மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்க முடியாது

0 324

69 இலட்சம் மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சிக்கு வந்த பொது ஜன பெர­முன கட்­சியும் அதன் ஜனா­தி­ப­தியும் இன்று மக்­களால் வெறுக்­கப்­பட்டு, ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் அவர்­க­ள­து அர­சியல் நகர்­வுகள் இர­க­சி­ய­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டே வரு­கின்­றன.

மக்­களின் பாரிய எதிர்ப்பின் கார­ண­மாக பத­வியை இரா­ஜி­னாமா செய்து நாட்­டை­விட்டு வெளி­யே­றிய கோத்­தா­பய ராஜ­பக்ச மீண்டும் இந்த மாத ஆரம்­பத்தில் நாட்­டுக்கு வருகை தர­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அவர் நாடு திரும்பி இங்கு தங்­கி­யி­ருப்­ப­தற்­கான சட்ட ரீதி­யான பாது­காப்பை வழங்­கு­வது அர­சாங்­கத்தின் கடமை என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி என்ற வகையில் அவ­ருக்கு உரித்­தான சலு­கை­களைப் பெற அவ­ருக்கு தகு­தி­யுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கோத்­தா­பய ராஜ­பக்ச நாடு திரும்­பு­வதை எவரும் எதிர்க்கப் போவ­தில்லை. அதற்­கான முழு உரி­மையும் அவ­ருக்கு உள்­ளது. எனினும் அவர் தனது ஆட்­சிக்­கா­லத்தில் எடுத்த தவ­றான தீர்­மா­னங்­களும் நட­வ­டிக்­கை­களும் நாட்டைப் பொரு­ளா­தார ரீதி­யாக இவ்­வ­ளவு தூரம் பின்­ன­டைவில் தள்ளக் கார­ண­மா­கின என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அந்த வகையில் அவ­ரது கடந்த கால செயற்­பா­டுகள் சட்­டத்தின் முன் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இத­னி­டையே அவரை ஜனா­தி­ப­தி­யாக்­கிய பொது ஜன பெர­முன, மக்கள் எழுச்சிப் போராட்­டத்தின் கார­ண­மாக கடந்த சில மாதங்­க­ளாக அடக்­கியே வாசித்­தது. அக் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருந்­தனர். மஹிந்த ராஜ­பக்­சவும் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­கினார். பொது ஜன பெர­மு­னவின் ஸ்தாப­க­ரான பசில் ராஜ­பக்ச அமைச்சுப் பத­வியை துறந்­த­துடன் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிச் சென்றார். குறிப்­பாக மக்­களின் கடும் எதிர்ப்பைச் சம்­பா­தித்த ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரும் அவ­ருக்கு மிக நெருக்­க­மா­ன­வர்­களும் பொது இடங்­களில் தோன்­று­வ­திலும் அமைச்சுப் பத­வி­களை வகிப்­ப­திலும் அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலும் தவிர்ந்­தி­ருந்­தனர். எனினும் கடந்த சில நாட்­க­ளாக பொது ஜன பெர­முன மீண்டும் தனது அர­சியல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடந்த வாரம் இடம்­பெற்ற கட்­சியின் உயர்­பீடக் கூடத்தில் தமது தோல்­விக்­கான கார­ணங்கள் குறித்தும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. அதே­போன்று நேற்­றைய தினம் மஹிந்த ராஜ­பக்­சவின் தலை­மையில் கட்­சியின் மற்­றொரு கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த நகர்­வுகள் நாட்டில் இன­வா­தத்தை விதைத்து, மக்கள் மத்­தியில் பிள­வு­களை உரு­வாக்கி ஆட்­சிக்­க­தி­ரைக்கு வந்த இக் கட்சி மீண்டும் தமது ஆட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­தையே காண்­பிக்­கின்­றன. பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்சி என்ற வகையில், அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பொது ஜன பெர­மு­ன­வுக்கு பூரண அதி­காரம் உள்­ளது என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. எனினும் நாட்டை இந்­த­ளவு தூரம் பின்­ன­டை­வுக்குக் கொண்டு சென்று, பிழை­யான கொள்­கைகள் கார­ண­மாக பொரு­ளா­தார சீர்­கு­லை­வுக்கு வித்­திட்ட இக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதுவே சுமார் 100 நாட்­க­ளுக்கும் மேலாக காலி முகத்­தி­டலில் இரவு பக­லாக போராட்­டத்தில் ஈடு­பட்ட மக்­க­ளது கோரிக்­கை­யாகும். இவர்கள் கொள்­ளை­யிட்ட பணத்தை மீட்டுத் தாருங்கள் என்ற கோஷங்கள் நாடெங்கும் ஒலித்­தன. எனினும் ஜனா­தி­பதி பதவி வில­கி­யதைத் தொடர்ந்து மக்கள் இக் கோஷங்­களை மறந்­து­விட்­டாலும், நாம் மீண்டும் அதனை வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

புதி­தாக பத­விக்கு வந்த ரணில் விக்­ர­ம­சிங்க, ராஜ­பக்­சாக்­களை பாது­காப்­ப­தற்கு முனை­கின்றார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இதனை மறுப்­ப­தற்­கு­மில்லை. மீண்டும் ராஜ­பக்­சாக்­களும் அவ­ரது சகாக்­களும் தமது வழக்­க­மான அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சாதகமான களத்தை ரணில் விக்ரமசிங்க உருவாக்கி வருகிறார் என்பதையே அண்மைய நகர்வுகள் காண்பிக்கின்றன.

அடுத்த வருட ஆரம்பத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொது ஜன பெரமுன சக்திகள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான காய் நகர்த்தல்களையே இப்போது முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்னராக அவர்கள் இந்த நாட்டுக்கு இழைத்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் அரசுக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அதன் பிற்பாடே அவர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும். இன்றேல் இந்த நாடு மீண்டும் சூறையாடப்படுவதை தடுக்க முடியாது போய்விடும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.