இஸ்லாமிய இதழியல் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய மர்ஹூம் அப்துல்லாஹ் அஸ்ஸாம்

0 283

எம்.எச்.எம். ஹஸன்

அல்­ஹ­ஸனாத் மாசிகை மற்றும் எங்கள் தேசம் பத்­தி­ரி­கையின் முன்னாள் நிர்­வாக ஆசி­ரியர் அஷ்ஷெய்க் ஆர். அப்­துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்­லாஹி) திடீர் மார­டைப்பின் கார­ண­மாக கடந்த சனிக்­கி­ழமை (18) கொழும்பில் வபாத்­தானார்.

சனிக்­கி­ழமை இரவு கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து அவர் நீண்ட கால­மாக வாழ்ந்து வந்த அபுக்­கா­கம கிரா­மத்­திற்கு எடுத்துச் செல்­லப்­பட்டு பின்னர் அவர் இறு­தி­யாக வாழ்ந்து வந்த புத்­தளம் நக­ரத்­திற்கு எடுத்துச் செல்­லப்­பட்­டது. ஜனாஸா நல்­ல­டக்கம் புத்­தளம் நகரின் மஸ்­ஜிதுல் பகா மைய­வா­டியில் ஞாயிற்­றுக்­கி­ழமை (19) காலை 09 மணிக்கு இடம்­பெற்­றது.

அவ­ரது ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து ஆலிம்கள், அறி­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள், அர­சியல் பிர­மு­கர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், ஊர் மக்கள் என­ பெரும் திர­ளானோர் கலந்து கொண்­டனர்.

நல்­ல­டக்­கத்தின் பின்னர் புத்­தளம் இஸ்­லா­ஹிய்யா பெண்கள் அரபுக் கல்­லூரி விரி­வு­ரை­யாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்­லாஹி) விஷேட உரை­ நி­கழ்த்­தினார்.
அட்­டா­ளைச்­சே­னையில் பிறந்த ராமக்­குட்டி அப்­துல்லாஹ் அஸ்ஸாம் அவர்­க­ளது குடும்பம் அவர் சிறு பரா­யத்தில் இருந்­த­போது புத்­த­ளத்­திற்கு குடி­பெ­யர்ந்­தது. புத்­த­ளத்தில் தனது ஆரம்ப மற்றும் இடை­நிலைக் கல்­வியைத் தொடர்ந்த இவர், தனது இளம் பரு­வத்தில் இஸ்­லாத்தின் பால் கவ­ரப்­பட்டு இஸ்­லாத்தில் நுழைந்தார். பின்னர் உயர் கல்­வியைத் தொடர்­வ­தற்­காக மாதம்பை இஸ்­லா­ஹிய்யா கலா­சா­லையில் நுழைந்தார்.
உயர் கல்­வியைப் பூர்த்தி செய்து அஷ்ஷெய்க் பட்டம் பெற்று அங்­கி­ருந்து வெளி­யே­றி­யது முதல் அல்­ஹ­ஸனாத் மாத இதழ் ஆசி­ரியர் பீட உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றினார். சிறிது காலத்­திற்­குள்­ளேயே தனது தனித் திற­மை­களை வெளிப்­ப­டுத்தி அதன் நிர்­வாக ஆசி­ரி­ய­ராக பதவி உயர்ந்தார்.

ஆர­வாரம் இன்றி அமை­தி­யாக பணி­பு­ரிந்து வந்த அவ­ரது சாத­னைகள் உண்­மையில் பிர­மிக்கத் தக்­க­வை­யாகும். இலங்­கையில் ஒரே நேரத்தில் தமிழ் மொழியில் இஸ்­லா­மிய சஞ்­சிகை ‘அல்­ஹ­ஸனாத்’ மாசிகை, மாத­மி­ரு­முறை வெளி­வந்த அர­சியல், சமூக பத்­தி­ரிகை ‘எங்கள் தேசம்’, சிங்­கள மொழி­யி­லான இஸ்­லா­மிய மாசிகை ‘பிர­போ­தய’, ஆங்­கில மாசிகை ‘த ட்ரன்ட்’, சிறுவர் மாசிகை ‘அகரம்’ ஆகிய ஐந்து பருவ வெளி­யீ­டு­களை நீண்ட காலம் வெளி­யிட்டு சாதனை புரிந்த ஜஸ்ட் மீடியா பவுண்­டேசன் ஊடக நிறு­வ­னத்தின் உரு­வாக்­கத்­திலும் அதன் வளர்ச்­சி­யிலும் பிர­தான சக்­தி­யாக திகழ்ந்து அதன் முகா­மை­யா­ள­ரா­கவும் பல காலம் கட­மை­யாற்­றி­யவர்.

