ஜென்மபாவத்தின் மந்திரவாதிகளும் பாவவிமோசனமும்

0 408

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

ஆதி­ம­னிதன் ஆதம் (அலை) பர­லோ­கத்­தி­லி­ருந்து இக­லோ­கத்­துக்கு வீசி எறி­யப்­பட்­ட­தி­லி­ருந்தே மனி­த­னு­டைய ஜென்­ம­பாவம் ஆரம்­பித்­து­விட்­ட­தென்றும் அதனைக் கழு­வவே குழந்­தைகள் ஞானஸ்தானம் செய்­யப்­பட வேண்டும் என்றும் கிறிஸ்­தவம் போதிக்­கின்­றது. இப்­ப­டிப்­பட்ட ஒரு ஜென்­ம­பாவம் இலங்­கையின் வர­லாற்­றிலும் ஏற்­பட்­டுள்­ளது. அந்­தப்­பா­வம்தான் இன்­று­வரை இந்த நாட்டைச் சீர்­கு­லைத்து அதன் பொரு­ளா­தா­ரத்­தையும் வங்­கு­றோத்­தாக்கி மக்­க­ளையும் தீராத வேத­னைக்குள் தள்­ளி­யுள்­ளது. அந்தப் பாவம்தான் என்ன? அதன் வேத­னைகள் யாவை? அது அளித்த வேத­னை­க­ளுக்குப் பரி­காரம் காண­வந்த மந்­தி­ர­வா­திகள் யார்? அந்தப் பாவத்­துக்கு விமோ­சனம் உண்டா? என்­ப­ன­போன்ற வினாக்­க­ளுக்­கு­ரிய விடை­களை வாசகர்களுடன் பகிர்ந்­து­கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

ஜென்­ம­பாவம்
சுதந்­திர இலங்கை 1948ல் ஜனித்­தது. அந்த ஜனனம் பிரித்­தா­னியக் குடி­யேற்­ற­வா­தி­களால் வழங்­கப்­பட்ட ஒரு பரிசு. அந்த ஜனனம் உண்­மை­யி­லேயே இந்­தி­யாவில் நடை­பெற்­ற­து­போன்று போராடிப் பெற்ற ஒரு பொக்­கிஷம் அல்ல. மாறாக, அது பிரித்­தா­னி­யரின் உய­ர­டுக்கு வர்க்கமொன்­றி­ட­மி­ருந்து இலங்­கையின் உய­ர­டுக்கு வர்க்கமொன்­றிற்கு கைமா­றிய ஓர் அதி­கார மாற்றம் மட்­டுமே. அதைத்தான் சுதந்திரம் என அழைக்­கிறோம். அந்தச் சுதந்­தி­ரத்தின் ஆட்­சி­முறை பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற ஜன­நா­யக ஆட்­சி­மு­றையைத் தழு­வி­யி­ருந்­தமை தவிர்க்­க­மு­டி­யாத ஒரு விளைவு மட்­டு­மல்ல, அது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தும்­கூட. குடி­யேற்ற காலத்­துக்கு முன்னர் இலங்கை மனி­தா­பி­மா­னமும் காருண்­யமும் கொண்ட பௌத்த மன்னர்களால் ஆளப்­பட்­டி­ருந்­தாலும் அவர்களின் ஆட்­சியை மக்­க­ளாட்சி என்று கூற­மு­டி­யுமா? ஆனால் பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து ஆட்­சியைக் கைப்­பற்­றிய இலங்கைத் தலைவர்கள் முத­லா­வ­தாக மேற்­கொண்ட முயற்சி இலங்­கையர் என்ற ஒரு விரி­வான போர்­வைக்குள் நாட்டின் எல்லா மக்­க­ளையும் சாதி, இன, மத வேறு­பா­டு­க­ளின்றி, சிங்­கப்பூர் செய்­த­து­போன்று, ஒன்­று­ப­டுத்தி நாட்டை கட்டி எழுப்­பாமல் யார் இலங்­கையர் என்று முடி­வு­கட்டும் முயற்­சியில் இறங்­கினர்.

