சி.ஐ.டி.யின் தேவைக்­காக ஹிஜா­ஸுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கப்­ப­டு­கின்­றதா?

0 1,272

சட்டத்தரணி ஒருவரின் சேவையைப் பெற பணம் கூட இருக்காத நிலையில் சி.ஐ.டி.யினரே சட்டத்தரணி ஒருவரையும் நியமித்ததாக குறுக்கு விசாரணைகளில் 2ஆவது சாட்சியாளர் தெரிவிப்பு; முதல் சாட்சியாளர் மலிக்குடன் பேசிய பின்னர் ஹிஜாஸ் தொடர்பில் ஞாபகப்படுத்தி புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்ததாகவும் தெரிவிப்பு

எம்.எப்.அய்னா

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 2 ஆவது சாட்­சி­யாளர், புத்­தளம், அல் சுஹை­ரியா மத்ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தேவைக்­காக பொய்­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தாக , பிர­தி­வா­திகள் தரப்­பினர் சார்பில் நீதி­மன்றில் குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது.

கடந்த வாரமும், இவ்­வா­ரத்தின் ஆரம்­பத்­திலும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்த வழக்கு விசா­ர­ணை­களின் இடையே, இந்த விடயம் பிர­தி­வாதி தரப்பின் சட்­டத்­த­ர­ணியால் மன்றில் வெளி­ப்படுத்­தப்பட்­டது.

உயிர்த்­த ­ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு கடந்த 24 ஆம் திகதி முதல் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.
குறித்த தினங்­களில், பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில் , ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான நலிந்த இந்­ர­திஸ்ஸ, பர்மான் காசிம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

2 ஆம் பிர­தி­வா­தி­யான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹபீல் பாரிஸ், தனுஷன் கணே­ச­யோகன் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

இவ்­வ­ழக்­கினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விஷே­ட­மாக மேற்­பார்வை செய்யும் நிலையில் அதற்­காக பிரத்­தி­யேக சட்­டத்­த­ர­ணிகள் குழாம் ஆஜ­ரா­னது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் முதல் நாளில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவும் 2 ஆவது நாளில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்­வா­வுடன் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவும் ஆஜ­ரா­கினர்.

அத்­துடன் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை கண்­கா­ணிக்க ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள் நீதி­மன்றில் பிர­சன்­ன­ம­ாகி­யி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதிநிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடைச் சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்த­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரா­கவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி நடந்த விசா­ர­ணை­களின் போது 2 ஆம் சாட்­சி­யா­ள­ராக அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் முன்னாள் மாண­வ­னான, 19 வய­து­டைய மொஹம்மட் பெளஸான் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவ­ரது சாட்­சி­யத்தை அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம நெறிப்­ப­டுத்­திய நிலையில் அவ­ருக்கு தமிழ் மொழி பெயர்ப்பு வச­தியும் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டது.

இத­னை­விட குறித்த வழக்கு விசா­ரணை நடைபெற்ற தினம் நோன்பு மற்றும் வெள்ளிக் கிழமை என்­பதால், விஷே­ட­மாக 12 மணி முதல் ஒன்­றரை மணி நேரம் ஜும் ஆ தொழு­கைக்­காக புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­ட­வினால் நிறுத்­தப்­பட்­டமை விஷேட அம்­ச­மாகும்.

இந் நிலையில் அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவின் நெறிப்­ப­டுத்­தலில் சாட்­சி­ய­ம­ளித்த மொஹம்மட் பெளஸான், தான் 2018 ஆம் ஆண்டு அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவில் இணைந்­த­தாக, தனது தாயின் மரணத் திக­தியை ஞாப­கப்­ப­டுத்­திக்­கொண்டு தெரி­வித்தார்.

