பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் உண்மை முகம்

0 478

ஏ.ஆர்.ஏ.பரீல்

பல தசாப்த கால­மாக நாட்டில் அமுலில் இருந்­து­வரும் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் முழு­மை­யாக இரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்குப் பதி­லாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்ட மூல­மொன்­றினை நிறை­வேற்றிக் கொள்ள அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயலில் இறங்­கி­யுள்­ளது.

நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தை திருத்தம் செய்­வ­தற்குப் பதி­லாக தேசிய பாது­காப்­பினை முதன்­மைப்­ப­டுத்தி புதிய சட்டம் ஒன்று உள்­வாங்­கப்­பட வேண்டும் என பல்­வேறு தரப்­பினர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள். இதற்­க­மை­வா­கவே பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் முழு­மை­யாக இரத்துச் செய்­யப்­ப­ட­வுள்­ளது என பிர­தமர் தினேஷ் குண­வர்­தன அறி­வித்­துள்ளார். ஆனால் புதிய சட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று பல்­வேறு தரப்­பினர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள் என்று தெரி­வித்­தாலும் அந்த தரப்­பினர் யார் எனத் தெரி­விக்­க­வில்லை.

பயங்­க­ர­வாத எதிர்ப்பு என்ற தலைப்­பி­லான சட்­ட­மூலம் 2023 மார்ச் 17ஆம் திகதி அர­சாங்க வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்ட சட்­ட­மாக முன்­வைக்­கப்­பட்­டாலும் அத்­தி­யாயம் 12இன் அடிப்­ப­டையில் உண்­மையில் ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் மறு­சீ­ர­மைப்பின் திருத்­தத்­திற்கு சம­மா­ன­தாகும்.

புதி­தாக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­லத்தின் அடிப்­படைக் கட்­ட­மைப்பு மற்றும் கருத்­தியல் கட்­ட­மைப்­பா­னது அர­சியல் அமைப்பின் 82 (1) ஆவது பிரிவில் விப­ரிக்­கப்­பட்­டுள்ள மறை­மு­க­மான இரத்து அல்­லது சேர்த்தல் அல்­லது அதன் விளை­வான திருத்தம் ஆகும்.

2023 ஆம் ஆண்டின் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூலம் அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வ­தற்­கான நோக்கம் என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அத்­தோடு அதன் தலைப்பு அர­சி­ய­ல­மைப்பை இரத்துச் செய்­வ­தற்கும் மாற்­று­வ­தற்கும் எந்த நேரடி நோக்­கத்­தையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை என்­றாலும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் 1978ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பின் கருத்­தியல் கட்­ட­மைப்பு மற்றும் கட்­ட­மைப்பின் அடிப்­ப­டை­யான சாரத்­தையே மாற்றும் என அர­சியல் ஆய்­வா­ளர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

ஜனா­தி­பதி மக்­களின் வாழ்க்­கையை கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரங்­களை பெறு­கிறார்
இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு மக்­களின் இறை­மையின் அடிப்­படைக் கருத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 3 பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது. ‘இலங்கைக் குடி­ய­ரசில் இறைமை மக்­க­ளிடம் உள்­ளது. மற்றும் அதன் பிரிக்க முடி­யாத இறைமை என்­பது அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்கள் அடிப்­படை உரி­மைகள் மற்றும் உரி­மையை உள்­ள­டக்­கி­யது.

அத்­தோடு சட்­டப்­பி­ரிவு 4(ஏ), 4(பி) மற்றும் 4(சி) யில் பாரா­ளு­மன்றம் நிறை­வேற்று அதி­காரம் மற்றும் நீதித்­துறை ஆகி­ய­ன­வற்றின் மூலம் மக்­களின் இறை­மையை எவ்­வாறு செயற்­ப­டுத்­து­வது என்­பது பற்றி குறிப்­பிட்டுள்­ளது. 4(டி) மற்றும் 4(ஈ) யில் இலங்கை அர­சியல் அமைப்பில் பொதிந்­துள்ள இறை­யாண்மைக் கருத்தின் ஒரு அங்­க­மாக அடிப்­படை உரி­மைகள் மற்றும் உரி­மைகள் உள்­ளன.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் இந்த நிலைப்­பாட்டை மிக அடிப்­ப­டை­யான முறையில் மாற்­று­வதை நோக்­க­மா­கக்­கொண்­டுள்­ளது என அர­சியல் ஆய்­வாளர் பசில் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார்.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் பரப்­பப்­பட்ட பல விதி­களின் ஊடாக ஜனா­தி­பதி நேர­டி­யாக மக்­களின் இறை­மையைப் பயன்­ப­டுத்­துதல் மற்றும் அர­சி­ய­ல­மைப்பில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு உறுப்­பு­களைப் பயன்­ப­டுத்­துதல் தொடர்­பான விட­யங்­களில் மக்­களின் வாழ்க்­கையைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரங்­களைப் பெறு­கிறார். பாரா­ளு­மன்றம் மற்றும் நீதித்­துறை போன்­றவை மக்­களின் இறைமை அதி­கா­ரத்தின் ஒரு பகு­தி­யாக தங்கள் செயற்­பா­டு­களைப் பயன்­ப­டுத்­து­கின்­றன. இதனால் வாக்­கு­ரிமை மற்றும் மக்­களின் உரி­மை­களைத் தாக்­கு­வ­தற்கு கிட்­டத்­தட்ட வழி­வ­குக்­கி­றது.
பிரிவு 35(1) இன் கீழ் எந்­த­வொரு நபரும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்கும் போது அவ­ரு­டைய உத்­தி­யோ­க­பூர்வ அல்­லது தனிப்­பட்ட ரீதியில் அவர் செய்த அல்­லது செய்யத் தவ­றிய எதற்கும் அவ­ருக்கு எதி­ராக எந்­த­வொரு நீதி­மன்­றத்­திலோ வழக்குத் தொட­ரக்­கூ­டாது.