இலங்கை ஒரு சிங்­கள நாடு, ஆதலால் இலங்­கையர் என்றால் அவர்கள் சிங்­க­ளவர்களே என்று முடி­வு­கட்டி மற்ற இனங்­களை ஒவ்­வொன்­றாக ஓரங்­கட்ட வெளிப்­பட்­டனர். முதலில் இந்­திய வம்­சா­வழித் தமி­ழ­ருடன் ஆரம்­பித்து, பறங்­கியர், இலங்கைத் தமிழர், சோனகர், மலாயர் என்­ற­வாறும் பௌத்தர், கிறித்­தவர், இந்­துக்கள், இஸ்­லா­மியர் என்­ற­வாறும் பிரித்து, பௌத்த சிங்­க­ளவர்களே இந்­நாட்டின் அசல் பிர­ஜைகள் என்றும் அவர்களின் ஆட்­சியே நிரந்­த­ர­மாக இருக்­க­வேண்டும் என்றும் மற்ற இனத்­தவர் நாட்டின் பிர­ஜை­க­ளா­ன­போ­திலும் அவர்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக அல்­லது நகல் பிரஜை­க­ளா­கவே வாழ­வேண்டும் என்ற ஜென்­ம­பா­வத்­துக்குள் நாட்டைப் பலி­யாக்­கினர். இந்தப் பேரி­ன­வாத ஜென்­ம­பாவம் இழைத்த தீங்­கு­களே இந்த நாட்டை ஒரு குட்டிச் சுவ­ராக மாற்­றி­யுள்­ளது. சுதந்­திரம் என்ற பூமாலை குரங்­கு­களின் கைக­ளிலே கிடைத்­த­து­போ­லவே இலங்­கையின் ஜன­நா­யக ஆட்­சி­முறை அதன் பேரி­ன­வா­தி­களின் கைக­ளுக்குட் சிக்கிச் சீர­ழி­ய­லா­யிற்று.

அந்த ஜென்­ம­பா­வத்தின் தீங்­கு­கள்தான் அடுக்­க­டுக்­காக இனக்­க­ல­வ­ரங்­க­ளா­கவும் இனச்­சுத்­தி­க­ரிப்பு முயற்­சி­க­ளா­கவும் உள்­நாட்டுப் போரா­கவும் வெடித்து, செல்­வ­முள்ள ஒரு பொன்­மணித் தீவினை பஞ்சம் தலை­வி­ரித்­தாடும் ஒரு வரண்ட பூமியாகக் கரு­தப்­படும் அள­வுக்கு மாற்­றி­யுள்­ளன. அர­சியல், பொரு­ளா­தாரம், கல்வி, நிர்­வாகம் ஆகி­ய­து­றை­களில் பாகு­பா­டான செயற்­பா­டு­களை திட்­ட­மிட்ட முறையில் மேற்­கொண்டு இலங்­கையின் ஏறத்­தாழ முப்­பது சத­வீத மக்­களை நாட்டின் வளர்ச்சியி­லி­ருந்தும் அதன் பலா­ப­லன்­க­ளி­லி­ருந்தும் ஒதுக்கி வைத்­துள்­ளன. ஆனால் அந்தப் பார­பட்­ச­மான ஆட்­சியும் நிர்­வா­கமும் இன்று பெரும்­பான்மை இனத்­த­வ­ரையும் சீர­ழித்­துள்­ளதை அவர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரி­ய­வில்லை. அதனை மறைத்துப் போலி முகம் ஒன்­றைப்­ப­டைத்து பாவத்தின் தீங்­கு­க­ளுக்குப் பரி­காரம் வழங்க அவர்களி­டையே பல மந்­தி­ர­வா­தி­களும் தோன்­றி­யுள்­ளனர். அந்த விந்­தையை இனி நோக்­குவோம்.

