ஜனாதிபதியின் இரட்டை வேடம்

0 316

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ ஒரு பக்­கத்தில் ஹிட்­ல­ரா­கவும் மறு பக்­கத்தில் ஒரு சமா­தானப் பற­வை­யா­கவும் தன்னைக் காட்­டிக்­கொண்டு இலங்­கையின் எதிர்­கா­லத்­தை­யிட்டு ஒரு கன­வு­லகைப் படைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். அந்தக் கன­வு­ல­கையும் அவ­ரது இரு வேடங்­க­ளையும் பற்­றிய ஒரு சிறு குறிப்பே இக்­கட்­டுரை.

ஜனா­தி­ப­தியின் கனவு
இலங்­கையின் நூறா­வது சுதந்­தி­ர­தின வரு­டத்தில், அதா­வது 2048ல், வியத்­தகு பொரு­ளா­தார முன்­னேற்­றத்தைக் கண்டு, முத­லா­வது உலக நாடு­களின் குடும்­பத்துள் ஓர் அங்­கத்­த­வ­னாக இலங்கை திகழும் என்று ஏற்­க­னவே ஓரிரு சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ பேசி­யுள்ளார். அந்தக் கனவை நன­வாக்கும் பாதையில் அவர் எடுத்­து­வைத்த முத­லா­வது கால­டிப்­ப­தி­வாக அமைந்­துள்­ளது அண்­மையில் நிதி அமைச்சர் என்ற முறையில் நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த 2013ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவு அறிக்­கையும் அதனைத் தொடர்ந்து அவர் ஆற்­றிய உரையும்.

திறந்த பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­ப­டையில் டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தை கரு­வி­யாகக் கொண்டு வெளி­நாட்­ட­வரின் முத­லீ­டு­க­ளுடன் ஏற்­று­மதித் துறையை வளர்த்து அந்த வளர்ச்­சி­யின்­மூலம் செல்வம் திரட்டி தனது கனவை நன­வாக்க அவர் முயல்­கின்றார். அதற்கு அடிப்­படைத் தேவை­யாக அர­சாங்­கத்தின் பட்­ஜட்டில் மிகை காண­வேண்டும், அல்­லது சம­நிலை காண­வேண்டும். அதுவும் முடி­யா­விட்டால் விரி­வ­டைந்­து­செல்லும் பற்­றாக்­கு­றை­யை­யா­வது படிப்­ப­டி­யாகக் குறைக்க வேண்டும். அதைத்தான் சர்­வ­தேச நாணய நிதி ஆலோ­ச­கர்­களும் அந்­நிதி உத­விக்­கான நிபந்­த­னை­களுள் முக்­கி­ய­மா­ன­தொன்­றாக விதித்­துள்­ளனர். ஆகவே அர­சாங்­கத்தின் அவ­சி­ய­மற்ற செல­வி­னங்­களைக் குறைத்து வரு­மா­னத்தைப் பெருக்­கு­வது அவ­சியம். என­வேதான் வரிகள் உயர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் செல­வி­னங்­களோ எதிர்­பார்த்­த­படி குறை­ய­வில்லை. குறைப்­பதும் கஷ்டம். இந்த விப­ரங்­களை விரி­வாக விளக்­கு­வது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல. மாறாக, ஜனா­தி­ப­தியின் கனவு நன­வா­கு­வ­தற்குச் சவால்­க­ளாக விளங்கும் பல விட­யங்­க­ளுக்குள் இரண்டைப் பற்­றி­மட்டும் இக்­கட்­டுரை கவனம் செலுத்­து­கி­றது. ஒன்று, இளந்­த­லை­மு­றையின் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள், மற்­றது இனப்­பி­ரச்­சினை. இரண்டும் அவர் எதிர்­நோக்கும் சவால்கள். முத­லா­வ­துக்கு ஹிட்­ல­ரா­கவும் இரண்­டா­வ­தற்கு சமா­தானப் பற­வை­யா­கவும் அவர் வேடம்­போடத் தொடங்­கி­யுள்ளார்.

ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்குத் தடை
இனிமேல் ஓர் அர­க­லய ஆர்ப்­பாட்டம் நடை­பெ­று­வதை படை­கொண்­டா­கிலும் தடுப்பேன் என ஹிட்லர் வேடத்தில் அறை­கூவல் விடுத்­துள்ளார். அதா­வது அடக்­கு­மு­றையைக் கையாண்­டா­வது தனது கனவை நன­வாக்க அவர் துணிந்­து­விட்டார் என்­ப­தையே அந்த அறை­கூவல் வெளிப்­ப­டுத்­து­கி­றது. இதில் வேடிக்கை என்­ன­வென்றால் அர­க­லய இளை­ஞர்­களின் ஆர்ப்பாட்டம் அன்று நடை­பெ­றா­தி­ருந்தால் விக்­கி­ர­ம­சிங்ஹ இன்று ஜனா­தி­ப­தி­யா­கவும் நிதி அமைச்­ச­ரா­கவும் நிச்­ச­ய­மாக பத­வி­யி­லி­ருக்க மாட்டார். அந்த இளை­ஞர்­களின் முதுகை ஏணி­யாக்கி உச்­சத்­துக்கு வந்­தபின் அந்த ஏணி­யையே எட்டி உதைக்கும் இந்த ஜனா­தி­ப­தியை பசுத்தோல் போர்த்­திய புலி என அழைப்­பதில் தவறுண்டா? முன்­னைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவை ஹிட்­ல­ராக மாறி­யா­வது நாட்டை வளர்க்­கு­மாறு ஒரு பௌத்த துறவி வேண்டிக் கொண்டார். ஆனால் அவர் ஹிட்லர் ஆகா­மலே நாட்டை வங்­கு­ரோத்­தாக்கி வெளி­யே­றி­விட்டார். இப்­போது அந்த வேடத்தை அணிந்து அர­க­லய ஆர்ப்­பாட்­டங்­களைத் தடை­செய்ய முற்­பட்­டுள்ளார் ரவி.
அர­க­ல­யவை இவர் வெறுப்­ப­தற்கும் அதைக்­கண்டு பயப்­ப­டு­வ­தற்கும் காரணம் என்ன?

அடிப்­ப­டை­மாற்றம்
அர­க­லய இளை­ஞர்­களின் முக்­கி­ய­மான வேண்­டுகோள் நாட்டின் அர­சி­ய­லிலும் நிர்­வா­கத்­திலும் பொரு­ளா­தாரப் பரா­ம­ரிப்­பிலும் அடிப்­படை மாற்றம் வேண்டும் என்­பதே. அந்த மாற்­றத்தை கொண்­டு­வரும் துணிவும் வல்­ல­மையும் இன்று நாடா­ளு­மன்­றத்­துக்குள் குந்­திக்­கொண்­டி­ருக்கும் அமைச்­சர்­க­ளுக்கும் அவர்­களின் பிர­தி­நிதிப் பரி­வா­ரங்­க­ளுக்கும் இல்லை என்­பதை அவ்­வி­ளை­ஞர்கள் உணர்ந்­த­த­னா­லேயே “225 வேண்டாம்” என்ற கோஷத்­தையும் முன்­வைத்துப் போரா­டினர். அவர்கள் வேண்டும் மாற்­றத்­தைப்­பற்றி விளங்­கு­தற்கு முன்னர் இந்த இளை­ஞர்கள் யார் என்­பதை முதலில் அறிதல் அவ­சியம்.

விழிப்­ப­டைந்த இளை­ய­த­லை­முறை
வெட்டிப் பேச்­சு­க­ளிலும் வேடிக்­கை­யான கேளிக்­கை­க­ளிலும் காலத்தை கடத்தி, பொழு­து­போக்­குக்­காக பக­லிலே ஆர்ப்­பாட்டம் நடத்தி பொழுது மறைந்­தபின் வீடு­க­ளுக்குச் சென்று உறங்கும் உயர்­தர, நடுத்­தர வர்க்­கங்­களின் செல்லப் பிள்­ளை­களோ அல்­லது அர­சி­யல்­வா­தி­களால் ஏவி விடப்­பட்ட கைக்­கூ­லி­களோ அல்ல இந்த இள­வல்கள். மாறாக, இன்று உல­கெங்கும் உரு­வா­கி­யுள்ள இளைய தலை­முறை நவீன மாற்­றங்­களால் உந்­தப்­பட்டு, கல்­வி­யினால் விழிப்­புற்று, மனி­த­சந்­ததி மட்­டு­மல்­லாமல் அத­னுடன் ஒன்றி இயற்கை அன்­னையின் மடி­யிலே தவழும் அத்­தனை ஜீவ­ரா­சி­களும் அவற்றின் சூழலும் காலா­தி­கா­ல­மாகப் பாது­காக்­கப்­பட்டு வளர்ச்சி காண­வேண்டும் என்ற உய­ரிய எண்­ணத்­துடன் செயற்­படும் ஒரு துடிப்­புள்ள சமு­தாயம். அவ் இள­வல்­களின் விரி­வா­னதும் மனி­தா­பி­மா­ன­து­மான அபி­லா­ஷைகள், அவர்கள் விளை­யாட்டுப் பொருள் போன்று பாவிக்கும் நூதனக் கரு­விகள், அக்­க­ரு­விகள் புரியும் வித்­தைகள், இவ் இள­வல்­களின் தலை­மு­றையின் உல­க­ளா­விய தொடர்­புகள் என்­ப­ன­வெல்லாம் அவர்­களின் பெற்­றோ­ருக்கும் பாட்டி பாட்­டன்­க­ளுக்கும் புரி­யாத புதிர்கள். ஆயி­ர­மா­யிரம் கிலோ­மீற்றர் தொலைவில் நடை­பெறும் சம்­ப­வங்­க­ளைப்­பற்­றிய விப­ரங்­களை அரை­நொ­டி­யிலே உள்­வாங்கி அதன் உண்மை பொய்­மை­களை பகுத்­த­றிந்­து­ணரும் வாய்ப்­பையும் வல்­ல­மை­யையும் அவர்கள் பெற்­றி­ருப்­பதால் அவர்­களின் பெற்­றோர்­களும் முதி­யோர்­களும் அர­சி­யல்­வா­தி­களின் பொய்ப்­பி­ர­சாரங்­களில் அன்று மயங்­கி­ய­து­போன்று இந்தத் தலை­முறை இன்று மயங்­க­மாட்­டாது. இந்த இர­க­சி­யத்தை ஆட்­சி­யா­ளர்கள் முத­லிலே புரிந்­து­கொள்­ளுதல் வேண்டும்.

