தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன்

இனாமலுவே சுமங்கல தேரர் தெரிவிப்பு

0 345

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் தமது வணக்க வழி­பா­டு­களை தொடர்ந்தும் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி மேற்­கொள்­வ­தற்கு அரச காணி வழங்­கப்­பட்­டது. இதற்­கான ஏற்­பா­டு­களை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் இணைந்து நானே முன்­னெ­டுத்தேன். புதிய காணியில் பள்­ளி­வா­சலை நிறுவ நானும் நிதி­யு­தவி வழங்­கி­யுள்ளேன். பள்­ளி­வா­சலின் அபி­வி­ருத்­திக்கு தொடர்ந்தும் உத­வுவேன்.’ என தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை சங்க சபாவின் தலைவர் இனா­ம­லுவே சுமங்­கல தேரர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் புதிய இடத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு அதன் திறப்பு விழாவில் இனா­ம­லுவே சுமங்­கல தேரரும் கலந்து கொண்­டி­ருந்தார். இது தொடர்பில் வின­விய போதே அவர் விடி­வெள்­ளிக்கு மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘இந்­நாட்டின் மக்­க­ள­னை­வரும் இலங்­கை­யர்கள் எமக்குள் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்­க­ளென்ற பாகு­பாடு தேவை­யில்லை. எமக்குள் சகோ­த­ரத்­துவம் பலம் பெற­வேண்டும். நல்­லி­ணக்கம் உரு­வாக வேண்டும். சிலரின் அடிப்­படை வாத கொள்­கை­களை முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றன. இது களை­யப்­ப­ட­வேண்டும்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் A9 பாதை அபி­வி­ருத்தி பணி­க­ளுக்குத் தடை­யாக இருந்தால் முஸ்­லிம்கள் பள்­ளியை வேறு இடத்­துக்கு அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொண்டால் புதிய பள்ளி நிர்­மா­ணத்­துக்கு நானும் பங்­க­ளிப்பு செய்வேன் என 10 வரு­டங்­க­ளுக்கு முன்பு நான் கூறி­யி­ருந்தேன். அந்த வாக்­கு­று­தி­யினை நான் நிறை­வேற்றி விட்டேன்.

முஸ்­லிம்கள் எனது சகோ­த­ரர்கள். அவர்­க­ளது வணக்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டு­வதை நான் விரும்­ப­வில்லை. அத­னா­லேயே நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் கலந்­து­ரை­யாடி பள்­ளி­வா­ச­லுக்கு புதிய காணியைப் பெற்­றுக்­கொடுத் தேன். தற்­போது A9 வீதி அபி­வி­ருத்­தியின் தடையும் நீங்­கி­யுள்­ளது.

தற்­போது பள்ளி வாச­லுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி முன்பு தம்­புள்ளை விகா­ரைக்குச் சொந்­த­மா­ன­தாகும். நரக அபி­வி­ருத்தி திட்­டத்­துக்­காக இக்­கா­ணியை அரசு சுவீ­க­ரித்­தது, அக்­கா­ணியில் ஒரு பகு­தியே முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­ச­லுக்­காக வழங்­கப்­பட்­டது.
இப்­போது முஸ்­லிம்­க­ளிடம் நான் மகிழ்ச்­சியைக் காணு­கிறேன். எனக்கும் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. இலங்­கை­யர்கள் நாம் இன மத ரீதியில் முரண்­பட்­டுக்­கொள்­ளாது நாட்டின் அபி­வி­ருத்­திக்குப் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்றார்.

இதே­வேளை நகர அபி­வி­ருத்தி மற்றும் வீட­மைப்பு அமைச்சின் பிர­திப்­ப­ணிப்­பாளர் (திட்­ட­மிடல்) எல்.எம்.சமந்த குமார ஹைரியா பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு கடித மொன்­றினை கடந்த 8 ஆம் திகதி அனுப்பி வைத்­தி­ருந்தார்.

அக்­க­டி­தத்தில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். ‘A’ 9 பாதை அபி­வி­ருத்­தியை விரை­வாக தடை­க­ளின்றி மேற்­கொள்­வ­தற்கு தற்­கா­லிக தகர நிர்­மா­ணத்தை விரை­வாக அகற்றிக் கொள்­ளு­மாறு கோரு­கிறேன். புதி­தாக வணக்க ஸ்தலத்தை நிர்­மா­ணித்துக் கொள்ள 20 பேர்ச் காணி வழங்கத் தீர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

காணியின் உரிமை எதிர்­கா­லத்தில் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை, உள்­ளூ­ராட்சி மன்றம் மற்றும் ஏனைய அரச நிறு­வ­னங்­களின் அனு­ம­தி­யின்றி நிரந்தர கட்டிடம் அமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் வழங்கப்பட்ட காணியில் பள்ளிவாசலை புதிதாக நிர்மாணித்துக் கொண்டுள்ளது. அத்தோடு பழைய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.