அஹ்னாப் ஜஸீம் வழக்கில் அரசின் சாட்சியாளர்கள் கூறும் உண்மைகள் !

0 487

எம்.எப். அய்னா

‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்கு, ஆரம்­பமே பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், அஹ்னாப் ஜஸீம் மாண­வர்­க­ளுக்கு புலி­களின் தலைவர் பிர­பா­கரன், நளீ­மியா கலா­பீ­டத்தின் அஷ்ஷெய்க் அகார் முஹம்­மது ஆகி­யோரின் உரை­களைக் காட்டி, அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக முன் வைத்த குற்­றச்­சாட்­டுக்கள், இது­வ­ரை­யி­லான சாட்­சி­யங்கள் ஊடாக பொய்­யா­னவை என தெரி­ய­ வந்­தி­ருக்­கின்­றது.

அஹ்னாப் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக நிரூ­பிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்­லது அரச தரப்பு நீதி­மன்றம் முன்­னி­லையில் கொண்­டு­ வந்த முதல் இரண்டு அரச தரப்பின் சாட்­சி­யா­ளர்­களும் ( 2, 6 ஆம் சாட்­சி­யா­ளர்கள்), அரச தரப்பு எதிர்­பார்க்­காத நிலையில் மன்றில் உண்­மை­களை புட்டு புட்டு வைத்­துள்ள நிலையில், அவ்­வ­ழக்கு மீண்டும் பர­ப­ரப்பை எட்­டி­யுள்­ளது.

புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் இந்த விசா­ரணை நடாத்­தப்­பட்­டது.

இதன்­போது சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த, இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

வழக்கின் அனைத்து விட­யங்­களும் நீதி­மன்ற மொழி பெயர்ப்­பாளர் ஊடாக தமிழ் மொழியில் குற்றம் சாட்­டப்­பட்ட அஹ்னாப் ஜஸீ­முக்கு, நீதி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் மொழி பெயர்க்­கப்­பட்­டது.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதி­மன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்­தே­க ­ந­ப­ரில்லை என நீதி­மன்றில் அறி­வித்­தி­ருந்தார்.

இந்நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த வழக்கு கடந்த 17 ஆம் திகதி வெள்­ளி­யன்று விசா­ர­ணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டார மன்றில் ஆஜ­ரானார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீ­முக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான ரிஸ்வான் உவைஸ், ஹுஸ்னி ராஜித் ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

இந் நிலையில் முதலில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி குற்­றச்­சாட்டு, அஹ்னாப் ஜஸீ­முக்கு வாசித்து காட்­டப்­பட்­டது. புத்­தளம் – மது­ரங்­குளி பகு­தியில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வாத கொள்­கை­களை ஊட்டி இன, மத, முரண்­பா­டுகள் மற்றும் பகை உணர்­வினை தூண்­டி­ய­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.
ஒரே ஒரு குற்­றச்­சாட்டே சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அக்­குற்­றச்­சாட்டு வாசித்து காட்­டப்­பட்டு, தமிழில் மொழி பெயர்த்து அஹ்னாப் ஜஸீ­முக்கு கூறப்­பட்­டது.
அதன் பின்னர் அக்­குற்­றச்­சாட்டு தொடர்பில் குற்­ற­வா­ளியா? சுற்­ற­வா­ளியா என அஹ்னாப் ஜஸீ­மிடம் வின­வப்­பட்­டது.

இதன்­போது குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தான் நிர­ப­ராதி ( சுற்­ற­வாளி) என அஹ்னாப் ஜஸீம் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
சாட்­சியம் அளிக்க 2,6,8 ஆம் இலக்க சாட்­சி­யா­ளர்கள் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். முதலில் 2 ஆம் இலக்க சாட்­சி­யா­ள­ரான புத்­தளம், ஸ்கூல் ஒப் எக்­ச­லன்ஸி எனும் ஆங்­கில மொழி மூல பாட­சா­லையின் அதிபர் ஹிதா­ய­துல்லாஹ் அஜ்மல் சாட்­சி­ய­ம­ளித்தார்.

பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டா­ரவின் நெறிப்­ப­டுத்­தலில் அவர் முதலில் சாட்­சியம் அளித்தார்.

