மஹர பள்ளிவாசல் விவகாரம்: ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை

பள்ளிவாசல் நிர்வாகம் குற்றச்சாட்டு

0 195

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளதால் இப்­ப­குதி முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­க­ளுக்குத் தடை­யேற்­பட்­டுள்­ளது. எனவே அவர்­களின் சம­யக்­க­ட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஊடாக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடிதம் அனுப்­பியும் இது வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. பதில் கூட அனுப்­பப்­ப­ட­வில்லை என மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் ஹபீல் லக்ஸான் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்; நூறு வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்­கி­வந்த இப்­பள்­ளி­வாசல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பாது­காப்­பினை காரணம் காட்டி சிறைச்­சாலை நிர்­வா­கத்­தினால் கையேற்­கப்­பட்டு வேறு விட­யங்­க­ளுக்­காக பள்­ளி­வாசல் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பள்­ளி­வாசல் 1967ல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அஹ­தியா பாட­சா­லையும் இங்கு நடாத்­தப்­பட்­டது எனும் விப­ரங்­க­ளுடன் ஜனா­தி­ப­திக்கு கடிதம் வழங்­கி­யுள்ளோம்.

இக்­க­டி­தங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத்­சாலி ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டன. ஆனால் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து இது­வரை எவ்­வித பதிலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப்­ஹக்கீம், மற்றும் முஜிபுர் ரஹ்மான் என்­போரை நேரில் சந்­தித்தும் இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­தது. மற்றும் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ­மட்­டையும் நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. ஆனால் சந்­திப்­புகள் தொடர்பில் இது­வரை ஏதும் முன்­னேற்­றங்கள் இடம்­பெ­ற­வில்லை.
அத்­தோடு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானும் மஹர பள்­ளி­வாசல் தொடர்பில் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பினார்.

அத­னை­ய­டுத்து அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் பொருத்­த­மான காணி­யொன்­றினை இனங்­கா­ணு­மாறும் அவ்­வி­டத்தில் பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் அறி­வித்­துள்ளார் என்றார்.

இவ்­வா­றான நிலையில் இவ்­வி­வ­காரம் தொடர்ந்தும் தாம­த­மா­கி­வ­ரு­வதால் மஹர பகுதி மக்­களின் சம­யக்­க­ட­மை­க­ளுக்கு தொடர்ந்தும் சவால்கள் எழுந்­துள்­ளன. எனவே விரைவில் மஹர பகுதி மக்­க­ளுக்கு பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணித்து தர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­ப­தியைக் கோரியுள்ளோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.