600 பெண்களில் 130 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன

ஊடகவியலாளர்களின் ஆய்வில் தகவல்

0 195

குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பணி புரிந்த டாக்டர் ஷாபி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தமக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை செய்­த­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்த 600 சிங்­கள தாய்­மார்­களில் 130 பேர் முறைப்­பாடு செய்த பின்னர் குழந்தை பெற்றுக் கொண்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான தரிந்து ஜய­வர்­தன மற்றும் ஆன்யா விபு­ல­சேன ஆகியோர் சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­களை ஆய்வு செய்து டெய்லி எப்.ரி. பத்­தி­ரி­கையில் எழு­தி­யுள்ள கட்­டு­ரையில் இந்த விப­ரங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

குரு­நாகல் மாவட்­டத்தின் பொது­ஹர பிர­தே­சத்­திற்கு விஜயம் செய்த மேற்­படி ஊட­க­வி­ய­லா­ளர்கள் இவ்­வாறு முறைப்­பாடு செய்த தாய்­மார்கள் சிலரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளனர். அத்துடன் முறைப்பாடு தொடர்பான ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளனர். இதன்­போது தாம் டாக்டர் ஷாபிக்கு எதி­ராக பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தமை தொடர்பில் வருந்­து­வ­தாக குறித்த தாய்மார் குறிப்­பிட்­டுள்­ளனர்.

“நான் கருத்­தடை குற்­றச்­சாட்­டுகள் பற்­றிய செய்­தி­களை தொலைக்­காட்­சியில் பார்த்தேன். பத்­தி­ரி­கை­க­ளிலும் வாசித்தேன். நாளுக்கு நாள் டாக்டர் ஷாபி மீதான முறைப்­பா­டுகள் அதி­க­ரித்­துக்­கொண்டே இருந்­தன. அதனால், நானும் முறைப்­பாடு செய்யச் சென்­றேன்”­ என ஒரு தாய் கூறினார். இவ்­வாறு முறைப்­பாடு செய்­தமை எனது முட்­டாள்­தனம் என்றும் அவர் குறிப்­பிட்டார். உண்­மைகள் தெரி­ய­வந்­ததும் தான் முறைப்­பாட்டை வாபஸ் பெற வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­ற­தா­கவும் எனினும் அதனை எவ்­வாறு முறைப்­படி செய்­வ­தென வைத்­தி­ய­சாலை அதி­கா­ரிகள் தனக்கு கூற­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை, இவ்­வாறு முறைப்­பாடு செய்த ஒரு மாதத்தின் பின்னர் தான் கர்ப்­ப­முற்­றுள்­ளதை மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளின்­போது அறிந்து கொண்­ட­தாக மற்­று­மொரு தாயார் தெரி­வித்­துள்ளார். எனினும் தான் செய்த முறைப்­பாட்டை வாபஸ் பெற முயற்­சிக்­க­வில்லை என்றும் இந்த விடயம் எப்­போதோ முடி­வுக்கு வந்­து­விட்­ட­தாக தாம் கரு­தி­ய­மையே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக தாம் முறைப்­பாடு செய்­தமை குறித்து அதிகம் வருந்­து­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

டாக்டர் ஷாபிக்கு எதி­ராக முறைப்­பாடு செய்ய முன்­வ­ரு­மாறு குரு­நாகல் மாவட்ட வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் சரத் வீர­பண்­டார அழைப்பு விடுத்­ததைத் தொடர்ந்­து சுமார் 800 பெண்கள் இவ்­வாறு முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் வைத்­திய சேவையில் இருந்து சுகா­தார அமைச்­சினால் இடை­நி­றுத்­தப்­பட்டு, டாக்டர் ஷாபி கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள போதிலும், வழக்கு இன்னும் முற்றுப் பெற­வில்லை. எனினும் அவர் குற்­ற­மற்­றவர் என சுகா­தார அமைச்­சினால் கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இதன்போது அவர் இடைநிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதிக்கான சம்பள நிலுவை மீள வழங்கப்பட்டது. இந் நிதியை அவர் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கியிருந்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.