பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துவது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியுள்ளது

வக்பு சபை, திணைக்களம் தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்கிறார் ஹலீம்

0 586

(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆத் தொழுகை தொடர்­பி­லான சிக்­கல்கள் தலை­தூக்­கி­யுள்­ள­துடன் இதனால் பல்­வேறு சமூக பிரச்­சி­னைகள் எழு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்­துள்ளார்.
வக்பு சபை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஊடா­கவே இதற்கு உரிய முறையில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு சுமு­க­மான முறையில் தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற துறைசார் மேற்­பார்வை குழுக்­கூட்டம் இடம்­பெற்­றது. முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் தொடர்­பான குழுக்­கூட்டம் பௌத்­த­சா­சன, மத விவ­கா­ரங்கள் மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் இவ்­வி­வ­காரம் தொடர்பில் அமைச்­சரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தார்.

கொரோனா தொற்று காலத்தில் நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளிலும் ஜும்ஆத் தொழு­கைக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது. தற்­போது கொரோனா தொற்று கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு நிலைமை சுமு­க­ம­டைந்­துள்­ளது. இந்­நி­லையில், தொடர்ந்து சில பகு­தி­களில் ஜும்ஆ தொழு­கைக்­கான அனு­மதி பெறப்­ப­டாத பள்­ளி­களில் ஜும்ஆத் தொழுகை நடத்­தப்­ப­டு­கின்­றது. இதனால், பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­க­ளுக்­கி­டை­யே­யான பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன. மேலும், சமூக ரீதி­யி­லான பிள­வுகள் அதி­க­ரித்துச் செல்­கின்­றன.

இது­மாத்­தி­ர­மன்றி ஜும்ஆத் தொழுகை நடத்­து­வ­தற்கு ஏது­வான கார­ணங்கள் உள்ள பள்­ளி­வா­சல்­களும் இருக்­கின்­றன. குறித்த பள்­ளி­வா­சல்கள், மற்றும் பிர­தேச மக்­களில் நியா­ய­மான கார­ணிகள் புரிந்­து­கொள்­ளப்­பட வேண்டும்.

இந்த விடயம் தெடர்பில் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன இணைந்து முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து நிரந்­த­ர­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும்.

அத்­தோடு, சமூக மட்­டத்தில் இத­னுடன் தொடர்பு பட்ட பல்­வேறு அபிப்­பி­ராயம் இருக்­கி­றது. இது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­வ­துடன், பிராந்­திய முஸ்லிம் சமய, சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கு சிவில் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுடனும் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கெள்வதன் ஊடாக சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க மத விவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.