இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஆவணங்கள் எதுவுமே இல்லை எப்படி நிரூபிக்க போகிறீர்கள்?

நீதிபதி அதிர்ச்சி ; மன நல மருத்துவர்களின் அறிக்கை தொடர்பிலும் கேள்வி

0 409

(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞ­ருக்கு எதி­ராக எந்த சான்றுப் பொருட்­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் முன்­வைக்க வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் உத்­தே­சிக்­க­வில்லை என நேற்று நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

குறித்த வழக்கை கையாளும் சிரேஷ்ட அரச சட்­ட­வா­தியின் அறி­வு­றுத்தல் பிர­காரம், புத்­தளம் மேல் நீதி­மன்ற அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் இதனை நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­ட­வுக்கு அறி­வித்தார்.

இதன்­போது, ‘சான்றுப் பொருட்கள், ஆவ­ணங்கள் எது­வு­மில்லை… வழக்கை எப்­படி நிரூ­பிக்கப் போகின்­றீர்கள்?’ என அதிர்ச்­சி­யுடன் நீதி­பதி, அரச சட்­ட­வா­தியை நோக்கி கேள்வி எழுப்­பினார். அதற்கு பதி­ல­ளித்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ், வாய் மொழி மூல ஆதா­ரங்­களை மட்­டுமே இவ்­வ­ழக்கில் பயன்­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறினார். இந் நிலையில், எந்த ஆவ­ணங்­க­ளையும் முன் வைப்­ப­தில்லை என்­பது உறு­தி­யா­னதா என மீண்டும் நீதி­பதி கேள்வி எழுப்­பிய நிலையில், இவ்­வ­ழக்­குடன் தொடர்­பு­பட்டு, பிர­தி­வாதி எழு­திய ஆக்கம் ஒன்று தொடர்பில் பெற்­றுக்­கொண்ட சிறுவர் மன நல மருத்­துவ விஷேட நிபு­ணர்­களின் நிபு­ணத்­துவ அறிக்­கை­யையும் சான்­றா­வ­ண­மாக முன் வைக்கப் போவ­தில்­லையா என வின­வினார்.

அதற்கும் பதி­ல­ளித்த அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ், தனக்கு தரப்­பட்­டுள்ள அறி­வு­றுத்­தல்கள் பிர­காரம் எந்த சான்­றா­வ­ணங்­களும் முன் வைக்­கப்­ப­ட­வில்லை என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து நீதிவான் நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, குற்றப் பத்­தி­ரி­கையை திருத்தி குறித்த ஆவ­ணத்தை சான்­றாக முன் வைக்க வழக்கு விசா­ரணை இடையே வழக்குத் தொடுநர் முயன்றால் அதற்கு கண்­டிப்­பாக அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட மாட்­டாது என திறந்த மன்றில் குறிப்­பிட்டார்.

அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்­பி­லான வழக்கின், முன் விளக்க மாநாடு நேற்று (16) புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் நடாத்­தப்­பட்­டது.

இதன்­போது சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த, இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்­னா­புக்­காக, சட்­டத்­த­ரணி ருஸ்­னி­யுடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் பிர­சன்­ன­மானார்.

வழக்குத் தொடுநர் சார்பில், புத்­தளம் மேல் நீதி­மன்றின் அரச சட்­ட­வாதி நிமேஷா டி அல்விஸ் ஆஜ­ரானார்.

விசா­ர­ணை­யா­ளர்­க­ளான பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­ரத்­னவும் உப பொலிஸ் பரி­சோ­தகர் நந்­த­சி­றியும் ஆஜ­ரா­கினர்.

வழக்கின் அனைத்து விட­யங்­களும் நீதி­மன்ற மொழி பெயர்ப்­பாளர் ஊடாக தமிழ் மொழியில் குற்றம் சாட்­டப்­பட்ட அஹ்னாப் ஜஸீ­முக்கு, நீதி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் மொழி பெயர்க்­கப்­பட்­டது.