தான், கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், ஸ்கூல் ஒப் எக்­ச­லன்ஸி பாட­சா­லையின் அதிபர் பத­விக்கு விண்­ணப்­பித்­த­தா­கவும், இணையம் ஊடாக நடந்த நேர்­முகத் தேர்வின் பின்னர் கடந்த 2018 ஏப்ரல் 3 ஆம் திகதி நாடு திரும்பி 2018 ஏப்ரல் 4 ஆம் திகதி அதிபர் கட­மை­களைப் பொறுப்­பேற்­ற­தாக அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அதி­ப­ராக தான் கட­மை­யேற்கும் போது குறித்த பாட­சா­லையில் 320 முதல் 330 மாண­வர்­களும் 23 முதல் 25 ஆசி­ரி­யர்­களும் இருந்­த­தாக அவர் கூறினார்.

அதன் பின்னர், பாட­சா­லையில் நில­விய ஆசி­ரியர் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்­சேர்ப்பு செய்­த­தா­கவும், பாட­சாலை பணிப்­பாளர் சபையின் அனு­ம­தி­யுடன் குறித்த ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கவும் அவர் கூறினார். கடந்த 2010 பெப்­ர­வரி முதலாம் திகதி குறித்த பாட­சாலை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தா­கவும், எனினும் அப்­பா­ட­சா­லையின் முத­லா­வது க.பொ.த. சாத­ரண தர மாணவ குழு கடந்த 2019 ஆம் ஆண்டே பரீட்­சைக்கு தோற்­றி­ய­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார். இதனால் 2019 ஆம் ஆண்டு, க.பொ. த. சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு மேல­திக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் என விஷேட கற்றல் நட­வ­டிக்­கைகள் ஒழுங்கு செய்து கொடுக்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்டார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த 2019 இல் நில­விய ஆசி­ரியர் வெற்­றி­டங்­களும் நிரப்­பப்பட்­ட­தாக அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இதன்­போது ஆங்­கில பாடத்­துக்கு சியாம் ஆசி­ரியர், விளை­யாட்டு தொடர்பில் சைபுதீன் ஆசி­ரியர், கணித பாடத்­துக்கு பெரோனாஸ் ஆசி­ரியை, தமிழ் பாடத்­துக்கு அஹ்னாப் ஜஸீம் ஆசி­ரியர் ஆகியோர் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­ட­தாக அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார்.
உரிய முறைமை பின்­பற்­றப்­பட்டு அஹ்னாப் ஜஸீம் தமிழ் பாடம் கற்­பிக்க தெரிவு செய்­யப்­பட்­ட­தா­கவும், அவ­ரது கற்­பித்­தலை தொடர்ந்து பாட­சா­லையில் தமிழ் மொழி பாடத்தின் அடைவு மட்டம் அதி­க­ரித்­த­தா­கவும் அதிபர் குறிப்­பிட்டார். இத­னை­விட, 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களின் பெற்­றோர்­களின் கோரிக்கை பிர­காரம், அவர்கள் தங்­கி­யி­ருந்து கற்றல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க மாணவ மாண­வி­ய­ருக்கு வெவ்­வே­றான தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­ட­தா­கவும், இதன்­போது மாண­வர்­க­ளுக்கு ஒழுங்கு செய்­யப்­பட்ட கட்­டி­டத்தில் மாண­வர்­களை வழி நடாத்த அஹ்னாப் ஜஸீம் ஆசி­ரியர் தனது கோரிக்கை பிர­காரம் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந் நிலையில் அவ­ரது சாட்­சி­யத்தை மையப்­ப­டுத்தி, அஹ்னாப் ஜஸீ­முக்­காக மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

