பலவந்த ஜனாஸா எரிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுமா?

0 211

ஏ.ஆர்.ஏ.பரீல்

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து இதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட வேண்டும் என முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஓட்­ட­மாவடி விஷேட மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கும், தகனம் செய்­யப்­பட்ட ஜனா­ஸாக்­களின் குடும்­பங்­க­ளுக்கும் உரிய நஷ்ட ஈட்­டினை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரி­யுள்­ளார்கள்.

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்­பான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த நிபுணர் குழுவின் ஒரு­சில பேரா­சி­ரி­யர்கள் தங்­களின் அறிவைப் பயன்­ப­டுத்தி மக்­களை பிழை­யாக வழி நடத்­தி­யுள்­ளனர் என்­பது தற்­போது உறு­தி­யா­கி­யுள்­ளது. நிபுணர் குழுவின் தவ­றான வழி­ந­டத்­தலை நானும் ஏற்­றுக்­கொள்­கிறேன் என சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தின்­போது இவ்­வாறு பதில் வழங்­கி­யி­ருந்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். மேலும் அவர், நிபுணர் குழுவின் பேரா­சி­ரி­யர்கள் சிலரது பிழை­யான வழி நடத்­த­லி­னாலே கொவிட் 19 வைரஸ் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரை நீண்ட தூரத்­தி­லுள்ள விஷேட மைய­வா­டியில் அடக்கம் செய்ய வேண்­டி­யேற்­பட்­டது. நிலத்­தடி நீரில் கொவிட் 19 வைரஸ் பரவும் என அவர்கள் அறிக்கை விட்­ட­த­னாலே இந்­நி­லைமை ஏற்­பட்­டது. குறிப்­பாக மெத்­திகா விதானகே என்ற பேரா­சி­ரி­யரைக் குறிப்­பி­டலாம். இவர்­களின் தீர்­மா­னத்­துடன் நான் இணங்கவில்லை எனவும் அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.
நிலத்­தடி நீரில் கொவிட் 19 வைரஸ் பரவும் என்ற தீர்­மானம் பிழை­யா­னது. நிபுணர் குழுவே இத்­தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டை­யிலே ஓட்­ட­மா­வ­டியில் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்­பது பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் உரிய நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை விடுத்­துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ‘கொவிட் 19 வைரஸ் நிலத்­தடி நீரின் ஊடாக பரவும் என்ற கருத்தை ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஒரு­வரே கொண்டு வந்தார். அத­ன­டிப்­ப­டை­யிலே கொவிட் 19 தொற்­றினால் இறந்த முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி பெளத்­தர்கள், இந்­துக்கள் மற்றும் கிறிஸ்­த­வர்கள் உட்­பட ஏனை­ய­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­வ­தற்­காக தூரப் பிர­தே­ச­மான ஓட்­ட­மா­வ­டிக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன. விஞ்­ஞான ரீதியில் நிரூ­பிக்­கப்­ப­டாத தீர்­மா­னமே இது. இன­வாத அடிப்­ப­டை­யிலே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது. எந்­த­வொரு வைரஸும் நீர் ஊடாகப் பர­வு­வ­தில்லை என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இன­வாத அதி­கா­ரி­களை, நிபு­ணர்­களை மாற்­று­மாறு நாம் அப்­போதே பல தட­வைகள் கூறி­யி­ருந்தோம்.

ஒருவர் இறந்தால் அவ­ருடன் இருக்கும் வைரஸ்­களும் இறக்கும் என இப்­போது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த விட­யத்தில் சில இன­வா­தி­களால் அரசு பிழை­யாக வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை இப்­போ­தா­வது அரசு ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அரசின் பிழை­யான தீர்­மானம் கார­ண­மாக, அக்­கா­ல­கட்­டத்தில் அதி­க­மான மக்கள் பாதிக்­கப்­பட்­டார்கள். மன அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தார்கள். தங்கள் உற­வு­களை அடக்கம் செய்­வ­தற்­காக பல்­வேறு துன்­பங்கள், பொரு­ளா­தார கஷ்­டத்­துக்கு மத்­தியில் தொலை­தூரம் எடுத்­துச்­சென்­றார்கள்.

நாம் இப் பிரச்­சி­னை­களை அப்­போ­தைய சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்­சிக்குத் தெரி­வித்தோம். அவர் எமது கோரிக்­கை­களை கொவிட் 19 நிபுணர் குழு­விற்கு பாரப்­ப­டுத்­தினார். நிபுணர் குழுவை அரசே தெரிவு செய்­தி­ருந்­தது. அவர்கள் இன­வாத அடிப்­ப­டை­யிலே செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தார்கள். அதனால் இவர்­களை மாற்­று­மாறு நாம் அமைச்­சரைக் கோரினோம். ஆனால் அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.
இத­னுடன் தொடர்­பு­பட்ட நிபு­ணர்கள் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும். ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். அவர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றார்.