அதனைப் புரிந்­து­கொண்ட பல ஜன­நா­யக நாடு­களும் சர்­வ­தேச நிறு­வ­னங்­களும் இந்தத் தலை­மு­றையை அணைத்தே ஆட்­சி­ந­டத்­தவும் கரு­ம­மாற்­றவும் முன்­வந்­துள்­ளன. ஆனால் அதைப் புரிந்து கொள்­ளா­மலும் அல்­லது புரிய மறுப்­ப­தி­னாலும் இலங்­கையின் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் இளந்­த­லை­மு­றை­யைக்­கண்டு அஞ்­சு­கின்­றனர். அந்த அச்­சத்­தி­னா­லேதான் ஜனா­தி­ப­தியும் அர­க­லய ஆர்ப்­பாட்­டத்தை முறி­ய­டிக்க முற்­பட்­டுள்ளார். அந்த எதிர் நீச்­சலில் அவரும் அவரைத் தூக்­கிப்­பி­டிக்கும் சக்­தி­களும் தோல்­வி­ய­டைவர் என்­ப­து­மட்டும் உறுதி. அர­க­லய போராட்டம் என்­பது வாழத்­து­டிக்கும் ஒரு தலை­மு­றைக்கும் வாழ்ந்து முடிந்த ஒரு தலைமு­றைக்கும் இடையே நடை­பெறும் போராட்டம். காலமோ இளந்­த­லை­மு­றையின் பக்கம் நிற்­கி­றது.

அமைப்­பையே மாற்­று­வதா
செப்­ப­னி­டு­வதா?
ரணிலை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது அர­க­லய. ஆனால் அவரை பாது­காக்­கி­றது இன்­றைய அமைப்பும் அவரைச் சுற்­றி­யி­ருக்கும் அதன் பாது­கா­வ­லர்­களும். ஆகவே அர­க­ல­யவை தடை­செய்து அமைப்­பினைச் செப்­ப­னிட்டு அந்த அமைப்பின் பலத்தில் ஆட்சி நடத்த விளை­கிறார் ஜனா­தி­பதி. அதனை முற்­றாக ஒழிக்க வேண்டும் என்­கி­றது புதிய தலை­முறை. ஏன்? பெரும்­பான்மை இனத்தை ஒரு துரும்­பா­கப்­பா­வித்து, இன­வா­தத்தை வளர்த்து, மக்­களைப் பிரித்து, ஜன­நா­யகம் என்ற பெயரில் ஊழல் மலிந்த ஓர் அர­சியல் கலாச்­சா­ரத்­தையும் உரு­வாக்கி, அதன்­மூலம் தமது சுய நலன்­களைப் பெருக்கி, பொரு­ளா­தார வளர்ச்சி என்ற போர்­வையில் நாட்டின் செல்­வத்­தையும் சூறை­யா­டிய ஒரு கும்­பலே கடந்த ஏழு தசாப்­தங்­க­ளாக மாறி­மாறி ஆட்­சி­பீடம் ஏறி இந்த நாட்டைச் சீர­ழித்­துள்­ளது. அந்தச் சீர­ழிவின் உச்­சக்­கட்­ட­மா­கத்தான் இன்று நாடே வங்­கு­ரோத்து அடைந்­துள்­ளது. இதனை உணர்ந்த இளந்­த­லை­முறை இன­பே­தமோ மத­பே­தமோ இன்றி இலங்­கையர் என்ற ஒரே போர்­வைக்குள் யாவ­ரையும் உள்­ள­டக்கி ஒரே குரலில் நடை­மு­றை­யி­லி­ருக்கும் இந்த அமைப்பை முற்­றாகக் களைந்­தெ­றி­யாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்று கிளர்ந்­தெ­ழுந்­துள்­ளது. ஜனா­தி­ப­தியின் கனவு நன­வா­கு­வ­தற்கு இந்தத் தலை­முறை ஒரு பெரும் தடை. என­வேதான் அவரின் ஹிட்லர் வேடம்.