அதன்­படி குறித்த பாட­சா­லையில் ஆசி­ரியர் வெற்­றிடம் ஏற்­படும் போது பகி­ரங்­க­மாக ஆட்­சேர்ப்பு செய்ய விண்­ணப்பம் கோரப்­ப­டு­வ­தா­கவும், அஹ்னாப் ஜஸீம் ஆசி­ரி­ய­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தமிழ் பாடத்­துக்கு அப்­போது 13 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­த­தா­கவும் குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு பதி­ல­ளித்து அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந் நிலையில் தமிழ் பாட ஆசி­ரி­யரை தெரிவு செய்ய வத்­சலா, ரிஸ்­மிலா, ரோஜி ஆகிய பெயர்­களை உடைய கல்விச் சேவை உயர் மட்ட அதி­கா­ரிகள் மற்றும் ஆசி­ரி­யை­களைக் கொண்ட நேர்­முகத் தேர்வுக் குழு நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்­களே அஹ்னாப் ஜஸீமை தமிழ் ஆசி­ரி­ய­ராக தெரிவு செய்­த­தா­கவும் அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார். அப்­போது அஹ்னாப் ஜஸீம் பேரா­தனை பல்­கலைக் கழகம் மற்றும் இந்­தி­யாவின் பல்­கலைக் கழகம் ஒன்­றிலும் தமிழ் மொழி தொடர்பில் சிறப்பு கற்­கை­களை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­த­தாக அவர் கூறினார்.

இதன்­போது அஹ்னாப் ஜஸீம் ஏதேனும் புத்­தகம் எழு­தி­யி­ருந்­தாரா என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் அதி­ப­ரிடம் குறுக்கு விசா­ரணை செய்தார்.

அதற்கு பதி­ல­ளித்த அதிபர் ஆம் எனவும், தமிழ் மொழியில் கவிதைப் புத்­தகம் ஒன்றை அவர் எழு­தி­யி­ருந்­த­தாக தனது சுய விபரக் கோவையில் அஹ்னாப் ஜஸீம் குறிப்­பிட்­டி­ருந்­த­தா­கவும் பதி­ல­ளித்தார்.

2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதா­ரண தரத்­துக்கு தோற்­றிய ஆண் மாண­வர்கள், பாட­சா­லை­யி­லி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் கட்­டிடம் ஒன்றில் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும், பாட­சாலை நிர்­வாக சபை குறித்த கட்­டி­டத்தைப் பெற்றுத் தந்­த­தா­கவும் கூறிய அதிபர், மாண­வர்கள் தங்­கி­யி­ருந்து படிக்கும் போது அவர்­க­ளுக்கு பொறுப்­பாக அஹ்னாப் ஜஸீம், ஆசி­ரியர் என்ற ரீதியில் அவர்­க­ளுடன் தங்­கி­யி­ருந்­த­தாக கூறினார்.

அஹ்னாப் ஆசி­ரியர் மாண­வர்­களின் சுய கற்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­ய­தா­கவும், மாண­வர்­க­ளுடன் இருந்­த­வாேற அவர்­களைக் கற்றல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­கு­வித்­த­தா­கவும் தான் ஒவ்­வொரு நாளும் அது தொடர்பில் தேடிப் பார்த்­த­தா­கவும் அதிபர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந் நிலையில் அஹ்னாப் ஜஸீம், மாண­வர்­களின் கற்றல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு புறம்­பாக எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தாக மாண­வர்­க­ளிடம் இருந்தோ, ஏனைய ஆசி­ரி­யர்­க­ளிடம் இருந்தோ அல்­லது பெற்­றோ­ரி­ட­மி­ருந்தோ இது­வரை தனக்கு ஒரு முறைப்­பா­டேனும் கிடைக்­க­வில்லை என அதிபர் குறிப்­பிட்டார்.

இதன்­போது நீதி­மன்றின் அனு­ம­தி­யுடன், அஹ்னாப் ஜஸீ­முக்கு அதிபர் அஜ்மல் வழங்­கி­யுள்ள நற்­சான்று சான்­றிதழ், உயர் நீதி­மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அதன் பிரதி வழக்குக் கோவையில் இணைக்­கப்­பட்­டது.

அதில் அஹ்னாப் ஜஸீம், எந்த அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­க­ளு­டனும் தொடர்பு அற்­றவர் என கூறப்­பட்­டி­ருந்­தது.

