ஜனாஸா எரிப்பு விவகாரம் ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்துகிறார் ஹக்கீம்

0 207

“உலக சுகா­தார நிறு­வனம் கொரோனா ஜனா­ஸாக்­களை எரிக்­கவும் முடியும், அடக்கம் செய்­யவும் முடியும் என்று திட்­ட­வட்­ட­மாகக் கூறிய போதிலும், எங்­க­ளது ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக எரித்து படு­பா­தகச் செயல்­களைச் செய்­தார்கள்.

அதன் பின்­ன­ணியில் யார் யாரெல்லாம் இருந்­தார்கள் என்­பதைக் கண்­ட­றிய ஜனா­தி­பதி ஒர் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 30 வது பேராளர் மாநாடு புத்­தளம் கே.ஏ. பாயிஸ் ஞாப­கார்த்த மண்­டப கேட்போர் கூடத்தில் திங்­கட்­கி­ழமை நடை­பெற்­ற­போது அங்கு பிர­தான உரையை ஆற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் இதன்­போது மேலும் தெரி­வித்­த­தா­வது,
உலக சுகா­தார நிறு­வனம் கொரோனா ஜனா­ஸாக்­களை எரிக்­கவும் முடியும் அடக்கம் செய்­யவும் முடியும் என்று திட்­ட­வட்­ட­மாகக் கூறிய போதிலும், எங்­க­ளது ஜனா­ஸாக்­களை எரித்து படு­பா­தகச் செயல்­களை செய்­தார்கள். அந்த அவஸ்­தைக்கு மத்­தியில், இந்தப் பேராளர் மாநாட்டின் மூல­மாக முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரித்­த­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய வேண்டும், அதன் பின்­ன­ணியில் யார் யாரெல்லாம் இருந்­தார்கள் என்­பதைக் கண்­ட­றிய இந்த ஜனா­தி­பதி ஓர் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க வேண்டும் என கோரிக்கை விடு­கின்றேன். இவ்­வா­றான அநி­யாயம் இந்த நாட்டில் எந்­த­வொரு சமூ­கத்­துக்கும் பல­வந்­த­மாக இனிமேல் ஒரு­போதும் நிகழ்த்தப்பட கூடாது.

தமி­ழர்­க­ளுக்கு 30 வருட யுத்­தத்தின் போது, நடந்த அநி­யா­யங்­களை நினைவு கூர்­வ­தற்­காக ஜெனி­வாவில் முறைப்­பா­டுகள் தொடர்ந்தும் திரும்ப திரும்ப செய்­யப்­ப­டு­கின்­றன. அநீ­தி­இ­ழைக்­கப்­பட்ட எங்­களின் சார்­பிலும் அவ்­வா­றான முறைப்­பாட்டை ஜெனி­வாவில் பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்த நாடுகள் உள்­வாங்­கின. இஸ்­லா­மிய நாடு­களின் ஒன்­றியம் இந்த அர­சாங்­கத்­துக்கு சார்­பாக வாக்­க­ளிப்­பதை தவிர்ந்து கொண்­டதும்,எதி­ராக வாக்­க­ளித்­த­தற்கு கார­ண­மாக அமைந்­ததும் ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக எரிக்­கின்ற அந்த பிரே­ர­ணை­யா­கும்­. இ­வற்­றை­யெல்லாம் செய்து விட்டு, எல்லா அரபு நாடு­க­ளின்­ தூ­து­வர்­களும், இஸ்­லா­மிய நாடு­களின் ஒன்­றி­யத்தின் தூது­வர்­களும் ஜனா­தி­ப­திக்கு எழு­திய கடிதத்தை குப்பை தொட்டியில் போட்ட ஜனாதிபதிக்கு ஈற்றில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். சதிகாரர்களை மிகைத்த சதிகாரன் மேலே இருக்கின்றான் என்பதில் முஸ்லிம்களான நாம் நம்பிக்கை கொண்டவர்கள் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.