சூழ­லுக்கு தீங்கு விளை­விக்கும் சாய்ந்­த­ம­ருது விலங்­க­று­மனை: வாக்­கு­று­தியை நிறை­வேற்­றுமா கல்முனை மாந­கர சபை?

0 350

றிப்தி அலி

சாய்ந்­த­ம­ருது – வொலி­வே­ரியன் கிரா­மத்­தி­லுள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான விலங்­க­று­மனை (மடுவம்) மூலம் சுற்­றா­ட­லுக்கு தீங்கு விளை­விக்­கப்­ப­டு­கின்ற அதே­நேரம் குறித்த விலங்­க­று­மனை எந்­த­வித அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளு­மின்றி கடந்த பல வரு­டங்­க­ளாக இயங்கி வரு­கின்­றமை தக­வ­ல­றியும் சட்­டத்தின் கீழ் சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பத்தின் மூலம் தெரிய வந்­துள்­ளது.

குறித்த விலங்­க­று­ம­னை­யி­லி­ருந்து சுற்­றா­ட­லுக்கு தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய வகை­யி­லான துர்­நாற்றம் கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, மாளி­கைக்­காடு மற்றும் மாவ­டிப்­பள்ளி ஆகிய பகு­தி­களில் வீசு­வ­தாக பொது­மக்­க­ளினால் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளினால் விலங்­க­று­ம­னைகள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும் என 1893ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க இறைச்சிக் கடைக்­காரர் சட்டம் மற்றும் 1947ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மாந­கர சபை கட்­டளைச் சட்டம் போன்ற பல சட்­டங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. எனினும், கல்­முனை மாந­கர சபை­யினால் கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக எந்­த­வொரு விலங்­க­று­ம­னையும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. “மக்­களின் எதிர்ப்பு, இடப்­பற்­றாக்­குறை, பொரு­ளா­தாரப் பிரச்­சினை போன்­ற­வற்றின் கார­ண­மா­கவே விலங்­க­று­மனை நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை” என கல்­முனை மாந­கர சபை தெரி­விக்­கின்­றது.

இதன் கார­ண­மாக கல்­முனை மாந­க­ரத்தில் மாட­றுப்பு என்­பது பாரிய பிரச்­சி­னை­யாக மாறி­யது. இதற்கு தீர்வு காண்­ப­தற்­காக விலங்­க­று­மனை நடத்­து­வ­தற்கு `அபீபா குறூப் ஒப் கம்­பனி` எனும் தனியார் நிறு­வ­னத்­திற்கு கல்­முனை மாந­கர சபை அனு­மதி வழங்­கி­யது.

கடந்த 2010ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்தக் கம்­ப­னியின் விலங்­க­று­மனை பொது­மக்கள் செறிந்து வாழும் சாய்ந்­த­ம­ருது – வொலி­வே­ரியன் கிரா­மத்தில் சுமார் ஒன்­றரை ஏக்கர் காணிப் பகு­தியில் அமைந்­துள்­ளது.

“கல்­முனை மாந­கர சபை­யுடன் 30 வருட காலத்­திற்கு மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் பிர­கா­ரமே இந்த விலங்­க­று­மனை நடத்­தப்­ப­டு­கின்­றது” என இக்­கம்­ப­னியின் பணிப்­பாளர் எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

அனு­ம­திப்­பத்­திரம்
தின­சரி சுமார் 15 – 20 மாடு­களும் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் அதிக எண்­ணிக்­கை­யி­லான மாடு­களும் அறுக்­கப்­படும் இந்த விலங்­க­று­ம­னைக்கு மாந­கர சபையின் சுகா­தார வைத்­திய அதி­கா­ரியின் சிபா­ரி­சுடன் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அனு­மதிப் பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள விடயம் தகவல் அறியும் விண்­ணப்­பத்தின் ஊடாக தெரி­ய­வந்­தது.

இறு­தி­யாக KMC/05/TL/2013/40 எனும் இலக்க அனு­ம­திப்­பத்­திரம் கல்­முனை மாந­கர சபை­யினால் கடந்த 2019 இல் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான கட்­டுப்­ப­ண­மாக 2 இலட்சம் ரூபாவும் அனு­ம­திப்­பத்­திர கட்­ட­ண­மாக வரு­டாந்தம் 5 ஆயி­ரத்து நூறு ரூபாவும் மாந­கர சபை­யினால் அற­வி­டப்­பட்­டுள்­ளது.

