பாதாள உல­கமும் அர­சி­யல்­வா­தி­க­ளும்

0 335

நன்றி: த ஐலண்ட் ஆசிரியர் தலையங்கம்
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

பிர­பல பாதாள உல­கத் ­த­லை­வ­னான கஞ்­சி­பானை இம்ரான் எனப்­படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் பிணையில் விடு­விக்­கப்­பட்ட மறு­தினம் இந்­திய ஊட­கங்­களின் தக­வல்­க­ளின்­படி இந்­தி­யா­வுக்குள் நுழைந்­துள்ளார். அதா­வது பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில் இலங்­கை­யி­லி­ருந்­து ­இந்­தி­யா­வுக்குத் தப்­பி­யோ­டி­யுள்ளார்.

கஞ்­சி­பானை இம்ரான் இவ்­வாறு இந்­தி­யா­வுக்குள் தப்­பி­யோ­டி­யுள்­ளமை ஓர் அதிர்ச்­சி­யான தகவல் அல்ல. அவர் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து தனக்­கெ­தி­ரான வழக்­கினை எதிர்­கொள்­வா­ரென எவரும் எதிர்­பார்க்­க­வில்லை. நாட்டில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நிலையில் ‘பாட­சாலை பிள்­ளை­களை போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்தும் காப்­பாற்­று­வ­தற்­காக அரசு மும்­மு­ர­மாக செயலில் இறங்­கி­யுள்ள நிலையில் கஞ்­சி­பானை இம்­ரானின் தப்­பி­யோட்டம் நிகழ்ந்­துள்­ளது.

இலங்கை பொலி­ஸாரும், ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் பொலி­ஸாரும் இணைந்து கஞ்­சி­பானை இம்­ரா­னையும், மற்­றொரு போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­யான மாகந்துர மது­ஷையும் கைது செய்­வ­தற்கு மும்­மு­ர­மாக செயற்­பட்டார்கள். மாகந்­துர மதுஷ் குற்­றச்­செ­யல்­களின் இலங்கை நெப்­போ­லியின் என அழைக்­கப்­பட்­ட­வ­னாவான். அவர்கள் இரு­வரும் 2019 ஆண்டு டுபாயில் கைது செய்­யப்­பட்­ட­டார்கள். டுபா­யி­லி­ருந்து இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்ட அவர்கள் இலங்­கையில் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டார்கள்.

அக்­கா­லத்தில் இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கையில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான யுத்­தத்­திற்கு தலைமைத்­துவம் வழங்­கினார். என்­றாலும் எதி­ர்­பா­ரா­த­வி­த­மாக இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நாட்டின் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரா­ன­ செ­யற்­பா­டு­களை ஸ்தம்­பி­த­ம­டையச் செய்­தது.
நாட்­டி­லி­ருந்தும் சூட்­சு­ம­மாக தப்­பி­யோடிச் சென்­றுள்ள கஞ்­சி­பானை இம்ரான், வெளி­நா­டு­களில் பல போதைப்­பொருள் மன்­னர்கள் செயற்­ப­டு­வது போன்று தனது போதைப்­பொருள் விநி­யோக செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை.
குற்­றத்­த­டுப்புப் பிரிவு அதி­கா­ரிகள் கஞ்­சி­பானை இம்­ரானைக் கைது செய்­வ­தற்கு டுபாயில் மேற்­கொண்ட அதி­ர­டி ­ந­ட­வ­டிக்­கைகள் இந்­தி­யா­விலும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

பாதாள உலக கோஷ்­டி­யுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அர­சியல் பின்­பு­லத்தின் மூலமே தொடர்ந்தும் சட்­டத்­தின்­பி­டியில் சிக்­காது தப்­பித்து வரு­கின்­றனர். அவ்­வாறு சட்­டத்­தின்­பி­டியில் சிக்­குண்­டாலும் ஏதோவொரு வகையில் தப்­பித்துக் கொள்­கின்­றனர். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ‘குடுலால்’ என அறி­யப்­படும் போதைப்­பொருள் மன்னன் இலங்­கையில் வெளி­யே­று­வ­தற்கும் அனு­ம­திக்­கப்­பட்டார். குடுலால் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஊடாக அப்­போ­தி­ருந்த அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் ஒரு­வ­ரின் உத­வி­யுடன் வெளி­யே­றினார். குடுலால் கள­னி­யவை இலங்­கையின் போதைப்­பொருள் தலை­ந­க­ர­மாக மாற்­றி­யி­ருந்­த­வ­ராவார். சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் குடுலாலை விமான நிலை­யத்தில் பய­ணி­கள் விமா­ன­மேறும் வழி வரை அழைத்துச் சென்றார்.

எமது நாட்டில் அர­சி­யலும் குற்றச் செயல்­களும் ஒன்­றுடன் ஒன்று பின்னிப் பிணைந்­துள்­ளன. ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் மாற்றம் ஏற்­பட்­டாலும் இந்­நி­லை­மையே தொடர்கி­றது. 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­போது கஞ்­சி­பானை இம்ரான் பலம் வாய்ந்­த­வ­ராக இருந்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் உட்­பட அர­சியல்வாதிகள் தங்­க­ளது பத­வி­நி­லை­களை மறந்து கஞ்­சி­பானை இம்­ரானின் போதைப்­பொருள் பணத்தை செலாவ­ணி­யாக மாற்­றிக்­கொள்­வ­தற்கு உத­வி­யாக இருந்­தார்கள். கஞ்­சி­பானை இம்ரான் ஒரு ‘கெப்’ சேவை உட்­பட மேலும் பல வர்த்­த­க­ங்­களில் முத­லீ­டு­களைச் செய்­வ­தற்கு உத­வி­யாக இருந்­தார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த சில முன்­னணி தலை­வர்கள் இம்­ரானின் வியா­பார நிலைய திறப்பு நிகழ்­வு­களில் விசேட அதி­தி­க­ளாகக் கலந்து கொண்­டார்கள். இவர்­களில் சிலர் தற்­போது ஐக்­கிய மக்கள் சக்தி கட்­சியில் அங்கம் வகிக்­கின்­றனர்.

