ஐ.எம்.எப். இடமிருந்து கடனை பெறுவதை விட வெளிநாட்டு தொழிலாளர் பங்களிப்பை கோருக

அதுவே பாதுகாப்பான வழிமுறை என்கிறார் சட்டத்தரணி சுஹைர்

0 224

நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­ட­மி­ருந்து 2.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைப் பெற்றுக் கொள்­வதே ஒரே வழி என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கூறி வரு­கிறார். இதனை விடுத்து, மத்­திய கிழக்கு நாடு­களில் தொழில்­பு­ரியும் இலங்­கை­யர்கள் தமது பணத்தை இலங்­கைக்கு அனுப்­பு­வதை மேலும் அதி­க­ரிப்­பதன் மூலம் இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து இல­கு­வாக மீளலாம் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்டுள்ளதா­வது, மத்­திய வங்­கியின் அறிக்­கை­க­ளின்­படி, கடந்த 20 ஆண்­டு­களில், வெளி­நா­டு­களில் பணி புரியும் இலங்கை தொழி­லா­ளர்கள் அனுப்­பிய பணம், நாட்டின் அந்­நியச் செலா­வணி பற்­றாக்­கு­றையில் 80 வீதத்தை ஈடு­கட்­டி­யுள்­ளது. 2015 முதல் 2020 வரை­யி­லான ஆறு ஆண்­டு­களில் பணி­யா­ளர்கள் அனுப்பும் தொகை ஒவ்­வொரு ஆண்டும் சரா­ச­ரி­யாக 7 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு மேல் இருந்­தது. இது நாட்­டிலும் வங்கி முறை­யிலும் அந்­நியச் செலா­வணி பணப்­பு­ழக்­கத்தை கணி­ச­மாக மேம்­ப­டுத்­தி­யது. இவற்றில் 90 வீத­மான தொழி­லா­ளர்கள் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட மத்­திய கிழக்கு நாடு­களில் இருந்தே அனுப்­பு­கின்­றனர்.
ஆனால் 2021 இல் வெளி­நாட்டு தொழி­லா­ளர்கள் அனுப்பும் தொகை 5.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளா­கவும், 2022 இல் 3.8 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளா­கவும் குறை­வ­டைந்­துள்­ளது. 2020 இல் ஈட்­டிய 7.1 பில்­லியன் டொலர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது 2021 இல் 1.6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை நாடு இழந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்­டோடு ஒப்­பி­டும்­போது 2022 இல், 3.3 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை இழந்தோம். முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­சவின் ஆட்சிக் காலத்­தி­லேயே இது நடந்­தது.

இவ்­வாறு கடந்த இரண்டு வரு­டங்­களில் கிட்­டத்­தட்ட 5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை இழந்­துள்ள நிலையில் ஐ.எம்.எப். இட­மி­ருந்து 2.9 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பெறு­வ­தற்கு கடந்த ஒரு வரு­ட­மாக இலங்கை போராடி வரு­கின்­றது. நமது சொந்த நாட்டு மக்கள் மற்றும் பெண்கள் சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு 7 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை நாட்­டுக்கு வழங்கி வந்துள்ளனர். என­வேதான் மீண்டும் இவ்­வா­றா­ன­தொரு தொகையை வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெறு­வ­தற்கு வெளி­நா­டு­களில் உள்ள இலங்கை பணி­யா­ளர்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் ஜனா­தி­பதி மட்­டத்­தி­லா­வது வேண்­டுகோள் விடுக்­கப்­பட வேண்­டாமா? அத்துடன் புதிய வேலைவாய்ப்புகளில் இலங்கையர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு முஸ்லிம் நாடு­களின் தலை­வர்­க­ளி­டமும் ஜனா­தி­ப­தி­யினால் வேண்­டுகோள் விடுக்க முடி­யாதா?

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் 2.9 பில்­லியன் டொலர்கள் மற்றும் அதன் பின்னர் உலக வங்கி மற்றும் ஏனைய கடன் வழங்­கு­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து வரக்­கூ­டி­யவை வட்­டி­யுடன் திருப்பிச் செலுத்­தக்­கூ­டிய கடன்கள் என்­பதை ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்க அறிவார். இவை அனைத்தும் 52 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் தேசியக் கட­னுடன் சேர்ந்து, அடுத்த தலை­மு­றையை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் மத்திய கிழக்கிலிருந்து இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி பணம் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் அல்ல என்பது ஜனாதிபதிக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் தெரியும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.