அரசியல் மாற்றங்கள் பயன்தர வேண்டும்

0 725

நாட்டின் அர­சி­யலில் தற்­போது அடிக்­கடி மாற்­றங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன. நேற்று நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்வில் ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி ஆளும் தரப்பில் அமர்ந்­தது.

இதே­வேளை இணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 21 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்சி ஆச­னங்­களில் அமர்ந்­தார்கள்.

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீ­ரவை எதிர்க்­கட்சி பிர­தம கொர­டா­வா­கவும் நிய­மித்­துள்­ள­தாக அறி­வித்தார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்­திக பண்­டாரநாயக்க, லக்ஷ்மன் சென­வி­ரத்ன, விஜித் விஜ­ய­முனி சொய்சா ஆகிய மூவரும் ஆளும் தரப்­புக்கு தாவியுள்ளமை நேற்­றைய முக்­கிய நிகழ்­வாகும்.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­னணி தேசிய அர­சாங்கம் ஒன்­றினை நிறு­வு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முடன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்­கான பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தி­யுள்ளார்.
தேசிய அர­சாங்கம் ஒன்­றினை அமைப்­ப­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் துணை­போ­கக்­கூ­டாது என ஜனா­தி­பதி கண்­டிப்­பான உத்­த­ரவும் பிறப்­பித்­துள்ளார்.

அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கா­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசிய அர­சாங்­க­மொன்­றினை கருத்­திற்­கொண்­டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தேசிய அர­சாங்­க­மொன்­றினை நிறு­வு­வ­தற்கு ஒத்­து­ழைத்தால் ஒன்­றுக்கு மேற்­பட்ட அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சு­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். இது சமூ­கத்­துக்கும் பயன்­தரும்.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் படி தனித்து ஒரு கட்சி ஆட்­சி­ய­மைத்தால் 30 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சு­க­ளையும் 40 பிர­தி­ய­மைச்சர், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளையும் பெற­மு­டியும். தேசிய அர­சாங்கம் ஒன்று அமை­யு­மாயின் 45 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் மற்றும் 30 பிர­தி­ய­மைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்­களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்­நி­லையில் தேசிய ஐக்­கிய முன்­னணி தேசிய அர­சாங்­க­மொன்­றினை நிறுவ முஸ்லிம் காங்­கி­ரஸின் உத­வியை நாடி­யுள்­ளமை அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­னது என பொது ஜன முன்­ன­ணியின் தவி­சாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

‘தேசிய அர­சாங்கம் ஒன்று எவ்­வாறு அமைய வேண்டும் என அர­சி­ய­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இரு வேறு­பட்ட கட்­சிகள் மாத்­தி­ரமே ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைக்க முடியும். எனவே ஐக்­கிய தேசிய முன்­னணி முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிட்டே வெற்­றி­பெற்­றது’ என ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மௌலானா அர­சி­ய­ல­மைப்பின் 46(4) மற்றும் 46(5) ஆகிய உறுப்­பு­ரை­க­ளுக்­க­மைய முஸ்லிம் காங்­கிரஸ் தேசிய அர­சாங்கம் நிறு­வு­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடியும் என்று தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கும் இடையில் இது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம் பெற்­ற­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தவி­சாளர் எம்.நயீமுல்லாஹ் என்போர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களின் நியமனத்துக்கு முன்பு இன்று தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.

திடீர் அரசியல் மாற்றங்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.