முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டுமா?

0 323

எஸ்.என்.எம்.சுஹைல்

நாடு அத­ல­பா­தா­ளத்தில் இருக்­கி­றது. நாட்டை சூறை­யா­டி­ய­வர்கள் மக்கள் எழுச்சி மூலம் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனாலும், அர­சி­ய­ல­மைப்பின் சட்ட ஓட்­டைகள் மூலம் அந்த கள்­வர்கள் தொடர்ந்தும் காப்­பாற்­றப்­ப­டு­கின்­றனர். இந்­த­வொரு சூழலில் ஜனா­தி­ப­தி­யாகும் அதிர்ஷ்டம் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு கிடைத்­தி­ருக்­கி­றது.

ஆசி­யாவின் சிறந்த அர­சி­யல்­வா­தி­களில் ஒருவர் என பெயர் பெற்ற ரணில் விக்­ர­ம­சிங்க மேற்கு நாடு­களின் நல்­ல­பிப்­பி­ரா­யத்தை பெற்­றவர். மேற்கின் செல்­லப்­பிள்ளை என்று அழைக்­கப்­படும் ரணில், மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் நெருங்கிப் பழ­கி­யதை நாம் கண்­ட­தில்லை. எனினும், அவ­ரது கடந்த கால அர­சியல் நகர்­வு­க­ளா­னது அனைத்து நாடு­களின் நல்­ல­பிப்­பி­ரா­யத்தை பெற்­றி­ருக்­கின்­றமை வெளிப்­ப­டை­யா­ன­தாகும்.

கோட்­டாபய ராஜ­பக்ச நாட்­டை­விட்டு தப்­பி­யோடி ஜனா­தி­பதி பத­வியை துறந்த பின்னர் அவரின் எஞ்­சிய பதவிக் காலத்­துக்­காக பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பின் மூலம் இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் ரணில் விக்­ர­ம­சிங்க மீது சர்­வ­தேச நாடுகள் நம்­பிக்கை வைத்­துள்­ளன.

இந்­நி­லையில் இந்த இக்­கட்­டான சூழலில் நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்கு ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வதா? அல்­லது அவ­ரிடம் தொடர்ந்து ஆட்­சியை கொடுப்­பதன் ஊடாக ஊழல்­வா­தி­களும் மோசடிக் காரர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு துணை போவதா? என்ற நிலை மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு இருக்­கின்­றன.
பொது­ஜன பெர­மு­ன­வினர் தம்மை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கே ரணிலை தெரிவு செய்­தி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்­றன. எனினும், எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ரணி­லுடன் இணைந்து செயற்­ப­டு­வதில் தாழ்வுச் சிக்கல் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது வழ­மை­யான தமது எதிர்ப்பு அர­சி­யலை மேலும் வலுப்­ப­டுத்­திக்­கொண்டு மக்கள் போராட்­டத்தை இன்னும் உத்­வே­கப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

இது அர­சியல் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு பொருத்­த­மான தரு­ணமா? அல்­லது பாதா­ளத்தில் உள்ள நாட்டை மீட்­டெ­டுக்க இணைந்து செயற்­படும் தரு­ணமா என்­பதை அனைத்து தரப்­பி­னரும் தீர்­மா­னிக்க வேண்டும்.

இது இப்­ப­டி­யி­ருக்க, இலங்­கையில் முத­லா­வது நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர்.ஜய­வர்­தன நாட்டின் முத­லா­வது முஸ்லிம் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக ஏ.சீ.எஸ்.ஹமீதை நிய­மித்­தி­ருந்தார். பின்னர், டீ.பி.விஜே­துங்க இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்­ற­போது மீண்டும் ஏ.சீ.எஸ்.ஹமீட் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரானார். 28 வரு­டங்­களின் பின்னர் குறித்த அமைச்சு பத­வி­யா­னது மற்­றொரு முஸ்லிம் பிர­தி­நி­திக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கோட்டா அரசில் நீதி மற்றும் நிதி அமைச்சு பத­வி­களை வகித்த அலி சப்­ரிக்கு குறித்த அமைச்சுப் பதவி கிடைத்­தி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே சந்­தி­ரிக்­காவின் அமைச்­ச­ர­வையில் மற்­று­மொரு சிறு­பான்மை உறுப்­பி­ன­ரான லக்ஷ்மன் கதிர்­காமர் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பதவி வகித்தார். நாட்டில் உள்­நாட்­டுப்போர் உக்­கி­ர­ம­டைந்து நாடு நெருக்­க­டியை சந்­தித்­தி­ருந்த போது சந்­தி­ரிக்கா சாமர்த்­தி­ய­மாக ஒரு தமி­ழரை வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மித்து நாட்­டுக்கு சர்­வ­தேச உத­வி­களை பெற்றுக்கொள்வதற்கான வழியை சமைத்துக்கொண்டார்.
மீண்டும் ஒரு­முறை நாடு மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் இந்­தரு­வாயில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலி­சப்­ரியை வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மித்­தி­ருப்­பது இரா­ஜ­தந்­தி­ர­மா­கவே பார்க்கவேண்டியுள்ளது.

