பாராளுமன்றத்தில் பதவி உயர்வு வழங்கும்போது உரிமை மீறப்பட்டதாக ஆணைக்குழுவில் முறைப்பாடு

0 448

பாரா­ளு­மன்ற சிரேஷ்ட ஆய்வு உத்­தி­யோ­கத்­த­ராக 19 வரு­டங்­க­ளாக பணி­யாற்­றி­வரும் முஹம்­மது அஜி­வதீன், தனக்கு பதவி உயர்வு மறுக்­கப்­பட்­ட­தாகக் குறிப்­பிட்டு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்­துள்ளார்.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிறப்புப் பட்­டத்தைப் பெற்ற அஜி­வதீன் அதே பல்­கலைக் கழ­கத்தில் புவி­யியல் துறை உதவி விரி­வு­ரை­யா­ள­ராக சுமார் மூன்று வரு­டங்கள் கட­மை­யாற்றி பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்­சையில் தேர்ச்­சி­ய­டைந்து பாரா­ளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­க­ராக 2003 ஆம் ஆண்டு பத­வி­யேற்றார்.

தமது 19 வருட சேவைக் காலத்தில் பாரா­ளு­மன்ற ஆய்வுத் துறை அபி­வி­ருத்­திக்கும் தேசிய சட்­ட­வாக்க பணிக்கும் தான் சேவை­யாற்­றி­யுள்­ள­தா­கவும் 2005 ஆம் ஆண்டு தனக்குக் கிடைத்த வெளி­நாட்டு புல­மைப்­ப­ரிசில் வாய்ப்பைப் பெற இலங்கைப் பாரா­ளு­மன்ற நிரு­வாகம் மறுத்த நிலையில் உள்­நாட்டில் முது தத்­து­வ­மானி கற்­கையை பூர்த்­தி­செய்து பாரா­ளு­மன்ற ஆய்வுத் துறைக்கு பங்­க­ளித்­துள்­ள­தா­கவும் அவர் தனது முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பாரா­ளு­மன்ற செய­லக வர­லாற்றில் முது தத்­து­வ­மானி பட்டம் பெற்ற முத­லா­வது அதி­கா­ரியும் இவ­ராவார். பாரா­ளு­மன்ற நடை­மு­றைகள் மற்றும் ஆய்வு முறை­மைகள் பற்றி இந்­தியா பாரா­ளு­மன்றம், பேர்ன் பல்­க­லைக்­க­ழகம், சுவிட்­ஸர்­லாந்து, பிரித்­தா­னி­யாவின் வெட்ஸ்­மி­னிஸ்டர் நிறு­வனம் உள்­ளிட்ட அமைப்­புக்­களில் விஷேட பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற இவர் பல நாடு­களில் தனது ஆய்வுக் கட்­டு­ரை­களை முன்­வைத்­துள்ளார்.

2019 ஆம் ஆண்­டு­வரை பாரா­ளு­மன்ற ஆய்வு வட்­டத்தின் முன்­னோடி ஆய்­வா­ள­ரா­கவும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் “NEXTGENCHAMPION” என்ற விரு­தையும் இவர் பெற்­றுள்ளார். இருப்­பினும் பிர­தான ஆய்வு உத்­தி­யோ­கத்தர் என்ற பத­விக்கு தன்னை விட 7 வரு­டங்கள் மூப்­பு­ரிமை குறைந்த ஒரு உத்­தி­யோ­கத்தர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இது விட­யத்தில் தனக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பித்­துள்ள முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

பதவி உயர்வு வழங்­கு­வ­தற்­கான பொறி­மு­றையில் பொது நல­வாய நாடு­களின் பாரா­ளு­மன்ற சங்­கத்­தினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்றும் இதன் மூலம் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தனது முறைப்­பாட்டில் மேலும் டில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.