சமா­தானப் பறவை
இன­வா­தமே, அதிலும் குறிப்­பாக சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தமே, மேலே விளக்­கப்­பட்ட அமைப்பின் இத­ய­நாடி. அந்த அமைப்பு ஒரு வண்டி என்றால் அது உருண்­டோ­டு­வ­தற்­கான அச்­சா­ணியே பேரி­ன­வாதம். அந்த அச்­சா­ணியை கழற்­றி­விட்டால் வண்­டியே புதைந்­து­விடும். அர­சியல் ரீதியில் இன­வா­தத்தைப் பாது­காத்து வளர்க்­காமல் ஆட்­சியில் அம­ர­மு­டி­யாது என்­பதை ஒவ்ெவாரு பொதுத் தேர்­தலும் ஞாப­கப்­ப­டுத்திக் கொண்டே வந்­துள்­ளன. ஆனால் அது எவ்­வாறு பொன்­வி­ளையும் பூமி­யொன்றை போர்க்­க­ள­மாக்கி, ஆயி­ர­மா­யிரம் உயிர்­களைக் கொன்று குவித்து, பறவைக் கூண்­டுக்குக் கல்­லெ­றிந்­த­துபோல் லட்­சக்­க­ணக்­கான குடும்­பங்­களைச் சித­ற­டித்து நாடோ­டி­க­ளாக்கி, திற­னா­ளி­க­ளையும் நாட்­டை­விட்டு ஓடச் செய்து, செல்­வ­மி­ழந்து, பிற நாடு­க­ளிடம் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்­து­கிற நிலைக்குத் தள்­ளி­வைத்­துள்­ளது என்­பதை மற்­ற­வர்கள் உண­ரா­விட்­டாலும் ஜனா­தி­பதி உணர்ந்­துள்ளார் என்­ப­தையே அவர் ஒரு சமா­தா­னப்­ப­ற­வை­யாக தமி­ழி­னத்தின் துயர் துடைக்க முன்­வந்­துள்­ளமை காட்­டு­கின்­றது. ஆனால் இதுவும் அர­சியல் லாபத்­துக்­காக அவர்­போடும் இன்­னொரு வேடமா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. ஏன் இந்தச் சந்­தேகம்?

தொடு­வா­னம்­போன்று தூர­மாகிக்கொண்டே செல்­கின்­றது இனப்­பி­ரச்­சினை. அனால் அதற்கு விரைவில் தீர்வு காண­வேண்­டு­மென சர்­வ­தேசம் இப்­போது குரல் எழுப்­பு­கி­றது. அது­மட்­டு­மல்ல, இனப்­பி­ரச்­சி­னையால் புலம்­பெ­யர்ந்து வெளி­நா­டு­களில் வாழும் சமு­தா­ய­மொன்று உலக அரங்கில் பலம்­கொண்ட அழுத்­தங்­களை கொடுக்­கக்­கூ­டிய ஒரு சக்­தி­யாக மாறி­யுள்­ளது. இந்த நிலையில் பொரு­ளா­தார உத­விக்­காகச் சர்­வ­தே­சத்தின் தய­வையும் புலம்­பெயர் சமூ­கத்தின் முத­லீ­டு­க­ளையும் நாடி­நிற்கும் இலங்கை, இனப்­பி­ரச்­சி­னையை இனியும் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. அதை உணர்ந்­துள்ளார் ஜனா­தி­பதி. அத­னா­லேதான் அவர் ஒரு சமா­தானப் பற­வை­யா­கவும் முகம் காட்­டு­கிறார்.

