ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு

0 613

சிரி­யாவின் கிழக்குப் பிராந்­தி­யத்தின் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த இடம் ஒன்றில், நூற்­றுக்­க­ணக்­கா­னோரின் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இதன்­படி, மனித உடல்கள் புதைக்­கப்­பட்ட ஏழு மனிதப் புதை­கு­ழிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த நாட்டின் அர­சாங்க செய்தி முக­வ­ர­க­மான சனா தெரி­வித்­துள்­ளது.

கண்­டெ­டுக்­கப்­பட்ட உடல்­களில் சித்­தி­ர­வதை செய்து கொலை செய்­யப்­பட்­ட­மைக்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­வ­தாக அந்த செய்­தியில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு உயி­ரி­ழந்­த­வர்­களில் சில­ரது கண்­களும் கைகளும் கட்­டப்­பட்­டி­ருந்­த­மைக்­கான சான்­றுகள் உள்­ளன.கண்­டெ­டுக்­கப்­பட்ட சடலங்களை ஆராய்ந்தபோது, கொல்லப்பட்டவர்களில் பெண்களும்அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.