முஸ்லிம் நாடு­களின் உத­வி­களைப் பெற்று நாட்டின் பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற எண்­ணப்­பாடு ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு இருக்­கலாம். இதற்­கா­கவே அலி சப்­ரியை அப் பத­விக்கு நிய­மித்­தி­ருக்­கலாம். அல்­லது அவ­ரது ஆங்­கிலப் புலமை இதற்குக் கார­ண­மாக இருக்க கூடும். எனினும் இந்த நேரத்தில் முஸ்லிம் கட்­சிகள் ஜனா­தி­ப­திக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டுமா? தொடர்ந்தும் எதிர்ப்பு அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்­டுமா? என்ற கேள்வி எழ ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

பெரும்­பாலும் அடுத்த தேர்­தலை இலக்­காகக் கொண்டு முஸ்லிம் காங்­கி­ரசும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு இணைந்து பய­ணிக்க விரும்­பு­வ­தா­கவே தெரி­கி­றது. ஏற்­க­னவே, அமோ­க­மாக சிங்­கள மக்­களின் ஆத­ரவை பெற்று அரி­யா­சனம் ஏறிய ராஜ­பக்­சாக்கள் துரத்­தப்­பட்­ட­தனால் இந்த அர­சாங்­கத்தில் இணைந்தால் நாளை தமக்கும் இதே நிலை ஏற்­படும் என்ற அச்சம் இவர்­களை ஆட்­கொண்­டி­ருக்­கலாம். முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் என்றோ வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பது பல­ரது உளக்­கு­முறல், இருந்­தாலும் மக்கள் எழுச்­சிக்கு பின்­னரும் இவர்கள் தமது ஏமாற்று அர­சி­யலை மாற்­றிக்­கொள்­ளா­தி­ருப்­பார்­க­ளே­யானால் எதிர்­வரும் காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்­குள்ளும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்கு எதி­ரான பேராட்டம் வலு­வாக வெடிக்கும் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்.

இது இப்­ப­டி­யி­ருக்க, இன்னும் இரண்­டரை வருட காலத்­திற்கு ரணில் அர­சாங்­கமே அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஆட்­சியில் இருக்கப் போகி­றது (மக்கள் எழுச்சி உக்­கி­ர­ம­டைந்தால் தவிர). இந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டை மோச­மான பொரு­ளா­தார பின்­ன­டை­வி­லி­ருந்து மீட்­டெ­டுக்க இந்த அர­சாங்­கத்­திற்கு முஸ்லிம் கட்­சிகள் உதவ வேண்­டுமா என்­பதை முஸ்லிம் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அத்­தோடு, சர்­வ­கட்சி அர­சாங்­கத்தில் முஸ்லிம் கட்­சிகள் பங்­கேற்க வேண்­டுமா என்­ப­தையும் விரை­வாக தீர்­மா­னிக்க வேண்டும்.

கடந்த ஒரு தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் உக்­கி­ர­ம­டைந்­தி­ருந்­த­மை­யினால் அரபு நாடு­களின் எதிர்ப்பை இந்­நாடு சந்­தித்­தது. குறிப்­பாக ராஜ­பக்­சாக்கள் முஸ்லிம் நாடு­களை ஆத்­தி­ர­மூட்டும் வித­மாக செயற்­பட்­டதன் கார­ண­மாக எமக்கு கிடைக்­கப்­பெறும் உத­வி­களும் சலு­கை­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக கொரோனா தொற்றின் கார­ண­மாக உயி­ரி­ழந்த முஸ்ம்­களின் ஜனா­ஸாக்கள் வலுக்­கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்­ட­போது இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் முன்னாள் ஜனா­தி­பதி கோட்டா­பய ராஜ­பக்­ச­விடம் விடுத்த கோரிக்­கையை அலட்­சியம் செய்­தமை முஸ்லிம் நாடுகள் இலங்கை அர­சாங்­கத்தின் மீது கோபம்­கொள்ள பிர­தான கார­ண­மாக இருக்­கின்­றது. அத்­தோடு, சில இஸ்­லா­மிய நாடு­களின் தொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு தீவி­ர­வாத சாயம் பூசி அவற்­றிக்கு தடை விதித்­த­மையும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு எதி­ரான பிர­தான குற்­றச்­சாட்­டாக இருக்­கின்­றது.

ராஜ­பக்­சாக்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. அதே­போன்று, ராஜ­பக்­சாக்­களை காப்­பாற்­று­ப­வர்­க­ளுக்கும் இட­ம­ளிக்க முடி­யாது. ஆனால், எமது நோக்கம் பழி­வாங்­கு­வ­தல்ல, நாட்டின் தற்­போ­தைய சூழலில் எவ்­வாறு நாமும் எமது பக்­க­ளிப்பை செய்ய முடியும் என்­ப­தாகும்.

எனவே, தற்­போது வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் அலி சப்­ரிக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சு நடத்தி கொள்கையளவில் ஒரு உடன்பாட்டிற்கு வருவது சிறந்தாகும்.

அமைச்சுப் பதவிகள் பெறுவதோ அல்லது தேர்தல் நோக்கங்களை அடைந்துகொள்வதோ இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக தோன்­ற­வில்லை. நாட்டின் நலன்­க­ருதி புதிய கொள்­கை­யுடன் ஒன்­றி­ணைந்து தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக பேச்சு நடத்­து­வதில் தவ­றில்லை.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்திற்குள் கலந்­து­ரை­யாடல் அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­தோடு, ஊழல்­வா­தி­க­ளுக்கும் மோசடிக்காரர்­க­ளுக்கும் எதிரான நிலைப்பாட்டிலும் மாற்றமிருக்கக் கூடாது என்பதில் தெளிவு அவசியமானதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.