தனது ஊரான குரு­ணாகல் – நாரம்­மல, சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவை – மதீனா தேசிய பாட­சா­லையில் 9 ஆம் வகுப்பில் கற்­றுக்­கொண்­டி­ருந்த போது இவ்­வாறு அல் சுஹை­ரியா மத்­ர­சா­வுக்கு சென்­ற­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். தனது மச்சான் ஊடாக மத்­ர­ஸா­வுக்­கான அறி­முகம் கிடைத்­த­தா­கவும், தனது ஊரி­லி­ருந்து கொழும்­புக்கு சென்று அங்கு ரிகாஸ் ஹாஜியார் ஊடா­கவே அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவில் இணைந்­த­தா­கவும், அப்­போது ரிகாஸ் ஹாஜியார் கொழும்பு பகு­தியில் இருந்த மேலும் சில மாண­வர்­க­ளையும் சேர்த்து குறித்த மத்­ர­ஸா­வுக்கு அழைத்து சென்­ற­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.
மத்­ர­ஸாவின் ஹிப்ழ் பிரிவில் தான் குர் ஆன் மனனம் செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தா­கவும் சாட்­சி­யாளர் கூறினார்.

மத்­ர­ஸாவின் அன்­றாட நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் சாட்­சி­ய­ம­ளித்த அவர், தனது மத்­ர­ஸாவின் அதி­ப­ராக வழக்கின் 2 ஆவது பிர­தி­வாதி சகீல் மெள­லவி கட­மை­யாற்­றி­ய­தாக கூறி அவரை அடை­யாளம் காட்­டினார்.

இத­னை­விட, தான் மத்­ர­ஸாவில் இருந்த காலப்­ப­கு­தியில், அங்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக கரு­தப்­படும் மொஹம்மட் சஹ்ரான் மற்றும் ரிழ்வான் அல்­லது ரிஸ்வான் எனும் பெயரில் அறி­யப்­படும் ஒரு­வரும் வந்­த­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் சாரா ஜெஸ்மின் மற்றும் பாத்­திமா ஜிப்­றியா எனும் இரு பெண்­களும் அங்கு பிறி­தொரு தினத்தில் வந்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

சஹ்ரான், ரில்வான் அல்­லது ரிஸ்வான் ஆகியோர், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல் கள் மீது கிறிஸ்­த­வர்கள் தாக்­குதல் நடாத்­து­வ­தா­கவும் அதற்கு பதி­ல­டி­யாக குண்டுத் தாக்­குதல் நடாத்த வேண்டும் எனக் கூறி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். அதனால் அச்­ச­ம­டைந்து தான் மத்­ர­ஸாவில் இருந்து யாருக்கும் தெரி­யாமல் பல­முறை வீட்­டுக்கு ‘பாய்ந்து’ சென்­ற­தாக சாட்­சி­யாளர் கூறினார்.

எவ்­வா­றா­யினும் சாரா மற்றும் ஜிப்­றியா ஆகியோர், சில பயிற்சி நட­வ­டிக்­கை­க­ளையும் விளை­யாட்­டுக்­க­ளை­யுமே சொல்லித் தந்­த­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.
இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளிக்கும் இடை நடுவே, சாட்­சி­யாளர் பயந்து பயந்து சாட்­சி­ய­ம­ளிப்­பதை நீதி­மன்றம் அவ­தா­னித்து, அவ­ரிடம் அது குறித்து வின­வி­யி­ருந்­தது.

தான் பிழை­யாக ஏதா­வது கூறினால், தன்னை சிறைப்­ப­டுத்­தி­வி­டு­வார்­களோ என்ற பயத்தில் அவ்­வாறு அச்­சத்­துடன் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.
பிறி­தொரு சந்­தர்ப்­பத்­திலும் அவ்­வாறு அச்­சத்­துடன் சாட்­சி­ய­ம­ளிப்­பது குறித்து நீதி­பதி வின­விய போது, தனக்கோ அல்­லது குடும்­பத்­தா­ருக்கோ ஏதும் ஆபத்து விளை­விக்­கப்­ப­டுமோ என அஞ்­சு­வ­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் சட்ட மா அதிபர் சார்பில் நேர­டி­யாக சில தற்­கொலை குண்­டு­தா­ரி­களின் பெயர்­களைக் கூறி தெரி­யுமா என வின­வப்­பட்­டது. எனினும் அவர்­களை தெரி­யாது என சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

இறு­தி­யாக, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஒரு நாள் அல் சுஹை­ரியா மத்­ர­ஸா­வுக்கு வந்­த­தா­கவும், அந்த தினத்தில் 3 அல்­லது நான்கு தட­வைகள் அவரைக் கண்­ட­தா­கவும் அப்­போது அவர் அதி­ப­ருடன் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

எனினும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், ஏதும் போத­னைகள் செய்­த­தா­கவோ ஏதும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தா­கவோ சாட்­சி­ய­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை.

