ஒன்றரை தசாப்தத்தை தொடும் விடிவெள்ளி!

0 308

முஸ்லிம் சமூ­கத்தின் முதன்மைக் குர­லாக ஒலிக்கும் உங்கள் அபி­மான விடி­வெள்ளி பத்­தி­ரிகை தனது பய­ணத்தில் இன்­றுடன் 14 வரு­டங்­களைப் பூர்த்தி செய்து 15 ஆவது ஆண்டில் கால் பதிக்­கி­றது. அல்­ஹம்­து­லில்லாஹ்.

விடி­வெள்ளி வார பத்­தி­ரி­கையின் முத­லா­வது இதழ் 2008 நவம்பர் 06 ஆம் திகதி பிர­சு­ர­மா­னது. அன்று முதல் இன்று வரை வார இதழ் தனது பய­ணத்தை சுமார் 660 வாரங்­க­ளுக்கும் மேலாக இடை­ய­றாது தொடர்ந்து வரு­கின்­றது. விடி­வெள்­ளி­யினால் கவ­ரப்­பட்ட அதன் வாச­கர்கள் அதனை தின­சரி பத்­தி­ரி­கை­யா­கவும் வெளிக் கொண­ரு­மாறு விடுத்த வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க 2015 பெப்­ர­வரி 16 ஆம் திகதி முதல் விடி­வெள்ளி தின­சரி பத்­தி­ரி­கையும் தனது பய­ணத்தை ஆரம்­பித்­தது. சுமார் 5 வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக தின­சரி பத்­தி­ரிகை வெளி­வந்த நிலையில், உல­கையே முடக்­கிய கொவிட் 19 பேர­னர்த்தம் கார­ண­மாக 2020 பெப்­ர­வரி மாதத்­துடன் விடி­வெள்­ளியின் தின­சரி பத்­தி­ரி­கையை இடை­நி­றுத்த வேண்­டிய இக்­கட்­டான சூழ்­நிலை ஏற்­பட்­டது. இருப்­பினும் இந்த நெருக்­க­டி­யான கால கட்­டத்­தில்­கூட விடி­வெள்ளி மின்­னி­த­ழாக தனது பய­ணத்தை தொடர்ந்­த­தையும் அக் காலப்­ப­கு­தியில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய பல்­வேறு சவால்­களை உல­குக்கு வெளிச்­ச­மிட்டுக் காட்­டி­ய­தையும் வாச­கர்கள் மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள்.
நாட்டில் கொவிட் அனர்த்தம், பொரு­ளா­தார நெருக்­கடி போன்ற பல்­வேறு சவால்கள் தோற்றம் பெற்ற போதிலும் விடி­வெள்ளி வார இதழ் தனது பய­ணத்தை தொடர்ந்து இன்று 15 ஆவது ஆண்டில் கால் பதிக்­கின்­றமை அதன் வர­லாற்றில் ஒரு மைல் கல் எனலாம்.

மூன்று தசாப்­தங்­க­ளாக நீடித்த இன வன்­மு­றைகள் மற்றும் போர் கார­ண­மாக இலங்கை முஸ்லிம் சமூ­கமும் பாரிய இன்­னல்­களை அனு­ப­விக்க நேர்ந்­தது. வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை, கடத்­தப்­பட்டு காண­ம­லாக்­கப்­பட்­டமை, பள்­ளி­வாசல் படு­கொ­லைகள், இடப்­பெ­யர்­வு­களால் ஏற்­பட்ட மீள்­கு­டி­யேற்ற சவால்கள் என அக் காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் முகங்­கொ­டுத்த பிரச்­சி­னை­களின் பட்­டி­யல்கள் நீள­மா­னவை. இனப் பிரச்­சினைத் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் நியா­ய­மான பங்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையும் இக் காலப்­ப­கு­தி­யி­லேயே வீரியம் பெற்­றி­ருந்­தன.
இந் நிலையில் இவற்றை வெளிக் கொணர்ந்து முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல், சமூக, கல்வி, பொரு­ளா­தார வாழ்வை மேம்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டே இலங்­கையின் தமிழ் பத்­தி­ரிகை வர­லாற்றில் நீண்ட அனு­ப­வம்­வாய்ந்த எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னத்­தினால் 2008 இல் விடி­வெள்ளி பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

