இந்தியாவின் அதிஉயர் விருது பெறும் குமார் நடேசன்

0 187

சமூக சேவை­யா­ளரும் ஊட­கத்­து­றைசார் பிர­தி­நி­தியும் வீர­கே­ச­ரி மற்றும் விடி­வெள்ளி பத்­தி­ரி­கை­க­ளை வெளி­யிடும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்­டெட்டின் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான குமார் நடே­ச­னுக்கு இந்­தி­யாவின் அதி உயர் விரு­தான பிர­வாசி பார­தீய சம்மான் விருது வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

பிர­வாசி பார­தீய சம்மான் விருது என்­பது வெளி­நாட்­டுவாழ் இந்­தி­யர்­க­ளுக்கு வழங்­கப்­படும் உய­ரிய கெள­ர­வ­மாகும். இந்த விருது வழங்கும் வைபவம் எதிர்­வரும் 8 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யி­லி­ருந்து 10 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வரை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள வெளி­நாடு வாழ் இந்­தி­யர்கள் தினத்தின் அங்­க­மாக மத்­தியப் பிர­தே­சத்­தி­லுள்ள இந்­தூரில் இடம்­பெ­ற­வுள்­ளது.

17 ஆவது தட­வை­யாக வழங்­கப்­படும் இந்த விரு­துகள் வெளி­நா­டு­களில் வாழும் இந்­திய வம்­சா­வளி தனி­ந­பர்கள், இந்­தி­யாவில் வசிக்­காத இந்­தி­யர்கள் மற்றும் இந்­திய வம்­சா­வளி தனி­ந­பர்கள் ஆகி­யோரால் ஸ்தாபிக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­படும் அமைப்­புகள் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தி­யா­விலும் வெளி­நா­டு­க­ளிலும் அவர்கள் மேற்­கொண்ட சிறந்த சாத­னை­களை அங்­கீ­க­ரிக்கும் வகையில் இந்­திய ஜனா­தி­ப­தியால் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்த ஆண்­டுக்­கான பார­தீய சம்மான் விரு­துகள் அந்த விரு­துகள் தொடர்­பான நடு­வர்கள் சபையில் முன்­வைக்­கப்­பட்ட விருது பெறு­ப­வர்கள் பட்­டி­யலைப் பின்­பற்றி வழங்­கப்­ப­டு­கின்­றன.

உப ஜனா­தி­ப­தியை தலை­வ­ரா­கவும் வெளிவிவ­கார அமைச்­சரை உப தலை­வ­ரா­கவும் தமது வாழ்­நாளில் பல்­வேறு துறை­களில் தடம் பதித்த ஏனைய கீர்த்­தி ­பெற்ற உறுப்­பி­னர்­க­ளையும் கொண்ட மேற்­படி விரு­து­க­ளுக்­கான நடுவர் சபையால் இந்த ஆண்­டுக்­கான பிர­வாசி பார­தீய சம்மான் விரு­து­க­ளுக்­கான நிய­ம­னங்கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு விருது பெறுவோர் ஏக­ம­ன­தாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இம்­முறை உல­க­ளா­வி­ய ­ரீ­தியில் 27 பேர் இந்த விரு­துக்கு தெரி­வா­கி­யுள்­ளனர். இதில் இலங்­கை­யி­லி­ருந்து சிவ­குமார் நடேசன் (குமார் நடேசன்) இந்த விரு­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

குமார் நடேசன் பிரிட்டிஷ் பேர­ரசின் ஆணையைப் பெற்ற ஆர்.ஏ. நடே­சனின் புதல்­வ­ராவார். கொழும்பில் பிறந்த இவர் தனது ஆரம்­பக்­கல்­வியை கொழும்பு சென். தோமஸ் கல்­லூ­ரி­யிலும் உயர் கல்­வியை சென்னை லோயலா கல்­லூ­ரி­யிலும் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பயின்றார். அத்­துடன் தொழில்­நிலை பட்­டப்­ப­டிப்­பா­கிய பரிஷ்டர் கற்­கையை லண்­டனில் கற்றார். அதனைத் தொடர்ந்து 15 ஆண்­டுகள் இலங்கை உயர் நீதி­மன்­றத்தில் சட்­டத்­த­ர­ணி­யாக கட­மை­யாற்­றினார்.

குமார் நடேசன் கடந்த 22 ஆண்டு கால­மாக வீர­கே­சரி நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­கு­ந­ராக கட­மை­யாற்­றி­வ­ரு­கின்றார். அத்­துடன் இந்­திய வம்­சா­வளி மக்­களின் உல­க­ளா­விய அமைப்பின் (கோபியோ– இலங்கை கிளை) தலை­வ­ராக செயற்­ப­டு­வ­துடன் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக கடந்த 15 வரு­ட­காலமாக பணி­யாற்றி வரு­கின்றார்.

இலங்கை, இந்­திய நட்புறவு சங்­கத்தின் தலை­வ­ரா­கவும் அவர் பணி­யாற்­றி­யி­ருந்தார். ரோட்­டரி கழ­கத்தின் கொழும்­புக்­கி­ளையின் அங்­கத்­த­வ­ராக திகழும் இவ­ரது சேவையைப் பாராட்டி சர்­வ­தேச ரோட்­டரி கழ­க­மா­னது ‘சுய­வே­லைக்கு மேல் சேவை’ என்ற பட்­ட­ம­ளித்து கெள­ர­வித்­தி­ருந்­தது. போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு எதி­ரான தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்பின் முன்னாள் தலை­வ­ரா­கவும் இவர் பதவி வகித்­துள்ளார். தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தன்னார்வ தொண்டு குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
இவர் சின்­மயா மிஷன் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார். இவ்­வாறு பல்­வேறு அமைப்­புக்­க­ளிலும் அங்­கத்­துவம் வகித்து மக்கள் சேவை­யாற்­றி­வரும் குமார் நடே­ச­னுக்கு இந்த விருது வழங்­கப்­ப­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கதாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.