இந் நிலையில் இரண்டாம் நாள் விசா­ர­ணையின் போது சாட்­சி­யாளர் மொஹம்மட் பெள­சா­னிடம், கடந்த திங்­க­ளன்று, முதல் பிர­தி­வாதி சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் சார்பில் குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது. ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

சி.ஐ.டி. குழு­வினர் தனது வீட்­டுக்கு வந்து தன்­னுடன் மத்­ரஸாவில் படித்த மாண­வர்­களின் புகைப்­ப­டங்­களைக் காட்டி விசா­ரித்­த­தா­கவும், அதனைத் தொடர்ந்தே தான் மத்­ர­ஸாவில் நடந்­த­வற்றை அவர்­க­ளுக்கு கூறி­ய­தா­கவும் குறுக்கு விசா­ர­ணை­க­ளி­டையே சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

சி.ஐ.டி.யினர் தன்னை அவர்­க­ளது ஜீப்பில் சகோ­த­ர­னுடன் சேர்த்து கொழும்­புக்கு அழைத்து சென்று முதல் வாக்கு மூலத்தை பதிவு செய்­த­தா­கவும், வாக்கு மூலத்தை பதிவு செய்ய முன்னர் சில புகைப்­ப­டங்­களை காட்­டி­ய­தா­கவும் சாட்­சி­யாளர் கூறினார்.
முதலில் தனது வாக்கு மூலத்தை கையி னால் எழு­திக்­கொண்­ட­தா­கவும் பின்னர் தட்­டெ­ழுத்து செய்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் நீதி­மன்ற வழக்­கா­வ­ணத்தில் தட்­டெ­ழுத்து செய்­யப்­பட்ட பிரதி மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் குறித்த தினத்தின் இறு­தியில் பிர­தி­வா­திகள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்­ஸவும், சமிந்த அத்­து­கோ­ர­ளவும் முன் வைத்த கோரிக்­கைக்கு அமைய, கையெ­ழுத்­தினால் எழு­தப்­பட்ட வாக்கு மூலம் இருப்பின் அது தொடர்பில் நீதி­மன்­றுக்கு அறிக்­கை­யிட குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட உத்­த­ர­விட்டார்.

இந் நிலையில் குறுக்கு விசா­ர­ணை­களின் போது சாட்­சி­ய­ம­ளித்த சாட்­சி­யாளர், சி.ஐ.டி.யினர் தன்­னிடம் புகைப்­ப­டங்­களைக் காட்­டு­வ­தற்கு முன்னர் சுயா­தீ­ன­மாக தான் எத­னையும் அவர்­க­ளுக்கு கூற­வில்லை என தெரி­வித்தார்.

இத­னை­விட, தான் ஒரு போதும் கோராத நிலையில், நீதி­மன்­றுக்கு செல்ல பய­மாக உள்­ளது என கூறிய நிலையில், கோட்டை நீதிவான் முன்­னி­லையில் வாக்கு மூலம் அளிக்க சி.ஐ.டி.யினர் தன்னை அழைத்து சென்­ற­தாக சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

தனது வீட்­டுக்கு அருகே உள்ள சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ பெரிய சந்­திக்கு கெப் ரக வாக­னத்தில் வந்த சி.ஐ.டி.யினர் அங்­கி­ருந்து தன்னை சி.ஐ.டி. தலை­மை­ய­கத்­துக்கு அழைத்துச் சென்று, அங்­கி­ருந்து கோட்டை நீதி­மன்­றுக்கு அழைத்துச் சென்­ற­தாக கூறினார்.

சி.ஐ.டி.யின­ரிடம் கூறிய விட­யங்­களை அப்­ப­டியே கோட்டை நீதி­வா­னிடம் கூற வேண்டும் என சி.ஐ.டி.யினர் தனக்கு தெரி­வித்­த­தா­கவும், கோட்டை நீதி­மன்­றுக்கு செல்லும் போது அங்கு நாமலி சில்வா எனும் பெண் சட்­டத்­த­ர­ணியை சி.ஐ.டி.யினர் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

சட்­டத்­த­ர­ணிக்கு வழங்க தம்­மிடம் பணம் கூட இருக்­காத நிலையில், தாம் சட்­டத்­த­ர­ணி­களை நிய­மிக்க வில்லை எனவும் சி.ஐ.டி.யினரே நிய­மித்­த­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார்.

