கபூரியாவுக்குரிய வக்பு சொத்துகளை யாரும் உரிமை கொண்டாட முடியாது

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திட்டவட்டமாக தெரிவிப்பு

0 378

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கபூ­ரி­யாவின் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணி உட்­பட வக்பு சொத்­துக்­களைப் பாது­காக்க வேண்டும். இச்­சொத்­தினை குடும்­பத்­தி­னரோ தனி­யாரோ உரிமை கொண்­டாட முடி­யாது என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

இதுகுறித்து உல­மா­ ச­பை­யும், வக்பு சபையும் தீவிர கவனம் செலுத்தும் என உலமா சபையின் செய­லா­ளரும் வக்பு சபையின் உறுப்­பி­ன­ரு­மான அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரியின் வக்பு சொத்­துக்கள் தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.
அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ‘மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி மற்றும் அதன் சொத்­துக்கள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பு மர்ஹூம் அப்துல் கபூ­ரினால் வக்பு செய்­யப்­பட்­டுள்­ளன. வக்பு சபையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பதிவும் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளாக குடும்ப அங்­கத்­த­வர்­களும் வெளி­யாரும் நிய­மிக்­கப்­ப­டலாம் என்ற நிபந்­த­னையும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
கபூ­ரி­யாவின் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த காணி உட்­பட வக்பு சொத்­துக்­களைப் பாது­காக்க வேண்டும். இச்­சொத்­தினை குடும்­பத்­தி­னரோ தனி­யாரோ உரிமை கொண்­டாட முடி­யாது.

கபூ­ரியா அர­புக்­கல்­லூரி மற்றும் அதன் வக்பு சொத்­துக்கள் தொடர்­பான வழக்­குகள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
வக்பு சொத்­தினை தனி­யாரோ, வக்பு செய்த குடும்­பத்­தி­னரோ மீண்டும் உரிமை கொண்டாட முடியாது. சமூகம் இது விடயத்தில் தெளிவு பெற வேண்டும். வக்பு சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வக்பு சபைக்குள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.