பல்­வேறு அமைச்­சுக்கள், அரச அமைப்­புகள் மற்றும் ஏனைய அதி­கா­ரி­களால் தற்­போது செயற்­ப­டுத்­தப்­படும் ஏரா­ள­மான செயற்­பா­டுகள் ஜனா­தி­ப­தியால் நேர­டி­யாக அவ­ரது கட்­டுப்­பாட்டின் கீழ் எடுக்­கப்­ப­டு­கின்­றன. எந்­த­வொரு விட­யத்­தையும் செய்யத் தவ­றினால் அல்­லது பிழை­யாக செய்தால் அதன் மூலம் எழக்­கூ­டிய எந்­த­வொரு விட­யத்­திலும் தற்­போது நீதி­மன்­றத்தை நாடு­வ­தற்­கான பிர­ஜையின் உரிமை பறிக்­கப்­பட வேண்டும் என்­பதை இது குறிக்­கி­றது.

அதனால் கைது, தடுப்புக் காவல், விசா­ரணை மற்றும் பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய மிக முக்­கி­ய­மான விட­யங்­களில் நீதி­மன்­றத்தின் முன் இந்த விட­யத்­தினை எடுத்துக் கொள்­வ­தற்­கான உரி­மையை பொது­மக்கள் இழக்க நேரிடும். இந்த செயல்­களில் ஏதேனும் சட்­ட­பூர்­வ­மா­னது மற்றும் சட்ட விரோ­த­மா­னது என்­பது பொருத்­த­மற்ற விட­ய­மாக இருக்கும்.

இது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை மட்­டு­மல்­லாமல் தாரா­ள­வாத ஜன­நா­ய­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாக கூறும் குடி­ய­ரசின் எந்தவொரு அர­சி­ய­ல­மைப்பும் மீறும் அடிப்­படை மீற­லாகும். அதனால் இச்­சட்­ட­மூலம் சட்­ட­மாக மாறி­யதும் ஜன­நா­யக கட்­ட­மைப்பின் கீழ் பிர­ஜைகள் பெற்­றி­ருக்கும் பாது­காப்பை பெரு­ம­ளவில் இழக்க நேரிடும்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத சட்­ட­மூ­லத்தின் மூலம் ஜனா­தி­பதி பெற்றுக் கொள்ளும் அதி­கா­ரங்­களின் விரி­வாக்கம் 1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அதன் விதி­களின் செயற்­பாட்டை தானா­கவே முடி­வுக்குக் கொண்­டு­வரும்.

‘பயங்­க­ர­வாத எதிர்ப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பல விட­யங்­களை ஜனா­தி­ப­தியே கையாள்வார். தேர்­தலை நடத்­து­வது அல்­லது நடத்­தாமல் இருப்­பது அமை­தி­யான போராட்­டங்­களை நடத்­து­வ­தற்­கான உரிமை. அமை­தி­யாக ஒன்­று­கூடும் உரிமை, பத்­தி­ரிகை சுதந்­திரம், சட்­ட­வி­ரோத கைது, சட்­ட­வி­ரோ­த­மாக தடுப்புக் காவலில் வைப்­பது போன்ற விட­யங்­களில் இச்­சட்ட மூலம் அமு­லுக்கு வந்தால் தனி நபர் சுதந்­திரம் இழக்­கப்­படும். இவ்­வி­ட­யங்கள் தொடர்­பான பாரா­ளு­மன்­றத்தின் அனைத்து மேற்­பார்வை செயற்­பா­டு­களும் ஜனா­தி­ப­தியால் நேர­டி­யாகக் கட்­டுப்­ப­டுத்­தப்­படும்.

முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் இலங்­கையின் குற்­ற­வியல் நடை­முறைக் கோவையை முற்­றி­லு­மாகப் புறக்­க­ணித்து, பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு இணை­யான குற்­ற­வியல் நடை­முறை முறை­மையை நிறுவ முயற்­சிப்­ப­தாகும். இவ்­வாறு இலங்­கையில் இரண்டு வகை­யான குற்­ற­வியல் நடை­மு­றைகள் நிறு­வப்­படும். குற்­ற­வியல் நடை­முறைக் கோவையைப் பின்­பற்றி தங்கள் கட­மை­களை மேற்­கொள்ளும் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அனைத்து அதி­கா­ரங்­களும், பொது­மக்­க­ளுக்­கான அனைத்துப் பாது­காப்பும் இச்­சட்­டத்தின் கீழ் ஜனா­தி­ப­தியால் அல்­லது பொலிஸ்மா அதிபர் ஊடாக ஜனா­தி­ப­தியால் பறிக்­கப்­படும்.

பிர­தமர் தினேஷ் குண­வர்­தன
முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாட்டில் அர­சியல் கட்­சிகள், சமூக அமைப்­புகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் மத்­தியில் எதிர்­அ­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. பலத்த கண்­ட­னங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அரச தரப்­பினைச் சேர்ந்­த­வர்கள் சிலர் இச்­சட்ட மூலத்தை நியா­யப்­ப­டுத்தும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளனர். பலர் வாய் மூடி மெள­னி­க­ளாக இருக்­கின்­றனர்.

இந்­நி­லையில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கருத்­து­களைப் பெற்று அவற்­றுக்கு மதிப்­ப­ளித்து இயற்­றப்­படும். அவ­ச­ர­மாக நிறை­வேற்றும் நோக்கம் அர­சாங்­கத்­துக்கு கிடை­யாது என்று நீதியமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் முழு­மை­யாக இரத்துச் செய்­யப்­படும். இதற்குப் பதி­லா­கவே பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் இயற்­றப்­ப­ட­வுள்­ளது. இச்­சட்­ட­மூலம் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. பல்­வேறு தரப்­பினர் இச்­சட்­ட­மூ­லத்தின் சாதக, பாத­கங்­களை விமர்­சித்­துள்­ளார்கள். இந்­நி­லையில் அர­சியல் மற்றும் சிவில் தரப்­பி­ன­ரது கருத்­து­க­ளுக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கும் மதிப்­ப­ளித்து புதிய சட்டம் இயற்­றப்­படும்.

இம்­மாதம் 3ஆம் வாரத்தில் இடம்­பெறும் பாரா­ளு­மன்ற கூட்டத் தொட­ரின்­போது உத்­தேச சட்­ட­மூல வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். இச்­சட்­டத்தை அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிக்­கொள்ளும் நோக்கம் அர­சாங்­கத்­துக்கு இல்லை. முறை­யான வழி­மு­றை­க­ளுக்கு அமை­யவே சட்டம் இயற்­றப்­ப­டும்­ என்று தெரி­வித்­துள்ளார்.

அவ­ச­ர­மாக நிறை­வேற்ற முயற்சி
புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­லத்தை அவ­ச­ர­மாக நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. இது நாட்டின் எதிர்­கா­லத்­திற்கும் நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மைக்கும் அடிப்­படை உரி­மைக்கும் பாரிய அச்­சு­றுத்­த­லாகும் என ஐக்­கிய மக்கள் சக்தி தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார எதிர்க்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாடு ஒன்­றிலே இவ்­வாறு கூறி­யுள்ளார்.
‘இச்­சட்­டத்தை அவ­ச­ர­மாக நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ளது. இச்­சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருப்­பதன் நோக்கம் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவா? தேசிய பாது­காப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்­டா? அல்­லது அர­சாங்­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கா­கவா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், தொழிற்­சங்க நட­வ­டிக்­கைகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களை முடக்­கு­வ­தற்­கா­கவே அர­சாங்கம் இச்­சட்­ட­மூ­லத்தை முன்­வைத்­துள்­ளது. நியா­ய­மான தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களைப் போன்று நியா­ய­மற்ற தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வா­றா­யினும் இவற்றை சட்டம் ஒன்றின் ஊடாக அடக்க முயற்­சிப்­பது ஜன­நா­ய­கத்தை மீறும் செய­லாகும். அர­சாங்கம் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டி­ருக்­க­வேண்­டிய சந்­தர்ப்­பங்­களில் அதனை உதா­சீ­னப்­ப­டுத்­தி­யது என்றார்.