அஹ்னாப் ஜஸீம் 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ரேயே ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்­ட­தாக குறுக்கு விசா­ர­ணை­களின் போது ஏற்­றுக்­கொண்ட அதிபர், அந்த சூழலில் முஸ்­லிம்கள் பார்க்­கப்­பட்ட விதம் மற்றும் தனியார் முஸ்லிம் பாட­சா­லைகள் மீது பாது­காப்புத் தரப்­பினர் வைத்­தி­ருந்த அவ­தா­னிப்­புகள் குறித்து அறிந்­தி­ருந்­த­தா­கவும், அவ்­வா­றான சூழலில் ஆசி­ரி­யர்­களை சேர்த்­துக்­கொள்­ளும்­போது தமது பாட­சாலை அது தொடர்­பிலும் அவ­தா­ன­மா­கவே நடந்­து­கொண்­ட­தா­கவும் குறிப்­பிட்டார். அதனால் அஹ்னாப் ஜஸீம் பாட­சா­லையில் இருந்த காலத்தில் எந்த அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­யு­டனும் தொடர்­பு­ப­ட­வில்லை என அவர் குறிப்­பிட்டார்.

இத­னை­விட, மாண­வர்கள் தங்­கி­யிருந்த கட்­டிடம் பாட­சா­லைக்கு அருகே இருந்­ததை மையப்­ப­டுத்தி தானே பணிப்­பாளர் சபையின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­ற­தா­கவும், அது யாரு­டைய கட்­டிடம் என்­பது கூட தனக்கு தெரி­யாது என்றும் அதிபர் குறிப்­பிட்டார். எனினும் பின்னர், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் தன்­னிடம் வாக்கு மூலம் பெறும் போது அது சேவ் த பேர்ள் நிறு­வன கட்­டிடம் என கூறி எழுதிக் கொண்­ட­தாக அதிபர் குறுக்கு விசா­ர­ணை­களின் போது குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து அரச சட்­ட­வாதி சஜித் பண்­டார மீள கேள்­வி­களை அதி­ப­ரிடம் தொடுத்தார்.

அதற்கு பதி­ல­ளித்த அதிபர், அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் தான் வழங்­கிய நற் சான்­றிதழ் சரி­யா­னதே என குறிப்­பிட்டார். அச்­சான்­றி­தழில், அஹ்னாப் ஜஸீம் பொலி­சாரால் கைது செய்­யப்­பட்­டதை இணைக்­கா­தது ஏன் என கேள்வி எழுப்­பிய போது, பொலிஸார் கைது செய்யும் அனை­வரும் குற்­ற­வா­ளிகள் அல்லர் எனவும், நீதி­மன்றம் முடிவு செய்ய முன்னர் தன்னால் முடிவு செய்ய முடி­யாது என கூறிய அதிபர், தனக்கு தெரிந்த அஹ்னாப் எந்த குற்றச் செயல்­க­ளு­டனும் தொடர்­பு­பட்­டவர் அல்ல என்­பதால் அவ்­வாறு நற்­சான்­றிதழ் அளித்­த­தாக கூறினார்.

இத­னை­ய­டுத்து, இவ்­வ­ழக்கை விரை­வாக, சுருக்­க­மாக முடித்­துக்­கொள்­வது தொடர்பில் நீதி­ப­தியின் அவ­தா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இதன்­போது நீதி­பதி நதீ அப்­ரணா சுவந்­து­ரு­கொட, அந்த கோரிக்­கையை பரிந்­து­ரைத்­தவர் யார் என வின­வினார்.

இதன்­போது வழக்குத் தொடுநர், பிர­தி­வாதி தரப்பை கை நீட்ட, பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீ­முக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் அதனை மறுத்தார்.
வழக்குத் தொடுநர் தரப்பு வழக்கு விசா­ர­ணைக்கு ஒரு சில வினா­டி­க­ளுக்கு முன்னர் வழக்கை சுருக்­க­மாக முடித்­துக்­கொள்­வது குறித்து பரிந்­துரை ஒன்­றினை முன் வைத்­த­தா­கவும், தனது சேவை பெறு­ந­ரிடம் கோராமல் அது குறித்து தன்னால் எதுவும் கூற முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு கொண்டு வந்த, வழக்கை அவ­ச­ர­மாக சுருக்­க­மாக முடி­வு­றுத்த எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்­தன.
குறிப்­பாக பயங்­க­ர­வாத தடைச் சட்ட குற்­றச்­சாட்டை நீக்கி, தண்­டனைச் சட்டக் கோவையின் கீழான குற்­றச்­சாட்டு ஒன்­றினை சுமத்தி அதனை ஏற்­றுக்­கொண்டால், ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை ஒன்றின் மூலம் வழக்கை முடி­வு­றுத்­து­வதே சட்ட மா அதிபர் சார்பு திட்டம் என்­பது நீதி­மன்றில் வெளிப்­பட்­டது.

