்­வ­ழக்கின் வாதங்கள் கடந்த 2019 ஜூலை 7, 2020 பெப்­ர­வரி 12 ,19 ஆம் திக­தி­களில் இடம்­பெற்­றி­ருந்­தன.

எழுத்து மூல சமர்­ப­ணங்­களை, மனு­தாரர், கடந்த 2018 செப்­டம்பர் 26, 2020 ஜூன் 12 ஆம் திக­தி­களில் சமர்ப்­பித்­தி­ருந்தார். 1 முதல் 6 மற்றும் 8,9 ஆம் பிர­தி­வா­திகள் சார்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் கடந்த 2018 செப்­டம்பர் 10 ஆம் திக­தியும், 2020 மே 12 ஆம் திக­தியும் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. 7 ஆம் பிர­தி­வாதி ரிஷாத் பதி­யூ­தீ­ன் சார்பில் 2018 செப்­டம்பர் 4 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவை அனைத்­தையும் கருத்தில் கொண்டே தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சுற்­றுச்­சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள மனுவில், சுமார் 1500 உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த அக­தி­களின் (இடம்­பெ­யர்ந்தோர்) குடும்­பங்கள் சட்­டத்­திற்கு மாறாக கல்­லாறு சர­ணா­ல­யத்தில் சட்ட விரோ­த­மாக குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இத­னையும் ஆராய்ந்­தி­ருந்த நீதி­ப­திகள் குழாம், 1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வன பாது­காப்பு கட்­டளை சட்­டத்­தின்­படி எந்­த­வொரு நபரும் சட்­டத்­திற்கு முர­ணாக செயற்­ப­டவும், காடு­களை அகற்­றுதல், வீடுகள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் உரிமை இல்லை என அறி­வித்­தனர்.

எவ்­வா­றா­யினும் மீள்­கு­டி­யேற்றம், அபி­வி­ருத்தி மற்றும் பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­கான ஜனா­தி­பதி செய­லணி எடுத்த முடி­வு­களின் அடிப்­ப­டையில் உரிய முறையில் அதற்­கான நிலம் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ரிஷாத் பதி­யூ­தீ­ன் சார்பில் கூறப்­பட்­டி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும், அந்த விட­யத்தை உறு­திப்­ப­டுத்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தவ­றி­விட்­ட­தக 14 பக்­கங்­களைக் கொண்ட குறித்த தீர்ப்பில் கூறப்­பட்­டுள்­ளது.
உள் நாட்டில் இடம்­பெ­யர்ந்த அக­தி­களை மீளக் குடி­ய­மர்த்­து­வது அவ­சி­ய­மா­னது என சுட்­டிக்­காட்­டி­யுள்ள இந்த தீர்ப்பு, அவர்கள் சட்­டத்­துக்கு உட்­பட்டே மீள குடி­ய­மர்த்­தப்­பட வேண்டும் என குறிப்­பிட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள விட­ய­தா­னத்­துடன் தொடர்­பு­டைய மீள் குடி­யேற்றம் சட்­டத்­துக்கு அப்பால் சென்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது என அந்த தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே இந்த சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய முக்­கிய நப­ராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை அடை­யாளம் கண்­டுள்ள நீதி­ப­திகள் குழாம் கல்­லாறு பகு­தியில் தனிப்­பட்ட நிதியை பயன்­ப­டுத்தி மீள் மர நடுகை திட்­ட­மொன்றை மேற்­கொள்­ளு­மாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீ­னுக்கு உத்­தர்வு பிறப்­பித்­தி­ருந்­தது,

தீர்ப்பை சவா­லுக்கு உட்­ப­டுத்தி மேன் முறை­யீடு:
எவ்­வா­றா­யினும் பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­ல­யத்தில் காட்டை அழித்­தமை தொடர்பில் முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் பொறுப்புக் கூற வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ள நிலையில் அம்மனு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

அழிக்கப்பட்ட வனப்பகுதியை மீள உருவாக்க, ரிஷாத் பதியுதீன் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என, மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த தீர்ப்பானது சட்டத்துக்கு முரணானது எனவும், அத் தீர்ப்பை வலு விழக்கச் செய்யுமாறும் மேன் முறையீடு ஊடாக ரிஷத் பதியுதீன் கோரியுள்ளார்.

மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு உட்பட்ட விடயம் நடந்ததாக கூறப்படும் காலப்பகுதியில், தான் வீடமைப்பு அமைச்சரோ அல்லது வனப் பாதுகாப்பு அமைச்சராகவோ இருக்கவில்லை என விஷேட மேன் முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ள ரிஷாத் பதியுதீன், தான் காடழிப்பு மற்றும் மீள் குடியமர்த்தல் நடவடிக்கைகளை குறித்த பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கவில்லை எனவும், அவ்வாறு தான் செயற்பட்டமைக்கான எந்த சான்றுகளும் இல்லாத நிலையில் குறித்த மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.