இதன்­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்­ஸவின் குறுக்கு கேள்வி­க­ளுக்கு பதி­ல­ளித்த சாட்­சி­யாளர், சி.ஐ.டி.யில் கூறி­ய­வற்றை அப்­ப­டியே நீதி­வா­னிடம் கூறு­மாறும், சட்­டத்­த­ர­ணியை ஏற்­பாடு செய்து கொடுத்­த­வரும் சி.ஐ.டி.யில் இருக்கும் மெலிந்த உய­ர­மான ஒரு அதி­காரி எனவும் அவ­ரது பெயர் தெரி­யாது எனவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இத­னை­விட, நீதி­வானும் தான் ஏற்­க­னவே சி.ஐ.டி.க்கு வழங்­கிய வாக்கு மூலத்தை வைத்­துக்­கொண்டு கேள்வி கேட்டே தனது இர­க­சிய வாக்கு மூலத்தை பதிவு செய்­த­தாக சாட்­சி­யாளர் கூறினார்.

இந் நிலையில் சாட்­சி­யாளர் சி.ஐ.டி.யின­ருக்கு வழங்­கிய வாக்கு மூலம் மற்றும் நீதி­வா­னுக்கு வழங்­கிய வாக்கு மூலம் ஆகி­ய­வற்றை வழங்கும் போது எந்த அச்ச நிலை­யிலும் இருக்­க­வில்லை என்­பதை சாட்­சி­யாளர் நீதி­மன்றில் பிரஸ்­தா­பித்தார்.

அவ்­வா­றான நிலையில், குறித்த எந்­த­வொரு வாக்கு மூலத்­திலும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் , சுஹை­ரியா மத்­ர­ஸா­வுக்கு வந்­த­தா­கவோ, அதி­ப­ருடன் பேசிக்­கொன்­டி­ருந்தை கண்­ட­தா­கவோ சாட்­சி­யாளர் கூறவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ நீதிமன்றில் சுட்டிக்காட்டி, அவற்றை சாட்சியாளரின் முரண்பாடான நிலையாக மன்றில் பதிவு செய்தார்.

இதன்போது சாட்சியாளர் ஒரு சந்தர்ப் பத்தில், சி.ஐ.டி. வாக்கு மூலங்களின் போது சில விடயங்களையே தான் கூறியதாகவும், புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல் சாட்சியாளர் மலிக்குடன் தானும் ஓரிரு தடவைகள் வந்ததாகவும் கூறினார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மலிக் தன்னிடம் கூறிய விடயங்களை மையப்படுத்தியே ஹிஜாஸ் தொடர்பில் இந்த மன்றில் தான் ஞாபகப்படுத்தி வாக்கு மூலம் அளித்ததாக சாட்சியாளர் பெளசான் குறிப்பிட்டார்.

இந் நிலையில் 2 ஆம் சாட்­சி­யாளர் சி.ஐ.டி.யின் தேவைக்­காக, உண்­மைக்கு புறம்­பான விட­யங்­களை சாட்­சி­யாக கூறு­வ­தாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளிந்த இந்­ர­திஸ்ஸ மன்றில் முன் மொழிந்தார். எனினும் அதனை மறுக்­காத சாட்­சி­யாளர் அது தொடர்பில் தனக்கு தெரி­யாது என பதி­ல­ளித்தார்.

பல கேள்­வி­க­ளுக்கு சாட்­சி­யாளர், தெரி­யாது, ஞாபகம் இல்லை போன்ற பதில்­களை வழங்­கி­ய­மையை அவதானிக்க முடிந்தது.

இந் நிலையில் சாட்சியாளர் நோன்புடன் மிக நீண்ட நேரம் சாட்சியமளிப்பதை கருத்திற்கொண்டு, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா முன் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, வழக்கினை 2 ஆம் பிரதிவாதி சார்பிலான குறுக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் மே 12 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.