ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை நேர்மையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை

புத்தசாசன, சமய விவகார, கலாசார அமைச்சர் விதுர

0 170

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களை எவ்­வித குள­று­ப­டிகளுமின்றி நேர்­மை­யாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த காலங்­களில் ஹஜ் விசாக்கள் பல இலட்சம் ரூபாய்­க­ளுக்கு விற்கும் நிலைமை காணப்­பட்­டது. இந்­நி­லை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­வந்­துள்­ளது. இதன் அடிப்­ப­டை­யிலே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தனி­யான அலு­வ­ல­க­மொன்று திறந்து வைக்­கப்­பட்­டது என புத்த சாசன, சமயம், மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தெரி­வித்தார்.

அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான அலு­வ­ல­க­மொன்­றினைத் திறந்து வைத்தார். இந்­நி­கழ்­வுக்கு பணிப்­பாளர் இஸட்.ஏ.எம். பைசல் தலைமை வகித்தார்.

குறிப்­பிட்ட அலு­வ­லகம் ஹஜ்­மு­க­வர்கள் சங்கம் மற்றும் இலங்கை ஹஜ் முக­வர்கள் சங்கம் என்­ப­ன­வற்றின் நிதி உத­வியின் கீழ் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.
அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க அலு­வ­ல­கத்தை திறந்து வைத்து தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இது­வ­ரை­காலம் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஒரு காரியாலயம் இருக்­க­வில்லை. இதனால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். மக்­க­ளுக்கு சிர­மங்­களைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே காரி­யா­லயம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் கட்சி வேறு­பா­டு­க­ளின்றி அர­சாங்கம் சேவை­களை வழங்கும், தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும். முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. அப்­பி­ரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்டு முஸ்­லிம்கள் சுதந்­தி­ர­மாக வாழ ஏற்­பாடு செய்­யப்­படும். சில முஸ்லிம் பிர­தே­சங்­களில் பிரச்­சினை காணப்­ப­டு­கி­றது. அவற்­றிலும் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது.
கடந்த வருடம் கொவிட் நிலைமை மற்றும் பொரு­ளா­தார நெருக்­கடி நிலைமை கார­ண­மாக குறிப்­பிட்ட சிறிய தொகை­யி­ன­ருக்கே ஹஜ்­வாய்ப்புக் கிட்­டி­யது. இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

ஹஜ் முகவர் நிய­மனத்­துக்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் அடுத்­த­வாரம் ஹஜ்­மு­க­வர்கள் நிய­மனம் வழங்­கப்­பட்டு ஹஜ் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும். முக­வர்கள் வழங்கும் சேவைக்­கேற்ப ஹஜ் கட்­ட­ணங்கள் நிர்­ண­யிக்­கப்­படும். இது தொடர்­பான விப­ரங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என்றார்.

நிகழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைசல் காசிம், மர்ஜான் பளீல், முஷரப் முது­நபீன்,இஷாக் ரஹ்மான் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் மற்றும் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் ஆகி­யோரால் பொன்­னா­டை ­போர்த்தி கெள­ர­விக்­கப்­பட்டார். நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். இதன்போது, சவூதி அரேபியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழம் ஒரு தொகுதி அமைச்சரினால் வாழைத்தோட்டம் நஜ்மி பள்ளிவாசலுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.