அதே­வேளை அவர் இலங்­கையில் 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக தொடர்ச்­சி­யாக வெளி­வந்த அல்­ஹஸனாத் சஞ்­சி­கை­யி­னதும் 15 வரு­டங்­க­ளுக்கு மேல் தொடர்ச்­சி­யாக வெளி­வந்த மாத­மி­ரு­முறை அர­சியல், சமூக பத்­தி­ரிகை எங்கள் தேசத்­தி­னதும் நிர்­வாக ஆசி­ரி­ய­ரா­கவும் சம­கா­லத்தில் கட­மை­யாற்­றி­யவர்.

தமிழ் மொழி­யி­லான அவ­ரது சொந்த ஆக்­கங்கள் மட்­டு­மன்றி ஆங்­கில மொழி­யிலும் அரபு மொழி­யிலும் கூட தேர்ச்சி பெற்­றி­ருந்த அவ­ரது மொழி­பெ­யர்ப்பு ஆக்­கங்­களும் பத்­தி­ரி­கையை அலங்­க­ரித்­தன.

அரபு மொழி மூல நூல்­களின் துணை­யுடன் அல்­குர்­ஆ­னியக் கலை சம்­பந்­த­மாக அவர் எழு­திய தஃவதுல் குர்ஆன் எனும் நூல் பல பதிப்­பு­களை கண்­டுள்­ளது மட்­டு­மன்றி அரபுக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மத்­தி­யிலும் பெரு மதிப்பு பெற்ற நூலாக இருந்து வரு­கி­றது.
எழுத்து, ஊடக முகாமைத் துறை­களில் மட்­டு­மன்றி மனித வள உரு­வாக்­கத்­திலும் அவர் பெரும் கவனம் செலுத்­தினார். இன்று ஊட­கத்­து­றையில் மிளிரும் பல ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அவ­ரது பாச­றையில் வளர்ந்­த­வர்­களே.

இத்­தனை சாத­னை­க­ளையும் புரிந்த அவர் ஆர­வாரம் இன்றி அமை­தி­யா­கவே வாழ்ந்தார். மனி­தர்­க­ளது உள்­ளங்­களை வென்றார். ஆனால் விளம்­ப­ரத்தை அவர் விரும்­பவே இல்லை.

அவ­ரது ஜனா­ஸா­வுக்கு நாட்டின் பல பகு­தி­களில் இருந்தும் திரண்டு வந்த மக்கள் கூட்­டமும் அவர்­களில் பலர் கண்ணீர் விட்­ட­ழு­ததும் புத்­தளம் மக்­களை ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யது. எம­தூரைச் சேர்ந்த இந்த மாம­னிதர் யார் என அதன் பின்­னரே அவர்­களில் பலர் தேடத் தொடங்­கினர் என்­ப­தற்கு சமூக வலைத்தளங்களில் வரும் ஆக்கங்கள் சான்று பகர்கின்றன.

பல­ருக்கு வழி­காட்­டி­யாக, பயிற்­று­விப்­பா­ள­ராக, அர்ப்­பண சிந்­தை­யுடன் செலாற்றும் செயல் வீர­ராக, நற்­பண்­புகள் நிறைந்த ஒரு­வ­ராக வாழ்ந்து மறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய மர்ஹூம் ஆர். அப்துல்லாஹ் அஸ்ஸாம் அவர்களின் பணிகளை அங்கீகரித்து பாவங்களை மன்னித்து அவருக்கு அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.