எனினும், 01.01.2020 இலி­ருந்து இன்று வரை குறித்த விலங்­க­று­ம­னைக்கு கல்முனை மாந­கர சபை­யினால் எந்­த­வித அனு­ம­திப்­பத்­தி­ரமும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்­றாடல் சட்­டத்தின் மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யினால் இந்த விலங்­க­று­ம­னைக்கு வரு­டாந்தம் வழங்­கப்­பட வேண்­டிய சுற்­றாடல் பாது­காப்பு உரிமம் கடந்த 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

“இங்கு மேற்­கொள்­ளப்­படும் நீர் சுத்­தி­க­ரிப்பு முறை, கழி­வுகள் வெளி­யேற்றம் போன்­றன ஒழுங்­கு­மு­றை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அது­போன்று மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் நிய­மங்கள் தொடர்பில் எம்மால் வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னைகள் எதுவும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான கார­ணங்­க­ளினால் இந்த விலங்­க­று­ம­னைக்­கான சுற்­றாடல் பாது­காப்பு உரிமம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது” என அதி­கார சபையின் அம்­பாறை மாவட்ட அலு­வ­ல­கத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

கட்­டணம்
விலங்­க­று­ம­னைக்­கான கூலி­யாக ஒரு மாட்­டுக்கு 1,500 ரூபாவும், மாந­கர சபைக்கு 500 ரூபாவும் அற­வி­டு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும், 2 ஆயிரம் ரூபா­விற்கு மேற்­பட்ட தொகை இங்கு அற­வி­டப்­ப­டு­கின்ற விடயம் கல்­முனை மேயர் ஏ.எம். றகீபின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­லப்­பட்ட பின்னர் ஒரு மாட்­டுக்கு ஆயி­ரத்து தொள்­ளா­யிரம் ரூபா மாத்­தி­ரமே அற­வி­டு­மாறு மிகக் கண்­டிப்­பான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு தற்­போது அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, 2011ஆம் ஆண்டு முதல் செயற்­ப­டு­கின்ற இந்த விலங்­க­று­ம­னை­யினால் கல்­முனை மாந­கர சபைக்­கான வரு­மானம் 2021 ஆம் ஆண்­டி­லி­ருந்தே வழங்­கப்­ப­டு­கின்­றது.

இதற்­க­மைய 2021 இல் 40 இலட்­சத்து 52ஆயி­ரத்து அறுநூற்று 50 ரூபாவும், 2022ஆம் ஆண்­டுக்­காக கடந்த ஜூன் 09ஆம் திகதி வரை 17 இலட்­சத்து 47 ஆயிரம் ரூபாவும் குறித்த விலங்­க­று­ம­னை­யினால் மாந­கர சபைக்கு செலுத்­தப்­பட்­டுள்­ளது.

ஏனைய தொழிற்­பா­டுகள்
இந்த விலங்­க­று­ம­னையில் தோல்கள் சேமிக்­கப்­பட்டு பத­னிடல், எலும்­புகள் சேமிக்­கப்­பட்டு தூள்­க­ளாக்­கப்­படல் மற்றும் கொழுப்­புக்கள் சேமிக்­கப்­பட்டு உருக்­குதல் போன்ற செயற்­பா­டுகள் கடந்த பல வரு­டங்­க­ளாக இடம்­பெற்­றுள்­ளன.

இது மூன்றும் வெவ்­வேறு துறைகள் என்­ப­தனால் இவற்­றுக்கு தனித்­த­னி­யாக பல்­வேறு திணைக்­க­ளங்­க­ளி­ட­மி­ருந்து அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பெறப்­பட வேண்டும். எனினும் இவற்­றுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் எது­வு­மின்­றியே இந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும், குறித்த தொழிற்­பா­டு­களை தற்­போது இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக விலங்­க­று­ம­னையின் உரி­மை­யாளர் எம். அஷ்ரப் கூறு­கின்றார். இதனை கல்­முனை மேயர் ஏ.எம். றகீப் உறு­திப்­ப­டுத்­தி­ய­துடன், “குறித்த விலங்­க­று­ம­னையின் கழி­வுகள் அனைத்தும் கடந்த ஒரு மாத கால­மாக பள்­ளக்­காட்­டி­லுள்ள குப்பை மேட்­டிற்கு நாளாந்தம் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன” என்றும் தெரி­வித்தார்.

கழி­வுநீர் சுத்­தி­க­ரிப்பு செயற்­திட்­ட­மொன்றே இல்­லாத இக்­கம்­ப­னி­யினால் கழி­வுநீர் சேக­ரிப்பு நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக பொது­மக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.
இது தொடர்பில் உரி­மை­யாளர் அஷ்­ர­பிடம் வின­வி­ய­தற்கு, “கழிநீர் சேக­ரிப்பு நட­வ­டிக்­கை­யி­னையும் தற்­போது நிறுத்­தி­விட்டோம். எனினும், சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­தி­லுள்ள இரண்டு உண­வ­கங்­களில் மாத்­தி­ரமே கழி­வுநீர் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றது” என்றார்.
எனினும் ஹோட்டல் கழி­வுநீர், விலங்­க­று­ம­னையின் கழி­வுநீர் ஆகி­யன எவ்­வாறு சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது இன்று வரை கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

சுகா­தாரத் துறையின் செயற்­பாடு
இந்த விலங்­க­று­மனை தொடர்பில் சாய்ந்­த­ம­ருது சுகா­தார வைத்­திய அதி­கா­ரிக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்டை அடுத்து மாந­கர சபையின் சுகா­தார வைத்­திய அதி­காரி மற்றும் சாய்ந்­த­ம­ருது பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்கள் கள விஜயம் மேற்­கொண்ட போது இங்கு சூழலை மாசு­ப­டுத்தக் கூடிய வகை­யி­லான சில குறை­பா­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக கல்­முனை பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் (RDHS) அலு­வ­லகம் தெரி­வித்­தது.

