புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது

மு.கா., த.தே.கூ., ம.வி.மு. உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு

0 256

அர­சாங்கம் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வெளி­யி­ட்­டுள்ள புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மா­னது, பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தை விடவும் மிகவும் ஆபத்­தா­னது என பல்­வேறு தரப்­பு­க­ளி­லி­ருந்தும் எதிர்ப்­பு­களும் கண்­ட­னங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் என்­ப­னவும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்
நாட்டில் அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் ­சட்­டத்­துக்குப் பதி­லாக அர­சாங்கம் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் என்றோர் சட்­டத்தை அமு­லுக்கு கொண்­டு­வர முயற்­சிப்­பது அவ­சி­ய­மற்­ற­தாகும். சாதா­ரண சட்­டக்­கோ­வை­யிலே திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரலாம்.
1978 முதல் அமு­லி­லி­ருக்கும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் மூலம் அப்­பா­வி­களும் எதுவும் அறி­யாத நிலையில் அகப்­பட்­ட­வர்­க­ளுமே தண்­டிக்­கப்­பட்­டுள்­ளார்கள். உண்­மை­யான பயங்­க­ர­வா­திகள் தப்­பித்துக் கொண்­டுள்­ளார்கள். எனவே சாதா­ரண சட்­டமே எமக்­குப்­போதும். புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் தேவை­யற்­ற­தாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அர­சாங்கம் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; அர­சியல் நோக்­கத்­துக்­கா­கவும் ஆட்­சியைக் கைப்­பற்­றிக்­கொள்ளும் எதிர்­பார்ப்­பி­லுமே இச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. இச்­சட்டம் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள அதி­கா­ரி­களின் கீழ் பலத்தை கொடுப்­ப­தாக அமைந்­துள்­ள­துடன் அசா­தா­ரண அதி­கா­ரங்­களைப் பாது­காத்­துக்­கொள்ளும் வகையில் அமை­ய­வுள்­ளது. எமது நாட்­டி­லுள்ள குற்­ற­வியல் தண்­டனை சட்­டக்­கோவை 100 வரு­டங்கள் பழை­மை­யா­ன­தாகும் என்றார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் இது தொடர்பில் யாழில் நடத்­திய ஊடக சந்­திப்­பின்­போது கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
“பயங்­க­ர­வாத தடை சட்டம் நீக்­கப்­பட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் என்­கிற புதிய சட்­ட­மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக நாட்­டிலே அமுலில் இருக்­கின்­றது.இது அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம். ஆறு மாத காலத்­திற்­காக ஒரு தற்­கா­லிக சட்­ட­மாகக் கொண்­டு­வ­ரப்­பட்டு சில வரு­டங்­க­ளுக்குப் பிறகு 1981 ம் ஆண்டு நிரந்­த­ர­மான சட்­ட­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. மிகவும் மோச­மான ஒரு சட்டம் பல­ராலே அப்­ப­டி­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற சட்டம் அதை நீக்­கு­வ­தாக தற்­போ­தைய ஜனா­தி­ப­தியே பிர­த­ம­ராக இருந்­த­போது 2017 ம் ஆண்டு அறி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன், ஐரோப்­பிய சங்­கத்­திற்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். அதற்குப் பின்னர் தான் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை மாற்றிப் பயங்­க­ர­வாத தடுப்­பு­சட்டம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டது. அது மக்கள் பிர­தி­நி­தி­க­ளோடும் பொது அமைப்­பு­க­ளோடும் கலந்­து­ரை­யா­டப்­பட்டு அந்த வேளை­யிலே பல தவ­று­களை சுட்­டிக்­காட்டி பல திருத்­தங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன” என சுமந்­திரன் எம்.பி. கூறினார்.

மக்கள் விடு­தலை முன்­னணி
அர­சாங்கம் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் என தெரி­வித்து ஜன­நா­யக விரோத சட்டம் ஒன்­றையே வர்த்­த­மானி மூலம் வெளி­யிட்­டி­ருக்­கி­றது. இந்த சட்­டத்தின் பிர­காரம் தொழிற்­சங்க போராட்டம் இடம்­பெ­று­வது தொடர்பில் ஊட­கங்­களில் அறி­வு­றுத்தும் ஊட­க­வி­ய­லா­ளரும் பயங்­க­ர­வா­தி­யா­கவே கரு­தப்­படுவார் என மக்கள் விடு­தலை முன்­னணி ஊட­கப்­பேச்­சாளர் விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.

அர­சாங்கம் வர்த்­த­மா­னிப்­ப­டுத்தி இருக்கும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அர­சாங்கம் கொண்­டு­வந்­தி­ருக்கும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் ஐக்­கிய நாடுகள் அமைப்­பினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அள­வு­கோல்­க­ளுக்கு விரோ­த­மா­னது. ஏனெனில் வேலை நிறுத்­தப்­போ­ராட்டம் தொடர்பில் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களில் அல்­லது வேறு ஊட­கங்கள் ஊடாக அறி­வு­றுத்­து­வதும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தின் பிர­காரம் பயங்­க­ர­வாத செய­லாகும்.
அதன் பிர­காரம் தொழிற்­சங்க போராட்டம் ஒன்று தொடர்­பாக கையேடு விநி­யோ­கித்தல், டுவிட்டர் தகவல் அனுப்­புதல் வட்ஸ் அப் தகவல் அனுப்­புதல் பயங்­க­ர­வாத செய­லா­கவே அதன் சட­ட­மூ­லத்தின் 118ஆவது சரத்தில் அது­தொ­டர்­பான விதிகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றார்.

மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம்
அர­சாங்­கத்­தினால் புதி­தாக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூலம் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கு மித­மிஞ்­சிய அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­துடன் மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே பொறுப்­புக்­கூ­றலை உறு­தி­செய்­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம், பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழித்தல் என்ற பெயரில் நபர்­களை முறை­யற்ற விதத்தில் நடத்தும் கலா­சா­ரத்தை மாற்­று­வ­தற்­கான வலு­வான அர­சியல் நிலைப்­பா­டின்றி, வெறு­மனே சட்­ட­ம­று­சீ­ர­மைப்­புக்­களின் ஊடாக மாத்­திரம் எத­னையும் சாதிக்­க­மு­டி­யாது என்று தெரி­வித்­துள்­ளது.

தற்­போது நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­துக்குப் பதி­லாகப் பிறி­தொரு சட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­லத்தை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்­டது. இருப்­பினும் அதன் உள்­ள­டக்கம் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தை விடவும் மிக­மோ­ச­மா­ன­தாகக் புக்­களின் ஊடாக மாத்­திரம் எத­னையும் சாதிக்­க­மு­டி­யாது என்று தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது. இருப்பினும் அதன் உள்ளடக்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் காணப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிவரும் நிலையில், இதுகுறித்துத் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.