நாட்டில் தற்­போது அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லினை அடுத்து அமுல்­ப­டுத்­தப்­பட்ட விதம் குறித்து நாம் அறிவோம். இச்­சட்­டத்தின் மூலம் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சிலரைத் தவிர்த்து பெரும் எண்­ணிக்­கை­யானோர் அப்­பா­வி­களே கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் வரு­டக்­க­ணக்கில் சிறை­க­ளிலும் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலையில் அச்­சட்­டத்தை முழு­மை­யாக இரத்துச் செய்­து­விட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் அத­னிலும் கொடு­மை­யான சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்ளும் தேவை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக உரி­மைகள், அடிப்­படை மனித உரி­மைகள், அடக்­கு­முறை என்­ப­ன­வற்­றுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டுவோர் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் வகை­யிலே இப்­பு­திய சட்­ட­மூலம் அமைந்­துள்­ளது.

இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பி.
பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள், பேர­ணி­க­ளுக்கு தடை­வி­திக்கும் அதி­காரம் பிர­தேச சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனால் நாட்டை பொலிஸ் ராஜ்­ய­மாக மாற்றும் ஆபத்து உள்­ளது. புதிய சட்ட மூலம் விஷம் கலந்த ஐஸ்­கிரீம் ஆக இருக்­குமா? என்­பதை கவ­ன­மாக ஆராய வேண்­டிய பொறுப்பு நாட்டு மக்­க­ளுக்கு உள்­ளது என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் குறிப்­பிட்­டுள்ளார்.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அறிக்­கையில் மேலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­துக்கு சர்­வ­தேச ஜன­நா­யக அமைப்­புகள் மற்றும் உலக நாடு­க­ளி­ட­மி­ருந்து கடு­மை­யான எதிர்ப்பு வெளி­யா­கி­ய­தை­ய­டுத்தே இதற்குப் பதி­லாக புதிய சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் முன்­மொ­ழிந்­துள்­ளது.

தேர்தல் மூலம் மக்­களின் கருத்து வெளிப்­ப­டு­வ­தற்­கான வழி­களை மூடு­வ­தற்கு பல சூழ்ச்­சிகள் நடை­பெற்­று­வரும் இன்­றைய சூழலில் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மக்­களின் கருத்­துகள் வெளிப்­படும் ஏனைய வழி­க­ளையும் மூடு­வ­தற்கு முயற்­சிப்­ப­தா­கவே இச்­சட்ட மூலத்தின் ஷரத்­துகள் அமைந்­துள்­ளன.

மேலும் அன்று முதல் இன்று வரை அர­சாங்கம் பல தட­வைகள் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தை குறு­கிய அர­சியல் இலா­பத்­துக்­காக மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. இச்­சட்­டத்தின் மூலம் சமூக ஆர்­வ­லர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், பொதுக் கூட்­டங்கள் பேர­ணி­களைத் தடுக்கும் அதி­காரம் நீதி­மன்­றுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய சட்­டத்தில் இவ்­வ­தி­காரம் பிர­தேச சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த ஷரத்து நாட்டை பொலிஸ் இராச்­சி­ய­மாக மாற்­று­வ­தாக அமைந்­துள்­ளது. இச்­சட்­ட­மூலம் ‘தேசிய பாது­காப்பு தொடர்­பாக’ என அழ­கிய வார்த்­தை­களால் அலங்­க­ரிக்­கப்­பட்­டாலும் குறு­கிய அர­சியல் நோக்கில் ஜன­நா­ய­கத்தை அடக்­கு­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­படும் விஷம் கலந்த ஐஸ்­கிரீம் ஆக இருக்­குமா என்­பதை கவனமாக அலசி ஆராய வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி இராஜாங்க அமைச்சர்
ஜனநாயக போராட்டத்தை முடக்கும் ஏற்பாடுகள் காணப்படுமாயின் எவரும் சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியும் என்று நீதி இராஜாங்ன அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜன­நா­ய­கத்தை முடக்கும் வகையில் உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது எனக் குறிப்­பி­டு­வது அடிப்­ப­டை­யற்­ற­தாகும். கடந்த வருடம், நாட்டில் ஜன­நா­யக போராட்டம் என்று கூறிக்­கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டங்கள் உண்­மையில் ஜன­நா­யக போராட்டம் தானா? என்­பதை ஆராய வேண்டும். ஜன­நா­யக மற்றும் அடிப்­படை உரி­மை­களை முடக்கும் நோக்கம் உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு கிடை­யாது. அவ்­வா­றான ஏற்­பா­டுகள் எதுவும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.