முதலீட்டாளர்களை துரத்தியடிக்காதீர்!

0 246

நீர் கொழும்பு – படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஒருவர் மீது சில வாரங்­க­ளுக்கு முன்னர் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை இன்று பல்­வே­று ­மட்­டத்தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இச் சம்­பவம், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான பாது­காப்­பின்­மையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளதால், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் இலங்கை மீதான நாட்­டத்தை குறைக்கச் செய்யும் அபா­யத்தை தோற்­று­வித்­துள்­ளது.

ஏற்­க­னவே நாடு பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சந்­தித்­தி­ருக்கும் நிலையில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை கவரும் விதத்தில் அர­சாங்கம் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. எனினும், அதனை சீர்­கு­லைக்கும் வகை­யி­லேயே ஹல்பே சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த சம்­ப­வத்­துடன், இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரை தொடர்­பு­ப­டுத்தி முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­க­ளா­னது அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச அரங்கில் அவ­நம்­பிக்­கை­யையே ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இது குறித்து நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்­றத்­திலும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

நளின் பண்­டார எம்.பி. பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில், “இந்த சம்­பவம் தொடர்­பாக இரா­ஜாங்க அமைச்சர் இந்­திக்க அநு­ருத்­த­வுக்கு எதி­ரா­கவே குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலஞ்சம் தொடர்­பான சம்­ப­வமே இந்த தாக்­கு­த­லுக்கு கார­ண­மாகும். கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்­பெற்ற சம்­ப­வமும் இலஞ்ச கலா­சா­ரமே கார­ண­மாகும். அதனால் மீண்டும் அந்த கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கி­றோமா? இவ்­வா­றான இரா­ஜாங்க அமைச்­சரின் செயற்­பா­டுகள் கார­ண­மாக முத­லீட்­டா­ளர்கள் நாட்­டுக்கு வரு­வ­தில்லை. அதனால் இரா­ஜாங்க அமைச்­சரை அந்த பத­வியில் இருந்து நீக்­கு­மாறு ஜனா­தி­ப­தியை கேட்­டுக்­கொள்­கிறோம்” என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளித்த நீதி­ய­மைச்சர், ஓமான் முத­லீட்­டாளர் மீதான தாக்­குதல் தொடர்பில் முறை­யான விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை என்றே அனை­வரும் தெரி­வித்­தி­ருந்­தனர். பொலி­ஸா­ரினால் முன்­வைக்­கப்­படும் அறிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே நீதி­மன்றம் செயற்­ப­டு­கி­றது. அதனால் இது­தொ­டர்­பாக பொலி­ஸுக்கு பொறுப்­பான அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யாடி இது தொடர்­பாக பூரண விசா­ரணை ஒன்றை நடத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இத­னி­டையே, ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் அல் உபை­தியை தொடர்ந்தும் பாது­காப்­பாக இலங்­கையில் வைத்­துக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. நேற்­று­முன்­தினம் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறித்த முத­லீட்­டா­ளரை சந்­தித்து பேசி­யி­ருந்தார். இதன்­போது, அவ­ருக்­கான பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என குறிப்­பிட்­டி­ருந்தார்.

குறித்த தொழிற்­சா­லையை கட்­டு­நா­யக்க முத­லீட்டு வல­யத்­திற்கு மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் தொழிற்­சாலை மூடப்­ப­ட­மாட்­டாது என்றும் தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சு என்­பன சர்­வ­தேச முத­லீ­டு­களை இலங்­கைக்கு கொண்­டு­வர பாடு­ப­டு­கின்­றன. குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் இது­வி­ட­ய­மாக பல்­வேறு பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வர்த்­தக கண்­காட்­சி­யொன்று ஒக்­டோபர் மாத இறு­தியில் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இவ்­வா­றான பின்­ன­ணியில், அரபு நாடு­களின் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தொந்­த­ர­வுகள் ஏற்­ப­டுத்­து­வ­தா­னது இலங்கை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள­மு­டி­யாத நிலைக்கே தள்­ளி­விடும். இது விட­யத்தில் அர­சாங்கம் மிகப்­பொ­றுப்­புடன் நடந்­து­கொள்ள வேண்டும் என்­ப­துடன், பொது­மக்­களும் தமது பொறுப்புக்களை உணர்ந்துகொள்ள வேண்டும். அத்தோடு, பேராசைபிடித்த அரசியல் குழுக்களின் குறுகிய மனநிலைகொண்ட இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் தாக்குதல் நடத்தியிருப்பது ஓமான் முதலீட்டாளர் மீது மாத்திரமல்ல, முழு இலங்கையிலுமுள்ள முதலீட்டாளர்கள் மீதே என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். முதலீட்டாளர்களைத் துரத்தியடிக்காது, இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளையே துரத்தியடிக்க வேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.