ஈரானில் மாணவிகளுக்கு நஞ்சூட்டல்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0 271

எம்.ஐ.அப்துல் நஸார்

பாட­சாலை மாண­விகள் நஞ்­சூட்­டப்­பட்­ட­மைக்­கான அறி­கு­றி­களைக் காட்டும் முதல் சம்­பவம் கடந்த வருடம் நவம்பர் பிற்­ப­கு­தியில் சம­ய­ரீ­தி­யாக முக்­கி­யத்­துவம் வாய்ந்த நக­ர­மான ஈரானின் கும் நகரில் பதி­வா­னது. இதன்­போது டசின் கணக்­கான மாண­விகள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். மார்ச் மாத ஆரம்­பத்தில் தலை­நகர் தெஹ்ரான் மற்றும் குறைந்­தது இரண்டு நக­ரங்­க­ளுக்கு பர­வு­வ­தற்கு முன்னர் இதே­போன்ற பல சம்­ப­வங்கள் அங்­குள்ள ஆரம்ப மற்றும் இடை­நிலைப் பாட­சா­லை­களில் தொடர்ந்து இடம்­பெற்­றன.

ஈரா­னுக்கு உள்­ளேயும் வெளி­யேயும் இந்த விவ­காரம் ஊடக கவ­னத்தைப் பெற்ற பின்னர் ஈரான் முழு­வதும் கடந்த ஒரு வார­மாக இச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தன. வேண்­டு­மென்றே பெண் பிள்­ளை­களை பாட­சா­லைக்கு சமு­க­ம­ளிப்­பதைத் தடுக்கும் நோக்­கி­லேயே இம் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக சுகா­தார அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அதி­கா­ரி­களால் எவ்­வித புள்­ளி­வி­வ­ரங்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனினும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாண­விகள் நஞ்­சூட்­டலால் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

அதனால் பாதிக்­கப்­பட மாண­வி­க­ளுக்கு ஒரே­வி­த­மான அறி­கு­றி­களே காணப்­பட்­டுள்­ளன. பெரும்­பாலும் மூச்சுத் திணறல், தலை­வலி, குமட்டல், இதயப் பட­ப­டப்பு மற்றும் கை கால்கள் விறைப்பு உள்­ளிட்ட அறி­கு­றிகள் அந்த மாண­வி­களில் அவ­தா­னிக்­கப்­பட்­டன. சில மாண­விகள் தமக்கு அழு­கிய பழங்கள், கடு­மை­யான வாசனை திர­வி­யங்கள் அல்­லது எரியும் வாசனை போன்ற விசித்­தி­ர­மான துர்­வா­டைகள் வீசு­வ­தாக தெரி­வித்­தனர். பெரும்­பா­லான சம்­ப­வங்கள் ஆபத்­தா­ன­வை­யாக இருக்­க­வில்லை. எனினும் மாண­விகள் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

31 மாகா­ணங்­களுள் இரு­பத்­தைந்து மாகா­ணங்­களில் அண்­ண­ள­வாக 230 பாட­சா­லைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் 5,000க்கும் மேற்­பட்ட மாண­விகள் மற்றும் சிறு­வர்கள் நஞ்­சூட்­டப்­பட்­டுள்­ளனர் என பாரா­ளு­மன்ற உண்மை கண்­ட­றியும் குழுவின் உறுப்­பி­ன­ரான முக­ம­து-­ஹா­ச­ன­ அ­ச­பாரி திங்­க­ளன்று நிறு­வ­னத்­திடம் தெரி­வித்தார்.

இத­னி­டையே, நவம்பர் மாத பிற்­ப­குதி தொடக்கம் 5,000 க்கும் மேற்­பட்ட மாண­வி­களை பாதித்த நஞ்­சூட்­ட­லோடு தொடர்­பு­பட்ட முத­லா­வது கைது இடம்­பெற்­றுள்­ள­தாக ஈரான் செவ்­வாய்க்­கி­ழமை (07) அறி­வித்­தது.

பொது­மக்கள் மத்­தியில் பெரும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டுள்ள நிலையில் ‘மன்­னிக்க முடி­யாத குற்­றத்தை’ செய்­த­வர்­களை ‘ஈவி­ரக்­க­மின்றி’ கண்டுபிடிக்க வேண்டும் என ஈரானின் ஆன்­மிகத் தலைவர் அய­துல்லா அலி கொமைனி திங்­கட்­கி­ழ­மை­யன்று வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். மாண­வி­யொ­ரு­வரின் பெற்றார் ஒருவர் உட்­பட அபா­ய­க­ர­மான பொருட்­களை தயா­ரித்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஆறு மாகா­ணங்­களைச் சேர்ந்த பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள­வுத்­துறையினர் பலரை கைது செய்­துள்­ள­தா­கவும், சம்­பந்­தப்­பட்ட முக­வ­ர­கங்கள் முழு விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கவும் ஈரானின் பிரதி உள்­துறை அமைச்சர் மஜித் மிராஹ்­மதி செவ்­வா­யன்று அர­சாங்க தொலைக்­காட்­சியில் தெரி­வித்தார்.