எனினும் அதற்கு நீதி­பதி இட­ம­ளிக்­காமல் தொடர்ந்து சாட்­சி­யங்­களை விசா­ரணை செய்யப் போவ­தாக அறி­வித்து தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.
இத­னை­ய­டுத்து வழக்கில் ஸ்கூல் ஒப் எக்­ச­லன்­ஸியில் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வ­னான தற்­போது 21 வய­து­டைய அபூ தாஹிர் மொஹம்மட் அசிராஜ் எனும் இளைஞன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டா­ரவின் நெறிப்­ப­டுத்­தலில் அவ­ரது சாட்­சியம் அளிக்­கப்­பட்­டது.

இதன்­போது தனது வகுப்பில் தன்­னுடன் கல்­வி­கற்ற, க.பொ. த. சாதா­ரண தர பரீட்சை காலத்தை அண்­மித்து பாட­சா­லை­யினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட தங்­கு­மி­டத்தில் தங்­கி­யி­ருந்து கற்ற 13 சக நண்­பர்­களின் பெயர்­க­ளையும் அசிராஜ் நீதி­மன்றில் தெரி­வித்தார்.
நேர­சூ­சிக்கு அமைய கற்றல் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­ற­தா­கவும், தங்­கு­மி­டத்தில் சுய கற்றல் நட­வ­டிக்­கை­களின் போது, சில பாடங்­களில் சந்­தேகம் ஏற்­படும் போது அஹ்னாப் ஜஸீம் ஆசி­ரியர் அச்­சந்­தே­கங்­களை தீர்த்து வைத்­த­தா­கவும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.
அஹ்னாப் ஜஸீம் ஆசி­ரி­ய­ரிடம் மடிக்­க­ணினி ஒன்று காணப்­பட்­ட­தா­கவும், சில சந்­தே­கங்­களை இணைய வழியே உரிய தர­வுகள், வீடியோ காட்­சிகள் கொண்டு அவர் விளங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கவும் சாட்­சி­யா­ள­ரான மாணவன் குறிப்­பிட்டார்.

எனினும் வழக்குத் தொடுநர் தரப்பின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டார, கற்றல் நட­வ­டிக்கை தவிர்ந்து வேறு ஏதும் நட­வ­டிக்­கைகள் அங்கு நடந்­த­னவா என வின­வினார். எனினும் அதற்கு சாட்­சி­யாளர் அப்­படி எதுவும் நடக்­க­வில்லை என பதி­ல­ளித்தார்.

மீண்டும் மீண்டும் பாடத்தை தவிர வேறு ஏதும் அங்கு நடந்­ததா எனவும், கணி­னியை உப­யோ­கித்து வேறு வீடியோ காட்­சிகள் காண்­பிக்­கப்­பட்­டதா எனவும், அங்கு நடப்­பதை யாருக்கும் கூற வேண்டாம் என அஹ்னாப் ஆசி­ரியர் கூறி­யி­ருந்­தாரா எனவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டார கேள்வி எழுப்­பினார். அவை அனைத்­துக்கும் சாட்­சி­யாளர் இல்லை என்றே பதி­ல­ளித்தார்.

இத­னை­ய­டுத்து, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டார திறந்த மன்றில் விண்­ணப்பம் ஒன்­றினை முன் வைத்தார்.

அரசின் சாட்­சி­யாளர், முதல் சந்­தர்ப்­பத்தில் இருந்த நிலைப்­பாட்டை மாற்றி பிர­தி­வா­திக்கு சார்­பாக சாட்­சியம் அளிப்­ப­தா­கவும், அதனால் அவரை வழக்குத் தொடுநர் தரப்­புக்கு பாத­க­மான சாட்­சி­யா­ள­ராக, சாட்­சிகள் கட்­டளைச் சட்­டத்தின் 154 ஆம் பிரிவின் கீழ் பெய­ரிட்டு குறுக்கு விசா­ரணை செய்ய அனு­மதி கோரினார். பிர­தி­வாதி தரப்­பி­னரும் அதற்கு ஆட்­சே­பனை முன் வைக்­க­வில்லை. இந் நிலையில் அதற்கு நீதி­பதி அனு­ம­தித்தார்.

