வக்பு சொத்­துக்கள் பறிபோவதை தடுக்க ஒருங்­கி­ணைந்த உடனடி நடவடிக்கை அவ­சியம்

– பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான்

0 193

சமூ­க மார்க்க நிறு­வ­னங்­களும் அவற்­றுக்கு சொந்­த­மான வளங்­களும் சமூக இருப்பின் அத்­தி­வா­ரங்­க­ளாகும். இந்த அத்­தி­வா­ரங்­களை ஆட்டம் காணச் செய்யும் அல்­லது முற்­றா­க ஒழித்­த­ழிக்கும் எந்த ஒரு நட­வ­டிக்­கையும் சமூ­கத்தின் எதிர்­கால இருப்­பையே நாச­மாக்­கி­விடும். எனவே தான் சமூக நிறு­வ­னங்­க­ளுக்­கு­ரிய சொத்­துக்­களை பாது­காப்­பது எல்­லோ­ரு­டைய தலை­யாய கட­மை­யாகும்.

சமூ­க -­மார்க்க நிறு­வ­னங்­க­ளுக்கு வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை தனி நபர்கள் கைய­கப்­ப­டுத்த முயற்­சிக்­கின்ற செய்­திகள் தற்­போது அடிக்­கடி வெளி வரு­கின்­றன.
இது மிக மிக கவ­லைக்­கு­ரிய ஒன்­றாகும். கிராண்ட்பாஸ் பிர­தே­சத்தில் அமைந்­தி­ருந்த கபூ­ரி­யா­வுக்­கென வக்பு செய்­யப்­பட்ட மிகப் பெறு­ம­தி­யான காணி தனி­நபர் ஒரு­வரால் மிகப் பாரிய தொகைக்கு தனியார் வர்த்­தக நிறு­வனம் ஒன்­றுக்கு நீண்ட கால குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று, மக­ர­கம பிர­தே­சத்தில் அமைந்­துள்ள கபூ­ரியா மத்­ர­ஸா­வுக்­கென வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை தனி­நபர் சொத்­துக்­க­ளாக மாற்­று­வ­தற்­கான முயற்­சிகள் நீண்ட கால­மாக நடை­பெற்று வரு­வ­தாக தெரிய வரு­கி­றது. அவை தற்­போது தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது. இதன் ஓர் அங்­க­மாக கபூ­ரி­யாவில் கற்று வந்த மாண­வர்­களும் கற்­பித்த ஆசி­ரி­யர்­களும் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

மர்ஹூம் கபூர் ஹாஜியார் அவர்கள் மார்க்க நிறு­வனம் ஒன்றை நடத்­து­வ­தற்­கா­கவே குறித்த சொத்­துக்­களை வக்பு செய்­தி­ருந்தார். அதன் அடிப்­ப­டையில் அந்த காணியில் மார்க்க நிறு­வனம் ஒன்று ஸ்தாபிக்­கப்­பட்டு பன்­னெ­டுங்­கா­ல­மாக நடத்­தப்­பட்டு வரு­கி­றது. இது வக்பு செய்­யப்­பட்ட சொத்து என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே அந்தக் காணியில் இன்னும் பல கட்­ட­டங்­களும் வளங்­களும் சேர்க்­கப்­பட்­டன. மர்ஹூம் கபூர் ஹாஜியாருடன் இன்னும் பல கொடை­யா­ளி­களின் பங்­க­ளிப்­பு­ட­னேயே இந்த காணியில் குறித்த நிறு­வனம் கட்டி வளர்க்­கப்­பட்­டது.

அத்­தோடு இந்த நிறு­வ­னத்தை கொண்டு நடத்­து­வ­தற்கு ஏரா­ள­மான தொகை செலவு செய்­யப்­பட்டும் இருக்­கி­றது.

ஆக தற்­போ­துள்ள கபூ­ரியா அரபுக் கல்­லூரி என்­பது வக்பு செய்­யப்­பட்ட காணி மாத்­திரம் அல்ல. வெறும் ஓரிரு கட்­டி­டத்­துடன் வெறும் கட்­டாந்­த­ரை­யாக இருந்த நிலப்­ப­ரப்பில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் உத­வி­க­ளினால் தான் பெரும் பகுதி வளர்ச்சி உரு­வாக்­கப்­பட்­டது. எனவே, கபூ­ரியா என்­பது குடும்ப சொத்­தல்ல, சமூ­கத்தின் சொத்து என்­பதை சம்­பந்­தப்­பட்ட வர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிறு­வனம் சிதைக்­கப்­ப­டு­வ­தனை அனு­ம­திக்க முடி­யாது.

அதேபோல இன்னும் சில பொது நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மான வக்பு சொத்­துக்­க­ளையும் தனி­நபர் சொத்­துக்­க­ளாக மாற்­று­கிற முயற்­சிகள் பற்­றியும் கேள்­விப்­ப­டு­கிறோம்.

உதா­ர­ண­மாக கல்­எ­லிய மகளிர் அரபுக் கல்­லூ­ரிக்கு வெளியே ‘இது ஒரு தனியார் சொத்து. உட்­பி­ர­வே­சிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது’ என்ற அறி­வித்தல் தொங்கவிடப்­பட்­டுள்­ளது. இதுவும் அந்த சொத்­துக்­களை தனிப்­பட்ட நபர்கள் கைய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­யா­கவே தெரி­கி­றது.

இது போன்ற முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மான சொத்­துக்­களை சட்­ட­பூர்­வ­மாக பாது­காப்­ப­தற்­கா­கவே இந்த நாட்டில் வக்பு சபை என்ற நிறு­வ­னமும் அதற்­கே­யு­ரிய பிரத்­தி­யே­க­மான சட்­டங்­களும் இருக்­கின்­றன.

வக்பு சபை­யா­னது தமது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி இந்த வக்பு சொத்­துக்­களை பாது­காப்­பதில் முன்­னிற்க வேண்டும்.

அதே­போல, வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை தனி நபர்கள் கைய­கப்­ப­டுத்தும் இந்தப் போக்கு தொடர்­வதை அனு­ம­திக்­காது, தடுத்து நிறுத்­து­வ­தற்­கான ஒருங்­கி­ணைந்த உட­னடி முயற்­சி­களை மார்க்­க -­ச­மூக நிறு­வ­னங்­களும் மற்றும் புத்­தி­ஜீ­விகள் அனை­வரும் மேற்­கொள்ள வேண்டும்.

இல்­லா­விட்டால் நமது பெறு­மதி மிக்க சமூக நிறு­வ­னங்­க­ளையும் அவற்றை பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட வக்பு ஏற்­பா­டு­க­ளையும் இழந்து விட்டு கைசேதப்படுகிற ஒரு சமூகமாக நாம் மாறி விடுவோம்.

ஏற்கனவே புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பலரும் இது தொடர்பில் சில பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சமூக நிறுவனங்களையும் அதற்கு அத்திவாரமாக திகழும் வக்பு செய்யப்பட்ட வளங்களையும் பாதுகாப்பதற்கு எல்லோரும் முன் நிற்க வேண்டும்.
இது நம் எல்லோருடைய சமூக்க் கடமை மாத்திரமன்றி மார்க்க கடமையும் ஆகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.