நஞ்சின் வகை மற்றும் நஞ்­சூட்­டப்­பட்­ட­மைக்­கான கார­ணத்தை கண்­ட­றிய பல்­வேறு சோத­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எந்த வகை­யான நஞ்சு பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது தொடர்பில் இது­வரை எந்த குறிப்­பி­டத்­தக்க தக­வலும் பெறப்­ப­ட­வில்லை. இந்த விவ­காரம் தொடர்பில் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுப் பெற்று வரு­கின்­றன.

உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யின்­படி, குசெஸ்தான், மேற்கு அஜர்­பைஜான், பார்ஸ், கெர்­மன்ஷா, கொராசன் மற்றும் அல்போர்ஸ் மாகா­ணங்­களில் கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களுள் ஒருவர், தனது பிள்­ளை­யினை நஞ்­சூட்டல் செயற்­பாட்­டிற்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு நோய்­வாய்ப்­பட்ட மாண­வர்­களின் வீடி­யோக்­களை பதி­வு­செய்து, ‘எதிர்த்­த­ரப்பு ஊட­கங்­க­ளுக்கு’ அனுப்பி ‘பயத்தை உரு­வாக்கி பாட­சா­லை­யினை மூட வைப்­பதே அதன் நோக்­க­மாகும் என அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பயத்­தையும் அவ­நம்­பிக்­கை­யையும் உரு­வாக்­கு­வ­தற்­காக எதி­ரிகள் மேற்­கொண்ட சதி என அதனை வரு­ணித்­துள்ள ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைசி கடந்த வாரம் உள்­துறை மற்றும் உள­வுத்­துறை அமைச்­சுக்­க­ளுக்கு நஞ்­சூட்­டப்­பட்ட விவ­காரம் தொடர்பில் தொடர்ச்­சி­யான தக­வல்­களை தனக்கு வழங்க வேண்டும் எனப் பணித்­துள்ளார்.
வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட மாண­வர்­களுள் ஐந்து சத­வீ­தத்­திற்கும் குறை­வான மாண­வி­க­ளுக்கே உடல்­ந­லக்­கு­றைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நச்­சுத்­தன்­மையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன’ என உள்­துறை அமைச்சு திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.

‘அதிர்ஷ்­ட­வ­ச­மாக, இது­வரை, மருத்­துவ நிலை­யங்­க­ளுக்கு மாற்­றப்­பட்ட எந்த மாண­வர்­க­ளி­டமும் நச்சு அல்­லது ஆபத்­தான பொருட்கள் எதுவும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.’
பிரதி சுகா­தார அமைச்சர் சயீத் கரீமி, ‘சுவா­சிப்­பதில் சிரமம், வயிற்று வலி, பல­வீனம் மற்றும் சோம்பல்’ போன்ற அறி­கு­றிகள் காணப்­பட்­ட­தா­கக தெரி­வித்தார்.

‘இந்த உள்­ளி­ழுக்­கப்­படும் பொருள் ஒரு வாயு­வா­கத்தான் இருக்க வேண்­டு­மென்ற அவ­சி­ய­மில்லை, தூள் அல்­லது பசை அல்­லது ஒரு திரவ வடிவில் இருக்­கலாம், இது ஒரு ஹீட்­டரின் மீது ஊற்­றப்­ப­டும்­போது அல்­லது வெப்­பத்தால் ஆவி­யா­கும்­போது அது சிக்­கல்­களை ஏற்­ப­டுத்தும்,’ என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறு­வ­னத்­தினால் அறிக்­கை­யி­டப்­பட்ட அண்­மைய சம்­ப­வத்தில் அமை­தி­யற்ற தென்­கி­ழக்கு நக­ர­மான ஸஹெ­டானில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை 40 மாண­விகள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்­தனர். இச் சம்­பவம் தொடர்பில் பக்­கச்சார் சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என திங்­க­ளன்று வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்தது.

அமீனிக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரவிய ஒரு மாதத்திற்குப் பின்னர் நஞ்சூட்டல் பாதிப்புக்கள் முதன்முதலாக ஈரானின் ஆன்மீகத் தலைநகரான கும்மில் நவம்பர்மாத கடைசிப் பகுதியில் பதிவாகியுள்ளன,

கடந்த செவ்வாய்கிழமை, பொய்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புபவர்களை எச்சரித்த தெஹ்ரான் சட்டத்தரணியான அலி சலேஹி, அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறையின் மிசான்இணையதளம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஹம்மிஹான், ரூய்டாட் 24 மற்றும் ஷார்க் ஊடகங்களின் முகாமையாளர்கள்; மற்றும் பல தனிநபர்கள் மீது வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,’ என்று சலேஹி மேலும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.