இத­னை­ய­டுத்து, சாட்­சி­யாளர் அசிராஜ், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கி­ய­தாக கூறப்­படும் முதல் வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்தி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் கேள்­வி­களை தொடுத்தார்.

அதன்­படி, கற்றல் நட­வ­டிக்­கை­களின் இடையே, இரவு நேர உணவை உட்­கொண்ட பின்னர், அஹ்னாப் ஜஸீம் மாண­வர்­களை அழைத்து, தனது மடிக் கணி­னியில் தமி­ழீழ விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் புகைப்­ப­டத்தை காட்­டி­னாரா? என வின­வப்­பட்­டது.

அப்­படி எதுவும் நடக்­கவே இல்லை என சாட்­சி­யாளர் அதற்கு பதி­ல­ளித்தார்.
குறிப்­பாக தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­கரன், ஜாமியா நளி­மியா கலா­பீ­டத்தின் அஷ்ஷேய்க் அகார் முஹம்­மது ஆகி­யோரின் உரைகள் இணை­யத்தில் காண்­பிக்­கப்­பட்­டதா எனவும் அவ்­வாறு உங்கள் பொலிஸ் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்பின் அது சரியா தவறா எனவும் அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் கேள்வி எழுப்­பினார்.

மிக ஆழ­மாக சிந்­தித்த சாட்­சி­யாளர் அசிராஜ் அது தவறு என பதி­ல­ளித்தார்.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவும், இலங்­கையில் முஸ்லிம் ஆட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும் எனவும் அஹ்னாப் ஜஸீம் போதனை செய்­தாரா எனவும், அதற்­காக போராடி மர­ணித்தால் சுவர்க்கம் செல்ல முடியும் என கூறி­னாரா எனவும் வின­வப்­பட்­டது. ஆழ­மாக சிந்­தித்து சாட்­சி­யாளர் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை என பதி­ல­ளித்தார்.
இவ்­வாறு அவ்­வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, அடிப்படைவாதத்தை அஹ்னாப் ஜஸீம் தூண்டியதாக, கற்பித்ததாக கூறப்படும் 8 விடயங்களை சாட்சியாளர் தான் குறிப்பிடாத விடயங்கள் எனக் கூறி மறுத்தார். அவை பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் பரஸ்பர வேறுபாடுகளாக பதிவுச் செய்யப்பட்டன.

இந் நிலையில், சாட்­சி­யாளர் பிர­தி­வா­திக்கு சார்­பாக சாட்­சி­ய­ளிப்­ப­தா­கவும், அவர் அஹ்னாப் ஜஸீமால் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சஜித் பண்­டா­ரவால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. எனினும் அதனை சாட்சியாளர் நிராகரித்தார்.
இதனையடுத்து சாட்சியாளரிடம் பிரதிவாதி அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணை செய்தார்.

முதலில் வாக்கு மூலம் பதிவு செய்ய்ய எத்தனை பேர் வந்தனர் என ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சாட்சியாளர் 4 பேர் வந்ததாகவும் வீட்டில் வைத்தே வாக்கு மூலம் பெற்றதாகவும் கூறினார்.

வந்த பொலிஸ் அதிகாரிகளே வாக்கு மூலத்தை எழுதியதாக சாட்சியாளர் கூறிய நிலையில், எழுதிய பின்னர் அவ்வாக்கு மூலத்தை வாசித்துக் காட்டினார்களா என குறுக்கு விசாரணை செய்தார்.

அதற்கு பதிலளித்த சாட்சியாளர் இல்லை என கூறினார்.

அத்­தோடு அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட குறுக்கு விசா­ரணை நிறை­வுக்கு வந்­தது. இத­னை­ய­டுத்து நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான வழக்­கு­களை அவ­ச­ர­மாக விசா­ரித்து முடிக்க வேண்டும் என்ற பிர­தம நீதி­ய­ர­சரின் ஆலோ­ச­னை­யையும் ஞாப­கப்­ப­டுத்தி வழக்கை எதிர்­வரும் 2023 மார்ச் 23 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார். அன்­றைய தினம் சாட்­சி­ய­ம­ளிக்க வழக்குத் தொடுநர் தரப்பின் 8,9,10 ஆம் இலக்க சாட்­சி­யா­ளர்­களை மன்றில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.