உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : ஜனவரி 27 இல் இப்ராஹீம் ஹாஜியாருக்கு எதிரான வழக்கின் முன் விளக்க மாநாட்டு

0 239

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்­ரில்லா ஹோட்­டல்­களில் குண்­டினை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான இன்சாப் அஹமட், இல்ஹாம் அஹமட் ஆகி­யோரின் தந்தை, சகோ­தரர்­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கா­னது, முன் விளக்க மாநாட்­டுக்­காக ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி இவ்­வ­ழக்கின் முன் விளக்க மாநாடு அடுத்த வருடம் ஜன­வரி 27ஆம் திகதி நடை­பெறும் என கொழும்பு மேல் நீதி­மன்றின் நீதி­பதி நவ­ரட்ன மார­சிங்க அறி­வித்தார்.

இது குறித்த வழக்கு கடந்த வெள்­ளி­யன்று விசா­ர­ணைக்கு வந்தபோது அவர் இதனை அறி­வித்தார்.

இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் குற்­ற­வியல் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ராஹீம் ஹாஜி­யா­ருக்கு மேல­தி­க­மாக அவ­ரது மேலும் இரு புதல்­வர்­களே அவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இந்நிலையில் இதற்கு முன்னர் இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ரா­ஹீ­முக்கு பிணை­ய­ளித்த நீதி­மன்றம் அவ­ரது மக­னான மொஹம்மட் இப்­ராஹீம் ஹிஜாஸ் அஹ­மட்­டையும் பிணையில் செல்ல அனு­ம­தி­ய­ளித்­தது. எனினும் இளைய மக­னான மொஹம்மட் இப்­ராஹீம் இஸ்­மா­யீலை பிணையில் விடு­விக்க நீதி­பதி மறுப்பு தெரி­வித்தார்.

அதன்­படி வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள இரு­வரும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். விளக்­க­ம­றி­யலில் உள்ள பிர­தி­வாதி சிறைச்­சாலை அதி­கா­ரிகள் ஊடாக மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் அது தொடர்பில் பாது­காப்பு தரப்­புக்கு அறி­விக்­காமல் தக­வல்­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் பிர­தி­வா­திகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.