இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28 இல் சவூதி பயணம்

ஜூலை 2, 3 இலும் யாத்திரிகர்கள் செல்வர்

0 317

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கை­யி­லி­ருந்து எதிர்­வரும் 28 ஆம் திகதி முதல் தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளனர்.தொடர்ந்து 30ஆம் திகதி ஜூலை மாதம் 2ஆம், 3ஆம் திக­தி­களில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைச் சுமந்து கொண்டு விமா­னங்கள் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­ல­வுள்­ளன. இதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் ஹஜ் முகவர் நிலை­யங்கள்  பூர்த்தி செய்­துள்­ளன. இவ்­வ­ருடம் 1585 ஹஜ் கோட்டா சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் வழங்கப் பட்­டி­ருந்­தாலும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக 968 பேரே தங்கள் யாத்­தி­ரையை உறுதி செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 73 ஹஜ் முக­வர்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டது.என்­றாலும் 9 முதன்மை முகவர் நிலை­யங்­க­ளுக்கே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அழைத்துச் செல்­வ­தற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டது.இத­ன­டிப்­ப­டையில் 50 ஹஜ் முக­வர்கள் 9 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுடன் இணைந்து பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

ஹஜ் யாத்­தி­ரையை நிறைவு செய்து கொண்டு அவர்கள் ஜூலை மாத இறு­தியில் நாடு திரும்­ப­வுள்­ள­தாக ஹஜ் உம்ரா முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம்..ஹிசாம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். இதே­வேளை இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் முகவர் நிலை­யங்கள் வழங்கும் சேவை­க­ளுக்கு அமை­வாக 20 முதல் 25 இலட்சம் ரூபா­வாக அமையும்.
ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தமது கடமையின் போது இலங்கை தாய்நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.