உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சதி, குண்டு தயாரிப்பு குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் மரணம்

0 193

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் 21 குண்­டு­களை தயா­ரித்­தமை, சதி செய்­தமை தொடர்பில் 6 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்ள நிலையில், அவர்­களில் ஒருவர் சிறையில் வைத்து சுக­யீனம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரட்ன மார­சிங்க முன்­னி­லையில் தொடுக்­கப்­பட்­டுள்ள எச்.சி. 3886/22 எனும் வழக்கின் 6 ஆவது பிர­தி­வ­தியே இவ்­வாறு சிறையில் மர­ணித்­துள்ளார். மொஹம்மட் மொயி­னுத்தீன் மூசா அல்­லது அப்­துல்லாஹ் எனும் மட்­டக்­குளி பகு­தியைச் சேர்ந்த 40 வய­தான நபரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­துடன், அவ­ரது ஜனாஸா நேற்­று­முன்­தினம் (7) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் 21 குண்­டு­களை தயா­ரித்­தமை தொடர்பில் மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்­லது அர்ஷாத், குண­சீலன் ரவீந்ரன் அல்­லது மொஹம்மட் இஷாக், ஷெய்க் மொஹம்மட் பரீக் மொஹம்மட் பெளசி, மொஹம்மட் மொயி­னுத்தீன் மூசா அல்­லது அப்­துல்லாஹ் ஆகிய 6 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக குற்றப் பகிர்வுப் பத்­திரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலின் தப்­ரபேன் உண­வ­கத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட் இப்­ரஹீம் இன்ஷாப் அஹ­மட்டின் ஆலோ­ச­னைக்கு அமைய கடந்த 2018 ஜன­வரி முதலாம் திக­திக்கும் மார்ச் 30 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் குண்டு தயா­ரித்­துள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால், பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்டு சட்ட மா அதி­பரால் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

மர­ண­ம­டைந்­துள்ள பிர­தி­வாதி தொடர்பில், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள ஏர்கனவே நீதிமன்றம் உத்தரவினை பிரப்பித்திருந்த பின்னணியில், சிறையில் வைத்து இந்த மரணம் சம்பவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.