ரமழான் விடுமுறையில் சென்ற 57 கபூரியா மாணவர்களை மீளவும் இணைக்கவில்லை

திணைக்களத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பவில்லை என குற்றச்சாட்டு

0 143

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கபூ­ரியா அர­புக்­கல்­லூரி அதனைத் தோற்­று­வித்­த­வர்­களின் விருப்­பத்­திற்கு ஏற்­பவும் அதன் உறு­தியில் கூறப்­பட்ட பிர­கா­ரமும் அப்­துல்­கபூர் அறக்­கட்­ட­ளையின் படியும் தொடர்ந்து அதன் சேவை­யினை சமூ­கத்­திற்கு வழங்கும் அதே­வேளை அதன் மாண­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து கல்­வி­யையும் உறுதி செய்யும் என நம்­பிக்­கை­யாளர் சபை அறி­வித்தல் வெளி­யிட்­ட­போதும் நோன்­பு­கால விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட 57 மாண­வர்கள் இது­வரை கல்­லூ­ரியில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. அவர்கள் தொடர்ந்தும் வீடு­க­ளிலே இருக்­கி­றார்கள் என கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்க செய­லாளர் ஐ.எல்.டில்சாத் மொஹமட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; மே மாத ஆரம்­பத்தில் கபூ­ரியா அர­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்­காகத் திறக்­கப்­பட்­டுள்­ளது என கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யாளர் சபை மக்­களின் பார்­வைக்கு பொய்­யான அறி­வித்­த­லொன்­றி­னையே வெளி­யிட்­டுள்­ளது. கல்­லூ­ரியின் மாண­வர்கள் விடு­மு­றையின் பின்பு இது­வரை கல்­லூ­ரியில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கல்­லூ­ரியின் நுழைவாயில் அவர்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

ரமழான் விடு­மு­றையின் பின்பு கடந்த மே மாதம் 9 ஆம் திகதி திரும்பி வந்த மாண­வர்கள் நிர்­வா­கத்­தினால் திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டார்கள் என்றும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே வேளை கல்­லூ­ரிக்கு மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டா­ததால் மாண­வர்­களும் பெற்­றோரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் முறைப்பாடுகள் செய்தும் அவை விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.