இதனை துரித கதியில் நிவர்த்தி செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­ட­துடன் சாய்ந்­த­ம­ருது சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் இப்­பி­ரச்­சினை தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரின் பங்­கு­பற்­ற­லுடன் கடந்த மே 17ஆம் திகதி நடை­பெற்ற விசேட கூட்­டத்தில் 11 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

இதில் ஒரிரு தீர்­மா­னங்கள் மாத்­தி­ரமே விலங்­க­று­ம­னை­யினால் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக RDHS அலு­வ­லகம் கூறு­கின்­றது. “உரிய அதி­கா­ரி­களின் ஆலோ­சனைப் படி தர­மான முறையில் இக்­க­ழி­வு­களை அகற்­றுதல் அல்­லது மீள் சுழற்சி செய்­வதன் மூலம் சூழல் மாச­டை­வதைத் தடுக்­கலாம்” என RDHS அலு­வ­லகம் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளது. அவ்­வா­றில்­லாத பட்­சத்தில் சுவாச நோய்கள், மன உளைச்சல், சுகா­தார சீர்­கே­டுகள் இப்­பி­ராந்­தி­யத்தில் ஏற்­படும் என RDHS அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.

சட்ட நட­வ­டிக்கை
இதே­வேளை, மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கொன்­றுக்­க­மைய, கடந்த 2021 ஜூலையில் குறித்த விலங்­க­று­ம­னைக்கு கல்­முனை நீதி­மன்­றினால் 10 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­ட­துடன் அதி­கா­ர­ச­பையின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய விலங்­க­று­மனை பேணப்­பட வேண்டும் எனவும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில், கல்­முனை பிர­தே­சத்தில் வீசிய துர்­நாற்றம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் கல்­முனை RDHS, வைத்­திய அதி­கா­ரிகள், பிராந்­திய ஊட­க­வி­ய­லாளர் உள்­ளிட்ட எட்டு பேருக்கு எதி­ராக மாந­கர சபையின் சுகா­தாரக் குழுவின் தலைவர் ரோஷன் அக்­தா­ரினால் பொது­நல வழக்­கொன்று கல்­முனை நீதி­மன்றில் கடந்த மே 23ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு சில நாட்­களில் இப்­பி­ர­தே­சத்தில் வீசிய துர்­நாற்றம் இல்­லாமல் போனமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். எவ்­வா­றா­யினும் இந்த விலங்­க­று­மனை எந்­த­வித அனு­ம­தி­யு­மின்றி செயற்­ப­டு­கின்ற விடயம் நீத­வானின் கவ­னத்­திற்கும் கொண்­டு­செல்­லப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து குறித்த விலங்­க­று­ம­னைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கடந்த ஜூலை 18ஆம் திகதி கல்­முனை நீதவான் எம்.எஸ்.எம்.சம்­சுதீன் உத்­த­ர­விட்டார்.
எனினும், கல்­முனை மாந­கர சபை இன்று வரை குறித்த விலங்­க­று­ம­னைக்கு எதி­ராக எந்­த­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. இது தொடர்பில் கல்முனை மேயர் ஏ.எம். றகீபினை தொடர்புகொண்டு வினவிய போது,

“இப்பிரதேசத்தில் வீசிய தூர்நாற்றம் தற்போது இல்லாமல் போயுள்ளது. இது தொடர்பில் செப்டம்பர் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள இவ்வழக்கு மீதான விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகி தெளிவுபடுத்தவுள்ளேன். எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் பொதுமக்களுக்கும், சூழலுக்கும் தீங்குவிளைவிக்காத வகையிலான பொது விலங்கறுமனையொன்றினை சாய்ந்தமருதில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்கு தேவையான இரண்டு கோடி ரூபா பணத்தினை கடனடிப்படையில் பெறுவதற்கான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளேன். இதனால் தனியார் விலங்கறுமனையினை மூன்று மாதத்திற்கு மாத்திரமே நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளேன்” என்றார்.

கிழக்கு மாகா­ணத்தில் சனத்­தொகை அடர்த்­தி­மிக்க நக­ரங்­களில் ஒன்­றாக விளங்கும் கல்­முனை மற்றும் அதன் சுற்­றயல் பிர­தே­சங்­களின் சுற்­றுச்­சூ­ழலை பாதிக்கும் வகை­யி­லான இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு கல்­முனை மாந­கர சபை ஒரு­போதும் அனு­மதி வழங்­கக்­கூ­டாது. வாக்­கு­று­தி­ய­ளித்­த­வாறு பொது விலங்­க­று­ம­னையை நிர்­மா­ணித்து, பொது மக்­க­ளுக்கும் சுற்றுச் சூழ­லுக்கும் பாதிப்­பற்ற வகையில் இயங்கச் செய்வது மாநகர சபையின் பொறுப்பாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.