பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு மீளாய்வு செய்ய வேண்டும்

சபையில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை

0 236

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தொடர்­பான தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி மீளாய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்டும். அதே­போன்று தடைப்­பட்­டி­யலில் அதி­க­மான அப்­பாவி மாண­வர்கள் உள்­ள­டங்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இதனால் இது­ தொ­டர்பில் அர­சாங்கம் மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற இடைக்­கால வரவு செலவுத் திட்டம் மீதான முத­லா­வது நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்தி தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஜனா­தி­பதி எதிர்­பார்க்கும் நாட்டின் சட்டம் ஒழுங்கை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாரிய சவா­லாக அமையும். இதனை அவர் புரிந்­து­கொள்ள வேண்டும். ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டு­வோரை விரட்டி விரட்டி தாக்­குதல் நடத்­தியும், அவர்­களை கைது செய்து தடுத்து வைத்­தி­ருக்கும் தீர்­மா­னத்­திற்கு கையெ­ழுத்­தி­டு­வதும் சவா­லா­னது.

நீங்கள் சர்­வ­தே­சத்­திற்கு வழங்கும் செய்தி இதுவா என்று கேட்க விரும்­பு­கின்றேன். ஜனா­தி­பதி தனது இந்தப் போக்கை மாற்­றி­ய­மைத்து இந்த விட­யத்தை மீளாய்வு செய்து வரவு செலவுத் திட்­டத்தின் நோக்­கங்­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்பார் என்று நினைக்­கின்றேன்.

இதே­வேளை சில நபர்கள் தடைப்பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஜனா­தி­பதி செய­லகம் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் 156 பேரும் 6 அமைப்­பு­களும் உள்­ள­டங்கி இருக்­கின்­றன. அதில் அப்­பாவி நபர்­களும் உள்­ளனர். அப்­பாவி மாண­வர்கள் பலர் உள்­ளனர். இது தொடர்­பான நட­வ­டிக்­கைகள் சாட்­சிகள் மற்றும் விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் செய்­யப்­பட்­ட­வையா என்று கேட்­கின்றோம். நீதி அமைச்சு, வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் பாது­காப்பு அமைச்சு இது­தொ­டர்­பாக மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும். அத்­துடன் இந்த தடைப்­பட்­டி­யலில் உள்­ள­வர்­க­ளுக்கு பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வினர், குற்ற ஒப்­புதல் மேற்­கொள்ள அழுத்தம் கொடுத்­தி­ருக்­கின்­றனர். இது­தொ­டர்பில் அவர்கள் ஏற்­றுக்­கொண்டும் உள்­ளனர். அதனால் அப்­பா­வி­களை தடைப் பட்­டி­யலில் இருந்து நீக்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அத்­துடன் மின்­சார கட்­டண அதி­க­ரிப்பு கார­ண­மாக மத ஸ்தானங்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 180 அலகுகள் பாவித்தால் தற்பேதுள்ள கட்டணம் 700 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.