2009 இல் யுத்தம் முடி­வுக்கு வந்­த­போ­திலும் 2012 முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தோன்­றிய இன­வாத பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றை­களின் போதும் சமூ­கத்தின் குர­லாக ஒலிப்­பதில் விடி­வெள்ளி தனது காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யது. அதே­போன்று கொவிட் 19 அனர்த்­தத்தின் போது இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுத்த பல­வந்த ஜனாஸா எரிப்பு கொள்­கையை கைவி­டு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் வழங்­கு­வ­திலும் விடி­வெள்ளி தனது பங்­க­ளிப்பை வழங்­கி­யது.

துர­திஷ்­வ­ட­ச­மாக , 2019 ஏப்­ரலில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் மிகப் பாரிய சவால்­களை எதிர்­நோக்­கினர். இக் காலப் பகு­தியில் முஸ்லிம் சமூ­கத்தில் தோற்றம் பெற்ற வன்­முறைத் தீவி­ர­வா­தத்தை விடி­வெள்ளி வெகு­வாகக் கண்­டித்­த­துடன் மார்க்­கத்தின் பெயரால் முன்­னெ­டுக்­கப்­படும் தீவிரப் போக்­குக்கு எதி­ரா­கவும் தனது பேனா முனையைக் கூர்­மை­யாகப் பயன்­ப­டுத்­தி­யது. அது­மாத்­தி­ர­மன்றி இத் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தி­ய­துடன் இத­னுடன் எந்­த­வித சம்­பந்­த­மு­மின்றி அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு வருடக் கணக்கில் சிறையில் வாடும் அப்­பாவி முஸ்­லிம்­களை விடு­தலை செய்­யு­மாறும் வலி­யு­றுத்தி வரு­கி­றது.

இவை மாத்­தி­ர­மன்றி, முஸ்லிம் தனியார் சட்டம் உள்­ளிட்ட காலத்­திற்கு காலம் தோற்றம் பெறும் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் விடி­வெள்ளி தனது வாசர்­களை அறி­வூட்டி விழிப்­பூட்டி வரு­கி­றது.

இவ்­வாறு பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் முஸ்லிம் சமூ­கத்தின் முதன்மைக் குர­லாக ஒலிக்கும் விடி­வெள்­ளிக்கு தொடர்ச்­சி­யாக பேரா­த­ர­வ­ளித்­து­வரும் அதன் வாச­கர்கள் என்­றென்றும் நன்­றிக்­கு­ரி­ய­வர்கள். அதே­போன்று எமது பத்­தி­ரிகை முக­வர்கள், விநி­யோ­கஸ்­தர்கள்,விளம்­ப­ர­தா­ரர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், எழுத்­தா­ளர்கள், இலக்­கி­ய­வா­திகள் என சகல தரப்­பு­க­ளுக்கும் எமது நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம். அத்­துடன் எவ்­வா­றான சவால்கள் தோற்றம் பெறு­கின்ற போதிலும் அவற்­றையும் தாண்டி இப் பயணம் தொடர்­வ­தற்கு வாச­கர்­க­ளா­கிய உங்கள் ஆத­ரவை என்­றென்றும் எதிர்­பார்க்­கிறோம்.

எதிர்­கா­லத்தில் பக்­கங்­களை அதி­க­ரித்து மேலும் பல விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக விடி­வெள்ளி வார இதழை கன­தி­யாக முன்­கொண்டு செல்­வ­தற்­கான திட்­டங்­களை நாம் வகுத்­துள்ளோம் என்ற நற்­செய்­தி­யையும் வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் தூய பணிகளை அங்கீகரிப்பானாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.