தற்­போது கஞ்­சி­பானை இம்ரான் இல­கு­வாக தப்­பி­யோ­டி­யுள்ளார். இம்­ரானின் அர­சியல் நண்­பர்கள் இதற்கு ஒத்­து­ழைத்­துள்­ளார்கள். வழக்கு விசா­ரணை இடம்­பெற்றால், சம்­பந்­தப்­பட்ட அர­சி­யல்­வா­திகள் இனங்­கா­ணப்­ப­டு­வார்கள். இந்­நி­லை­மையே இம்­ரானை தப்­பி­யோடச் செய்­தி­ருக்­கி­றது என ஊட­கங்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளன.

இம்ரான் ஒரு வகையில் அதிஷ்­ட­சாலி, அவர் அவ­ரது பாதாள உலக நண்பர் மாகந்­து­ர­ம­து­ஷைப் ­போன்று மடிந்­து­வி­ட­வில்லை. கொல்­லப்­பட்­டு­வி­ட­வில்லை. மாகந்­துர மதுஷ் பொலி­ஸாரின் துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கத்­துக்கு இலக்­காகி மர­ணித்தார்.

மாகந்­துர மதுஷை போதைப்­பொருளை மறைத்து வைத்­தி­ருந்த இடத்­துக்கு அழைத்துச் சென்ற சந்­தர்ப்­பத்­திலே பாதாள உல­கக்­கோஷ்­டிக்கும், பொலி­ஸா­ருக்கும் இடையில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சமரில் அவர் கொல்­லப்­பட்­டார்.

பல அர­சியல்வாதிகள் மது­ஷி­ட­மி­ருந்து அவர்­க­ளது சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளுக்கும் அர­சியல் செல­வு­க­ளுக்கும் பெரு­ம­ளவு உத­வி­க­ளையும் நிதி­யி­னையும் பெற்று வந்­தனர். மதுஷ் மூலம் தங்­க­ளது மோச­மான செயற்­பா­டுகள் ஊழல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­து­விடும் என்­ப­த­னா­லேயே அவர் இந்­நி­லைக்கு ஆளாக்­கப்­பட்டார்.

அர­சி­யல்­வா­தி­க­ளுக்­காக செயற்­படும், பணி­பு­ரியும் அனைத்து பாதாள உலக கோஷ்டி மன்­னர்­களும் அர­சியல் வாதி­களால் ‘கரு­வேப்­பிலை’ போன்றே கரு­தப்­பட்­டார்கள். தங்கள் தேவைக்குப் பயன்­ப­டுத்­தி­விட்டு தூக்­கி­யெ­றி­யப்­பட்­டார்கள்.

கோண­வ­ல–­சுனில் ஒரு கொலை­காரன். கற்­ப­ழிப்­பவன். இவன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் இழி­வான வேலை­க­ளையே செய்து கொண்­டி­ருந்தான். அவன் தனது அர­சியல் தலை­வர்­க­ளுக்­கெ­தி­ராக மாறி­யதால் சுட்டுக் கொல்­லப்­பட்டான்.

ஒப்­பந்­தக்­கா­ரனும், கொள்ளை மற்றும் பலாத்­கார செயல்­களில் ஈடு­பட்­ட­வ­னு­மான பெந்ே­த­கன சஞ்­ஜீவ ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அர­சுக்கு விசு­வா­ச­மாக செயற்­பட்­டவன். என்­றாலும் அவன் தனது எல்­லையை மீறி செயற்­பட்­ட­தனால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டான்.

மேலும் வம்­பொட்டா, பிரின்ஸ் கொலொம் என்­போரும் வன்­முறை சாவு­க­ளையே எதிர்­கொண்­டனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நெருங்கி செயற்பட்டவர்களாவர்.

இது போன்று பல பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்­த­வர்கள் தொடர்ந்தும் அர­சி­ய­லுடன் தொடர்பு பட்­ட­வர்­க­ளாக இன்றும் இருக்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடாத்­தப்­படும் கால கட்­டத்தில் இவர்கள் விழிப்­ப­டை­வார்கள், சுறு­சு­றுப்­பாக செயற்­ப­டு­வார்கள்.

சில குற்­ற­வா­ளிகள் எவ்­வா­றேனும் தப்­பித்­துக் ­கொள்­கி­றார்கள், தப்­பி­யோ­டி­வி­டு­கி­றார்கள். இதற்கு முக்­கிய காரணம் சட்­டத்தில் உள்ள ஓட்­டை­களே. அவர்­க­ளுக்கு சாத­க­மான பொய்­யான கார­ணங்கள் சிருஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. மோசடி அர­சியல்வாதிகள் இவ்­வா­றான குற்­ற­வா­ளி­க­ளுக்கு உதவி செய்­கி­றார்கள். இதனால் பொலி­ஸா­ரினால் குற்றச்செயல்களுக்கு எதிராக செயற்படுவதில் சிக்கல்கள் உருவாகின்றன. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.