மந்­தி­ர­வா­தி­களின் பவனி
சென்­ற­கால மந்­தி­ர­வா­தி­க­ளையும் அவர்களின் வித்­தை­க­ளையும் ஒரு புறம் தள்­ளி­விட்டு இன்­றைய மந்­தி­ர­வா­தி­க­ளையும் அவர்களின் மந்­தி­ரங்­க­ளையும் இங்கே கவ­னிப்போம். அந்த வரி­சையில் முத­லிடம் வகிப்­பவர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச. பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் உரு­வ­டி­வா­னவர் இந்த ஜனா­தி­பதி. தான் சிங்­கள பௌத்தர்களா­லேயே தெரி­யப்­பட்­டவன், அவர்களின் நல­னுக்­கா­கவே பாடு­ப­டுவேன் என்று பகி­ரங்­க­மா­கவே பறை­சாற்­றி­யவர் இந்தப் பெருந்­த­லைவர். ஆனாலும் சந்தர்ப்பத்­துக்­கேற்ப சகல மக்­களின் நல­னையும் பாது­காப்பேன் என்றும் அவர் கூறிக்­கொள்­வ­துண்டு. தனது ஆட்­சியில் இலங்­கையை ஒரு மாற்று வழி­மூலம் (அது என்ன வழி­யென்று இது­வரை யாரும் விப­ரிக்­க­வில்லை) வளமும் மகோன்­ன­தமும் பொங்கி வழியும் நாடாக மாற்­றுவேன் என்று இறு­மாப்­புடன் கூறிய இனா­பி­மானி. அந்த மாற்று வழியே அவ­ரது மந்­திரக் கோலாக மாறி­யது. அந்த வழியே பொரு­ளா­தார வளர்ச்சிக்குப் பொருத்­த­மான வழி­யென்று புகழ் பாடினார் இன்­னொரு மந்­தி­ர­வாதி. அவர்தான் கோத்­தா­பய பொறுக்­கி­யெ­டுத்து நிய­மித்த மத்­திய வங்­கியின் முன்னை நாள் ஆளுனர் பேரா­சி­ரியர் லக்ஷ்மன்.

கோத்­தா­ப­யவின் மாற்­று­வழி வெற்­றி­ய­டை­வ­தற்­காக மத்­தி­ய­வங்­கியின் சட்­ட­ரீ­தி­யான சுதந்­தி­ரத்தை அர­சியற் சந்­தையில் அட­கு­வைத்­தவர் இவ்­வா­ளுனர். ஜனா­தி­ப­தியின் தாளத்­துக்கு நட­ன­மா­டிய ஒரு பொரு­ளியற் கலைஞர். அவர் மட்­டு­மல்ல, ஜனா­தி­ப­தியின் மாற்­று­வ­ழியின் செல­வி­னங்­களை கவ­னிப்­ப­தற்­காக நிதி அமைச்சின் பொறுப்­பையும் தானே ஏற்­றவர் அவ­ரது பிர­தம மந்­திரித் தமயன் மகிந்த ராஜ­பக்ச. ஆனால் அவரால் அதனைச் சமா­ளிக்க முடி­ய­வில்லை. எனவே உடனே அவர்கள் இரு­வரும் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­தனர் பசில் ராஜ­பக்ச என்ற இன்­னொரு மந்­தி­ர­வா­தியை. நாடா­ளு­மன்­றத்­துக்குள் பின்­க­தவால் நுழைந்து நிதி­ய­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­றவர் இந்த மந்­தி­ர­வாதி. அவர் செய்த முதல் வேலை பொரு­ளா­தா­ர வளர்ச்சிக்­கான ஒரு வர­வு­செ­லவுத் திட்­டத்தை அவ­சர அவ­ச­ர­மாகத் தயார்­செய்து நாடா­ளு­மன்­றத்திற் சமர்ப்பித்­தபின் அதன்­மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளையும் கேட்­காமல் இந்­தி­யா­வுக்கு நிதி­யு­தவி கேட்டு ஓடோடிச் சென்­றமை. ஒரு கடனை அடைக்க இன்­னொரு கடனைப் பெறு­வதே இந்த மந்­தி­ர­வா­தியின் வித்­தை­யாக அமைந்­தது. இந்த மந்­தி­ரங்­க­ளெல்லாம் ஈற்றில் ஜனா­தி­ப­தியின் மாற்று வழி ஒரு வரட்­சிப்­பாதை என்­பதை அம்­ப­ல­மாக்­கிற்று. மதிப்­புக்­கு­ரிய பேரா­சி­ரியர் தன் பத­வியை ராஜி­னாமாச் செய்து அப்­பா­தையின் விபத்­துக்குப் பலி­யானார்.