தமிழ் தேசியப் பிரச்­சி­னையா? சிறு­பான்­மையோர் தேசியப்
பிரச்­சி­னையா?
சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் 1948லிருந்து அர­சி­ய­லுக்குள் புகுந்த காலம் தொடக்கம் தமி­ழி­னத்­தையே முக்­கி­ய­மாகக் குறி­வைத்துச் செயற்­பட்டு வந்­துள்­ள­போதும் அண்மைக் காலங்­களில் அது முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்கி சிறு­பான்மை இனங்­களின் எதி­ரி­யாக இயங்கத் தொடங்­கி­யுள்­ளது. ஆகவே இன்று தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய தேசியப் பிரச்­சி­னையை தமி­ழி­னத்­தோடு மட்டும் சம்­பந்­தப்­ப­டுத்­தாமல் இலங்­கையின் அனைத்து சிறு­பான்மை இனங்­க­ளோடும் சம்­பந்­தப்­ப­டுத்த வேண்டும். எனினும் சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தால் தமி­ழி­னமே மிகப்­பெரும் இழப்­பு­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது.

இப்­பி­ரச்­சி­னையை ஜனா­தி­பதி உண்­மை­யி­லேயே அர­சியல் லாபம் கரு­தாது தூய மனத்­து­டனும் துணி­வு­டனும் தீர்க்­க­வேண்­டு­மாயின் முதலில் அவர் ஒன்றைச் செய்­ய­வேண்டும். அதா­வது சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் இலங்­கையை சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே சொந்­த­மான ஒரு நாடென்ற பொய்யை பகி­ரங்­க­மா­கவே பறை­சாற்றித் திரி­கின்­றனர். உதா­ர­ண­மாக, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்டி நகரில் நடை­பெற்ற ஒரு பகி­ரங்கக் கூட்­டத்தில் பொது­பல சேனையின் செய­லாளர் ஞான­சார தேரர் இலங்கை சிங்­கள மக்­க­ளுக்கே சொந்­த­மான நாடென்றும் அதில் வாழும் சிறு­பான்மை இனங்கள் சிங்­க­ள­வர்­களின் நீண்­ட­காலக் குத்­தகைக் குடி­யினர் என்றும் பேசி இருந்தார். அந்தக் கூற்றை காலஞ்­சென்ற மங்­கள சம­ர­வீர துணி­வுடன் எதிர்த்­த­போது அவரை பேரி­ன­வா­திகள் ஒரு சமூகத் துரோ­கி­யெனக் கணித்து பௌத்த வைப­வங்­க­ளி­லி­ருந்து அவரை விலக்­கியே வைத்­தி­ருந்­தனர். இன்­று­வரை வேறு எந்த சிங்­கள அர­சி­ய­ல்­வா­தியோ தலை­வனோ தலை­வியோ ஞான­சா­ரரின் கூற்றை எதிர்க்­க­வில்லை. மகிந்த ராஜ­பக்­ச­கூட ஓரிரு சந்­தர்ப்­பங்­களில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைப்­பற்றிப் பேசி­ய­போது அவை எந்த ஓர் இனத்­துக்­கு­மட்டும் சொந்­த­மா­னவை அல்ல என்று கூறி இருந்தார். ஆனால் நாடே எந்த ஒரு இனத்­துக்­கு­மட்டும் சொந்­த­மா­ன­தல்ல என்­பதை அவர் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் கூற­வில்லை. ஏன்? ஆகவே ஜனா­தி­பதி அவர்கள் இந்த நாடு இங்கு பிர­ஜை­க­ளாக வாழும் சகல மக்­க­ளுக்கும் சொந்தம் என்­பதை துணி­வுடன் கூறி அதனை அர­சியல் யாப்­பிலும் புகுத்தி பேரி­ன­வா­தி­களின் ஆத­ார­மற்ற கூற்றை பகி­ரங்­க­மா­கவே நிரா­க­ரிக்க வேண்டும். அந்தத் துணிவு இல்­லை­யென்றால் தமிழ் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் அவர் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகள் தனது பதவியைக் காப்பாற்ற நடத்தும் நாடகமேயன்றி வேறில்லை.

ஹிட்­ல­ராக மாறி இளை­ய­த­லை­மு­றையின் எதிர்ப்பை அடக்க முயல்­வ­து­போன்று சமா­தானப் பறவை என்ற பெயரில் சிறு­பான்மை இனங்­களின் உரி­மை­களைப் பாது­காக்கப் போவ­தாக வெளி­யு­ல­குக்கு அவர்­காட்டும் முகமே இது­வென்று கருதத் தோன்­று­கி­றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.