உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

0 216

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பத­வி­யி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கலைத்து தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­களைக் கோரு­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் கோரும் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மாவட்ட தேர்தல் அதி­கா­ரி­க­ளாகக் கட­மை­யாற்றும் மாவட்ட செய­லா­ளர்­க­ளினால் வெளி­யி­டப்­படும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்­சி­ஹேவா தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் 5 ஆம் திகதி முதல் 10ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் இப்­பணி முடி­வ­றுத்­தப்­படும் எனவும் அவர் கூறினார். உரிய வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் தயா­ரிக்­கப்­பட்டு அந்­தந்த மாவட்ட தேர்தல் அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான செலவு 10 பில்­லியன் ரூபா­வாக அமையும் என தேர்­தல்கள் ஆணைக்­குழு மதிப்­பீடு செய்­துள்­ளது. இத்­தேர்தல் கடந்த காலங்­களில் போன்று வார இறுதி நாட்­களில் இடம்­பெ­றாது வார நாட்­க­ளிலே நடை­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் கட்­டளைச் சட்­டத்­தின்­படி வேட்பு மனு தாக்கல் பூர்த்­தி­யாகி 5 முதல் 7 வாரங்­க­ளுக்குள் தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும்.

நாட்டில் 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இயங்கி வரு­கின்­றன. இவற்றில் 24 மாந­கர­ ச­பை­க­ளாகும். 41 நக­ர­ச­பை­க­ளாகும். 276 பிர­தேச சபை­க­ளாகும். கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ஒரு வருட காலத்தால் பிற்­போட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெந்­த­ரஸ்­பி­டிய பிர­தேச சபை தவிர்ந்த ஏனைய 340 உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ஒரு­வ­ருட காலத்தால் பிற்­போ­டப்­பட்­டுள்­ளன. பெரந்­தஸ்­பி­டிய பிர­தேச சபையின் பத­விக்­காலம் ஒரு வருடம் 4 மாதங்­களின் பின்பே முடி­வு­ற­வுள்­ளது.

தேர்தல் உரிய காலத்தில் நடாத்­தப்­ப­ட­வேண்­டு­மென உயர்­நீ­தி­மன்றம் ஏற்­க­னவே 2017, 2018 களில் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் தேர்­தலை விரை­வாக நடாத்­து­மாறு தேசிய தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­வு­றுத்­து­மாறு எதிர்­கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள இரண்டு ரிட் மனுக்கள் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 18 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே வேளை தற்­போது அமு­லி­லுள்ள தேர்தல் முறை­மையின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டுவோர் எண்­ணிக்கை 8700 ஆகும். இந்த உறுப்­பினர் எண்­ணிக்­கையை அரை­வா­சி­யாக குறைக்கும் தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மேற்­கொண்­டுள்ளார். இத்­தீர்­மா­னத்தை அமு­லுக்கு கொண்­டு­வரும் வகையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்­லைகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கென எல்லை நிர்­ணய குழு­வொன்றும் பிர­த­மரால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­குழு தனது பணி­யினை ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ளது. மாவட்ட ரீதியில் இப்­ப­ணிகள் நடை­பெற்று வரு­கின்­றன. எல்லை நிர்­ண­யக்­குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 28 ஆம் திக­திக்கு முன்பு கைய­ளிக்க வேண்டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடாத்­தப்­ப­டுமா? என்­பது சந்­தே­கத்­துக்­கி­ட­மா­க­வுள்­ளது. அவ்­வாறு உரிய காலத்தில் நடத்­தப்­ப­டு­மாயின் தற்­போது அமு­லி­லுள்ள தேர்தல் முறைமை (கலப்பு)யின் கீழே நடாத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்றாலும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்பு கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.