இவ்­வ­ழக்கில் எந்த சான்றுப் பொருட்­க­ளையும், சான்­றா­வ­ணங்­க­ளையும் முன் வைக்கப் போவ­தில்லை என வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு கூறிய நிலையில், விஷேட மருத்­து­வர்­களின் அறிக்கை உள்­ளிட்ட சான்­றா­வ­ணங்கள் உயர் நீதி­மன்றில் அஹ்னாப் தொட­ரப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில் சவா­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, அதன் உண்மை விம்­பங்கள் வெளிப்­பட்­டுள்­ளதால் சட்ட மா அதிபர் சார்பில் அவை தவிர்க்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அஹ்­னா­புக்­காக ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறிப்­பிட்டார்.

அத்­துடன் அஹ்னாப் எழு­திய, நவ­ரசம் கவிதை தொகுப்பு புத்­த­கத்தை மன்றில் காட்டி, இப்­புத்­தகம் தொடர்­பி­லேயே தனது சேவை பெறுநர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், அப்­புத்­தகம் கூட சான்­றா­வ­ண­மாக முன் வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் பிரஸ்­தா­பித்து, பிர­தி­வாதி சார்பில் அதனை சமர்ப்­பிக்க எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்டார். எனினும் அது தொடர்பில் தீர்­மா­னிக்க இது மிக முன்­னோக்­கிய சந்­தர்ப்பம் அல்ல என நீதி­பதி குறிப்­பிட்டார். உரிய சந்­தர்ப்பம் ஏற்­பட்டால் அதனை செய்ய முடியும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில், இந்த வழக்கு விசா­ர­ணை­களில் வழக்கில் சாட்­சி­யா­ளர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள 14 சாட்­சி­யா­ளர்­க­ளி­னதும் சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்த எதிர்­பார்ப்­ப­தாக அரச சட்­ட­வாதி, நீதி­ப­தியின் கேள்விக்கு பதி­ல­ளித்து குறிப்­பிட்டார்.

எனினும், பிர­தி­வா­திக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், இந்த 14 பேரில் 8 பேர் மாண­வர்கள் என சுட்­டிக்­காட்­டி­ய­துடன், குறித்த மாண­வர்­க­ளுடன் சேர்ந்து கல்­வி­கற்ற மேலும் 22 மாண­வர்கள் இருப்­ப­தா­கவும் ஏன் அவர்­களை சாட்­சி­யாக அழைக்­காமல் குறிப்­பிட்ட 8 பேரை மட்டும் அழைக்க வேண்டும் என கேள்ள்வி எழுப்­பினார்.

குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தாக குறிப்­பிட்ட பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், பிர­தி­வா­தியின் சார்­பிலும் சாட்­சி­யா­ளர்­களை அழைக்­கவும் சான்­றா­வ­ணங்­களை முன் வைக்­கவும் எதிர்­பார்­ப்­ப­தா­கவும் சந்­தர்ப்ப சூழ­லுக்கு ஏற்ப அதனை தீர்­மா­னிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சில சான்­றா­வ­ணங்­களை , இவ்­வ­ழக்கு தொடர்­பிலும் சமர்ப்­பிக்க எதிர்பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந் நிலையில் வேறு விஷேட கார­ணிகள் இல்­லாத நிலையில், வழக்கின் முன் விளக்க விசா­ரணை மாநாட்டை முடி­வுக்கு கொண்­டு­வந்த நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான வழக்­கு­களை அவ­ச­ர­மாக விசா­ரித்து முடிக்க வேண்டும் என்ற பிர­தம நீதி­ய­ர­சரின் ஆலோ­ச­னை­யையும் ஞாப­க­ப்ப­டுத்தி வழக்கை எதிர்­வரும் 2023 பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார். அன்­றைய தினம் வழக்கின் 2,6,8 ஆம் இலக்க சாட்­சி­யா­ளர்­களை மன்றில் ஆஜ­ராக அறி­வித்­தலும் பிறப்­பித்தார்.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை , பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்பட்டி­ருந்தார். முதலில் கோட்டை நீதி­மன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.