கண்டியில் ஜும்ஆ தொழுகையை பார்வையிட பள்ளிவாசலுக்கு வருகை தந்த பெளத்த பிக்குகள்

0 423

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கண்டி – கட்டுகலை ஜும்ஆ பள்ளிவா­சலில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த ஜும்ஆ தொழு­கையை 60 பெளத்த பிக்­குகள் நேரில் பார்­வை­யிட்­டனனர். இவர்­களில் இளம் பிக்­கு­களும் அடங்­கி­யி­ருந்­தனர். சிங்­கள மொழியில் ஜும்ஆ பிர­சங்கம் இடம்­பெற்­றது.
கண்டி – புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரியில் பெளத்தம், சிங்­க­ள­மொழி பாடங்­க­ளாக போதிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கு தங்கள் நன்­றி­களைத் தெரி­விப்­ப­தற்­காக கொன­க­லகெல உதித தேரர் தலை­மையில் வருகை தந்த பெளத்த தேரர்கள் குழு­வி­னரே அன்­றைய தினம் கட்­டுக்­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற ஜும்ஆ தொழு­கை­யையும் பார்­வை­யிட்­டனர்.

புர்­கா­னியா அர­புக்­ கல்­லூ­ரியில் 120 மாண­வர்கள் பயில்­கி­றார்கள். அங்கு ஏனைய மதங்­க­ளான இந்து சம­யமும், கிறிஸ்­தவ சம­யமும் போதிக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பெளத்த தேரர்கள் குழு­வினர் அங்கு நிறு­வப்­பட்­டுள்ள நட்­பு­றவு நிலையம் மற்றும் வாசி­க­சாலை, புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரி­யையும் பார்­வை­யிட்­டனர்.
இந்­நி­கழ்­வினை கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் செய­லாளர் கே.ஆர்.ஏ. சித்தீக் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

கொன­க­ல­கெல உதித தேரர் அங்கு உரை­யாற்­று­கையில், எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நற்­பு­ற­வையும், சகோ­த­ரத்­து­வத்­தையும், சம­யங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு புர்­கா­னியா அர­புக்­கல்­லூ­ரியின் செயற்­திட்­டங்கள் முன்­மா­தி­ரி­யாக அமைந்­துள்­ளன. முஸ்லிம் மக்­களும் நாமும் ஒன்­றாக ஒற்­று­மைப்­பட்டு வாழ வேண்டும். நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்றார்.

அர­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளையும் பன்­ச­லைக்கு விஜயம் செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.

கொனகலகெல உதித தேரருக்கு கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றினையும் கையளித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.