பள்ளிவாசல் நிர்வாகங்கள் வக்பு சொத்துக்கள் குறித்து..

0 937

நாட்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை சுமார் 2544 ஆகும். அத்­தோடு நூற்­றுக்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் பதி­வின்­றியே இயங்கி வரு­கின்­றன.

நாம் அல்­லாஹ்வின் மாளி­கை­யாகக் கருதும் பள்­ளி­வா­சல்­களில் பெரும் எண்­ணிக்­கை­யா­னவை நிர்­வாகச் சீர்­கே­டு­களும், ஊழல்­களும் நிறைந்து காணப்­ப­டு­வதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் உறுதி செய்­துள்­ளமை கவலை தரு­கி­றது.

அண்­மையில் அநு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடந்­தே­றிய கொடூர சம்­பவம் முஸ்லிம் சமூ­கத்தை தலை குனியச் செய்­துள்­ளது. அல்­லாஹ்வின் மாளி­கை­யான பள்­ளி­வா­சலை நிர்­வ­கிக்கும் நிர்­வா­கி­யொ­ரு­வரே சக நிர்­வா­கி­யொ­ரு­வரைக் கொலை செய்­துள்ளார். அதுவும் உழ்­ஹிய்யா இறைச்சி பகிர்ந்­த­ளிப்­பதில் ஏற்­பட்ட முரண்­பா­டு­களே இதற்குக் காரணம் என கூறப்­ப­டு­கி­றது.

இச்­சம்­பவம் தொடர்­பான பொலிஸ் அறிக்கை மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னது கள உத்­தி­யோ­கத்­தரின் அறிக்­கைகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களே இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

இவ்­வா­றான ஒரு கொலைச் சம்­ப­வத்தின் பின்­பேனும் பள்­ளி­வாசல் தொடர்­பான விவ­கா­ரங்­களில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

பள்­ளி­வா­சல்­களில் பல்­வேறு குழப்­பங்கள் பதி­வாகி வரு­வ­தற்கு முறை­யான யாப்பு இன்றி அவை இயங்கி வரு­வதே காரணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் பள்­ளி­வா­சல்­களை சீராக இயங்கச் செய்­வ­தற்கு திணைக்­களம் மாதிரி யாப்­பொன்­றினை வடி­வ­மைத்­துள்­ளது. மாதி­ரி­யாப்பு அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வரும் காலங்­களில் குறிப்­பிட்ட யாப்­பினை மீறிச் செயற்­படும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் தெரி­வித்­துள்ளார்.

ஏலவே தமக்­கென பிரத்­தி­யேக யாப்­பு­களைக் கொண்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் கூட அவற்றைப் பின்­பற்­று­வ­தில்லை என்றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. பொது­வான யாப்பு முறைமை பள்ளி வாசல்­களில் இன்­மையால் 60 முதல் 70 வீதமான பள்­ளி­வா­சல்­களில் நிர்­வாக சபைத் தெரி­வுகள் தொடர்பில் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக திணைக்­களம் உறுதி செய்­துள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களில் அர­சியல் தலை­யீ­டு­களும், ஊழல்­களும் மலிந்­தி­ருப்­ப­தாக தொட­ராக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. தற்­கா­லிக அடிப்­ப­டையில் ஒரு வருட காலத்­திற்கு நிய­மிக்­கப்­பட்ட கல்­முனை முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பத­விக்­காலம் கடந்த 2008 ஆம் ஆண்டு நிறை­வ­டைந்து விட்­டாலும் அர­சியல் தலை­யீ­டுகள் கார­ண­மாக புதிய நிர்­வா­க­சபை கடந்த 14 வருட கால­மாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. பல­கோடி ரூபாய் சொத்­துக்­களை கொண்ட இப்­பள்­ளி­வாசல் தனி நப­ரொ­ரு­வ­ரி­னா­லேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வரு­கி­றது.

வக்பு சபை புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்தும் அர­சியல் பின்புலம் கார­ண­மாக விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சினால் அதற்கு தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் தலை­யீ­டு­க­ளுக்­கான சிறந்த உதா­ரணம் இது­வாகும்.

இது­மாத்­தி­ர­மல்ல பள்­ளி­வா­சல்கள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்கள், சமய ஸ்தலங்­களின் வக்பு சொத்­துக்­க­ளுக்கும் இன்று சவால்கள் மேலோங்­கி­யுள்­ளன.

வக்பு சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சவால்­களில் ஒரு ­சி­லவே தற்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான வக்பு சொத்­துக்கள், கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூ­ரிக்­கான வக்பு சொத்­துக்கள் போன்ற குறிப்­பிட்டுக் கூறக்­கூ­டிய சவால்கள் குறித்தே சமூகம் அறிந்து வைத்­துள்­ளது. ஆனால் நூற்­றுக்­க­ணக்­கான வக்பு சொத்­துக்கள் தனி­ந­பர்­களால், திட்­ட­மிட்ட குழு­வி­னரால் கைய­கப்­ப­டுத்தி அனு­ப­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வக்பு சபை இது விட­யத்தில் அதிக கரி­சனை கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிர்­வா­கி­களை நிய­மிப்­பதில் மாத்­திரம் கவனம் செலுத்­தாது வக்பு சொத்­துக்கள் தொடர்­பிலும் கூடுதல் அவ­தானம் செலுத்த வேண்டும். குறித்த சொத்­துக்கள் மூலம் கிடைக்கப் பெறும் கோடிக்­க­ணக்­கான ரூபா வரு­மா­னத்தை சமூக நலன்­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முன்­வர வேண்டும்.

இதற்­காக வக்பு சபை நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தை கடு­மை­யாக அமுல் நடத்­து­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். நாட்­டி­லுள்ள வக்பு சொத்­துக்­களை பட்­டி­ய­லிட்டு, அச்­சொத்­துக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை இனங்­கண்டு பிரச்­சி­னை­க­ளுக்கு சட்ட ரீதி­யாக தீர்வு காண­வேண்டும். இச்­செ­யற்­திட்­டங்கள் உட­ன­டி­யாக தாம­த­மின்றி மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இத­னையே சமூகம் வக்பு சபையிடமிருந்தும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறது.

அத்தோடு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் சுயநலன்களுக்காகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறான அரசியல்வாதிகளை சமூகம் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்.

ஐவேளை பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுவதுடன் மாத்திரம் எமது கடமை பூர்த்தியாகிவிட்டதாக கருதக்கூடாது. பள்ளிவாசல்களையும், பள்ளிவாசல் வக்பு சொத்துக்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இவ்விடயத்தில் நாம் வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.