ரிசாத் பதி­யூதீன் எம்.பி.
‘கொவிட் 19 வைரஸ் தொற்­றுநோய் தொடர்­பான துறைசார் நிபுணர் குழுவில் இன­வா­தமே மேலோங்­கி­யி­ருந்­தது.முஸ்லிம் ஜனா­ஸாக்கள் மார்க்க விதி­களின் படி அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தே­யன்றி தகனம் செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஆனால் முஸ்­லிம்­களைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே ஜனா­ஸாக்­களை எரித்­தார்கள். பின்பு முஸ்லிம் நாடு­களின் அழுத்­தங்­க­ளை­ய­டுத்து ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்­தார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யூதீன் எம்.பி. தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், இந்த பிழை­யான தீர்­மா­னத்­துக்கு துணை­போ­ன­வர்கள் அனை­வரும் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இது தொடர்பில் விசா­ரணை நடாத்­து­வ­தற்கு அர­சு கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும்.

அத்­தோடு இன­வாத பிழை­யான தீர்­மா­னத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப அங்­கத்­த­வர்­க­ளுக்கு உரிய நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும். இந்தத் தீர்­மா­னத்தின் பின்­ன­ணி­யிலும் அர­சி­யலும் செல்­வாக்குச் செலுத்­தி­யி­ருந்­ததை நாம் கண்டோம். இவ்­வி­ட­யத்தில் அரசு தாம­த­மின்றி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றார்.

இரா­ஜாங்க அமைச்சர்
காதர் மஸ்தான்
கொவிட் 19 நிபு­ணர்­குழு பிழை­யான தீர்­மானம் எடுத்­தி­ருந்­ததை மன்­னிக்­கவே முடி­யாது. கொவிட் 19 வைரஸ் தொற்­றுக்­கா­லத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்கே பாரிய அச்­சு­றுத்தல் இருந்­தது. முஸ்லிம் சமூ­கமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. எனவே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது விட­யத்தில் ஒரு­மித்து நீதிக்­காக குரல் கொடுக்க வேண்டும். நிபு­ணத்­துவ குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ளது என்­பதை உரிய ஆவ­ணங்கள் மூலம் நிரூ­பித்து அதி­க­பட்ச நஷ்ட ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுக்க முயற்­சிக்க வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார சிறு­தா­னி­யங்கள் பயிர்ச்­செய்கை ஊக்­கு­விப்பு இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரி­வித்தார்.

ஜனா­ஸாக்கள் தூர இடத்தில் ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டதால் ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்கள் துஆ பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு அங்கு செல்­வ­தற்கும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். அவர்கள் மன உளைச்­சல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளதை எம்மால் மறுக்க முடி­யாது. பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றார்.

எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.
கொவிட் 19 நிபுணர் குழுவின் பிழை­யான தீர்­மா­னத்­தினால் முஸ்லிம் சமூ­கமே பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. பின்பு ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இவ்­வா­றான தவ­றான தீர்­மா­னங்­களை எடுத்த துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அவர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­களில் விரும்­பு­ப­வர்­க­ளுக்கு அர­சாங்கம் நஷ்­ட­ஈடு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். நிபு­ணர்­கு­ழுவில் இரு முஸ்­லிம்கள் இருந்­தாலும் அவர்­க­ளது எதிர்ப்­புக்கு மத்­தி­யிலேயே பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் விருப்­பப்­படி தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. இதில் ஜீ.எம்.ஓ.ஏ. உம் விடாப்பிடியாக இருந்தது. இவ்­வா­றான தீர்­மானம் எந்தப் பின்­ன­ணியில் மேற்­கொள்­ளப்­பட்­டது என அறிய ஆணைக்­கு­ழு­வொன்று நியமிக்கப்படவேண்டும்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் சமூகத்தின் பாரிய எதிர்ப்புகளுககு மத்தியிலே தகனம் செய்யப்பட்டது. இதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரணையின் பின்பு தண்டிக்கப்படவேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர்
பைஸர் முஸ்தபா
‘முஸ்­லிம்­களின் கண்­ணீ­ருக்கு மத்­தி­யிலே கொவிட் 19 ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­பட்­டன. இதற்குப் பொறுப்­பா­ன­வர்கள் நிபுணர் குழுவின் துறைசார் உய­ர­தி­கா­ரி­களே. இத்­தீர்­மானம் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு தவ­றி­ழைத்­தவர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வதுன் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தொரி­வித்தார்.
‘முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட பிழை­யான தீர்­மா­னத்­துக்­காக பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் சமூகத்திடம் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.