மக்களுக்கான நலன்புரி திட்டங்களின் அவசியம்

0 349

நாட்டின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கின்ற நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. இந் நிலையில்தான் அரசாங்கம் ‘எவரையும் கைவிடாதீர்’ என்றதொரு நலன்புரித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் இந்த வேலைத்திட்டத்துக்கு நேற்று வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள் நேற்று வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 30 சத­வீத மக்கள் – தற்­போது உணவுப் பாது­காப்­பற்ற நிலையில் உள்­ளனர். அவர்­க­ளுக்கு மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­டு­கி­றது. குறை­வ­டைந்­துள்ள உள்­நாட்டு விவ­சாய உற்­பத்தி, அந்­நியச் செலா­வணி இருப்பு பற்­றாக்­குறை மற்றும் ரூபாவின் பெறு­ம­தியில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி ஆகி­யவை உணவுப் பற்­றாக்­குறை மற்றும் வாழ்க்கைச் செலவில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இது மக்­களின் ஆரோக்­கி­ய­மான மற்றும் அதிக உண­வுக்­கான அணு­கலைக் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. பொரு­ளா­தார நெருக்­க­டி­யா­னது குடும்­பங்­களை பசி மற்றும் வறு­மையில் தள்­ளி­யுள்­ளது. சிலர் முதல் முறை­யாக வறுமைக் கோட்­டிற்குக் கீழ் உள்­ள­டங்­கி­யுள்­ளனர். உலக வங்கி மதிப்­பீ­டு­க­ளுக்­க­மைய இது சுமார் அரை மில்­லியன் மக்­களைக் உள்­ள­டக்­கி­ய­தாகக் காணப்­ப­டு­கி­றது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் சமீ­பத்­திய மதிப்­பீட்­டின்­படி, 86 சத­வீத குடும்­பங்கள் மலி­வான, குறை­வான சத்­துள்ள உணவை வாங்­கு­கின்­றனர், குறை­வாக சாப்­பி­டு­கின்­றனர் மற்றும் சில சம­யங்­களில் உணவை முற்­றி­லு­மாக தவிர்த்து வரு­கின்­றனர். பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் தொற்­று­நோய்க்கு முன்னர், இலங்கை முழு­வதும் ஊட்­டச்­சத்து குறை­பாடு விகிதம் ஏற்­க­னவே அதி­க­மாக இருந்­தது.

கொவிட்-19 தொற்­று­நோய்க்கு முன்னர், மற்ற நடுத்­தர வரு­மான நாடு­களை விட இலங்கைப் பெண்­களும் குழந்­தை­களும் ஊட்­டச்­சத்து குறை­பாட்டால் மிகவும் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 5 வய­திற்­குட்­பட்ட குழந்­தை­களில் 17 சத­வீ­த­மானோர் வளர்ச்சி குன்­றி­யதால் மிகவும் குட்­டை­யாக இருந்­தனர் மற்றும் 15 சத­வீ­த­மானோர் உய­ரத்­துடன் ஒப்­பிடும் போது மிகவும் உடல் மெலி­வாகக் காணப்­பட்­டனர். தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி இதை மேலும் மோச­மாக்கும் என்றும் உலக உணவுத் திட்டம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இந் நிலையில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள ‘எவ­ரையும் கைவி­டாதீர்’ எனும் திட்டம் காலத்தின் தேவை­யாகும். இதனை பார­பட்­ச­மின்றி தேவை­யு­டைய அனைத்து மக்­க­ளுக்கும் உத­விகள் சென்­ற­டையும் வகையில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்­தி­னதும் சம்­பந்­தப்­பட்ட அதிகாரிகளினதும் கடப்பாடாகும்.

இதேவேளை இவ்வாறான தரவு சேகரிப்பு ஒன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாசல் அல்லது பிரதேச ரீதியாக தேவையுடையவர்கள் இனங்காணப்பட்டு உதவித்திட்டங்கள் நடைமுறைப்ப டுத்தப்பட வேண்டும்.
இன்று மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் அன்றாட வருமானம் பெறும் குடும்பங்கள் கூட செலவுகளைச் சமாளிக்க முடியாது தடுமாறுவதைக் காண முடிகிறது. சமூகத்தில் கெளரவமாக வாழ்கின்ற பலரும் கூட தமது பொருளாதார நிலையை வெளியில் சொல்லிக் கொள்ள முடியாதவாறு தடுமாறுகின்றனர். எல்லோரும் அரசாங்க உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்க முடியாது.

அவ்வாறானவர்களுக்கெனவும் பள்ளிவாசல்கள், முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மூலமாக உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

வாழ்க்கைச் செலவு உச்­சத்தைத் தொட்­டுள்ள இன்­றைய நாட்­களில் வரு­மா­ன­மின்றித் தவிக்கும் இந்தக் குடும்­பங்­க­ளுக்கு உதவிக் கரம் நீட்­டு­வது அவ­சி­ய­மாகும்.
முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிர்­வ­கிக்­கப்­ப­டு­வதால், ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­களும் தமது மஹல்­லா­வுக்­குட்­பட்ட தேவை­யு­டைய குடும்­பங்­களை இனங்­கண்டு எவ்­வாறு உத­வலாம் என்­பது குறித்துத் திட்­ட­மிட்டுச் செயற்­பட வேண்டும்.

முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­க­ளுக்கும் இதில் பொறுப்­புள்­ளது. தமது ஸகாத், ஸத­காக்கள் மூலம் உதவக் கூடி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தைத் திரட்டி ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யின்றித் தவிக்கும் குடும்­பங்­களை இனங்­கண்டு உத­வி­களை வழங்க வேண்டும். இது தொடர்பிலும் சகலரும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். Vidivelli

Leave A Reply

Your email address will not be published.