விழுந்­தாலும் மீசையில் மண் ஒட்­ட­வில்லை என்­ப­து­போன்று ஜனா­தி­பதி இன்­னொரு மந்­தி­ர­வா­தியை மத்­திய வங்­கியின் ஆளு­ன­ராக நிய­மித்தார். அவர்தான் நிவார்ட் கப்ரால். அவர் ஏற்­க­னவே ஆளு­ன­ராக இருந்து பின்னர் பொது­ஜன பெர­முன கட்­சியின் அர­சி­யல்­வா­தி­யாக மாறி நாடா­ளு­மன்­றத்­துக்குள் பின்­க­தவால் நுழைந்து அமைச்­ச­ரா­னவர். ஆளு­ன­ராக மீண்டும் பத­வி­யேற்­ற­போது ஜனா­தி­ப­தியின் மாற்­று­வழி வித்­தையின் பிர­சா­ர­க­ராக மாறி அதன் வெற்றி வெகு தூரத்­தி­லில்லை என்று உல­கெலாம் விளம்­பரம் செய்து அதற்­காக இர­வோ­டி­ர­வாக நாண­யத்­தாள்­களை அச்­ச­டித்து வெளி­யிட்டு பண­வீக்­கத்தை உண்­டு­பண்­ணி­யபின், பண­வீக்­கத்­துக்கும் பணப்­பு­ழக்­கத்­துக்கும் சம்­பந்­தமே இல்­லை­யென்ற ஒரு வினோ­த­மான பொரு­ளா­தார விதியை அறி­முகம் செய்த ஒரு கோமாளி மேதை. இவர்களு­டைய வித்­தை­க­ளெல்லாம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை விரைவில் வங்­கு­ரோத்­த­டையச் செய்யும் என்று உள்­நாட்­டி­னதும் வெளி­நா­டு­க­ளி­னதும் அனு­பவம் நிறைந்த பொரு­ளி­ய­லாளர்களும் நிதி நிறு­வ­னங்­களும் எச்­ச­ரிக்­கை செய்ய, அந்த எச்­ச­ரிக்­கை­களைப் புறந்­தள்­ளி­ய­து­மட்­டு­மல்­லாமல் அவ்­வாறு எச்­ச­ரித்­தவர்களை நையாண்டி பண்ணிக் கேவ­லப்­ப­டுத்­தினர். யாரு­டைய வித்தை அல்­லது யாரு­டைய எச்­ச­ரிக்கை நிஜ­மா­கி­யது என்­பதை வாசகர்களுக்கு விப­ரிக்­கவும் வேண்­டுமா?

நாடு வங்­கு­­ரோத்­த­டைந்து மக்­களின் வாழ்க்­கையும் சித­ற­டிக்­கப்­பட்டு, தின­சரி மூன்று வேளை உணவு இரு­வே­ளை­யாகி பின்னர் ஒரு வேளை­யாகி பல­ருக்கு அதுவும் கிடைக்­கா­து­போ­கவே அவர்களுக்கு வீதி­யி­லி­றங்கி ஆர்ப்­பாட்டம் செய்­வ­தைத்­த­விர வேறு­வழி தெரி­ய­வில்லை. நாடே ஒரு போர்க்­க­ள­மாக மாறத் தொடங்­கிற்று. அறப்­போ­ராட்­ட­மொன்று ஓர் இளந்­த­லை­மு­றையின் தலை­மையில் ஆரம்­ப­மா­கி­யது. அதைப்­பற்றிப் பின்னர் விளக்­குவோம். மக்­களின் கொந்­த­ளிப்பு அர­சியல் நிலைப்­பாட்டை ஆட்டம் காணச் செய்­தது. கோத்­தாவே வெளி­யேறு என்ற குரல் வானைப் பிளந்­தது. கலகம் தொடங்­கி­யது. பிர­தமர் அந்தப் போராட்­டத்தின் முதல் பலி­யானார். நிதி அமைச்சர் இரண்­டா­வது பலி­யானார். இரு­வ­ருமே பதவி துறந்­தனர். மத்­தி­ய­வங்கி ஆளுனர் கப்ரால் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு மூன்­றா­வது பலி­யானார். அனாலும் மந்­தி­ர­வா­தி­களின் பவனி முடி­ய­வில்லை. கோத்­தா­பய நிர்க்­க­தி­யாக்­கப்­பட்டும் அவர் செய்த குற்­றங்­களை உணர்ந்தும் பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் அடித்­த­ளத்தில் கட்­டப்­பட்ட அர­சியல் பொரு­ளா­தார அமைப்­பு­களைக் களைந்­தெ­றிந்து ஒரு புதிய அமைப்பைத் தழுவ அவர் விரும்­ப­வில்லை. விரும்­பி­னாலும் அவரை பத­வியில் அமர்த்திய பிற்­போக்குப் பேரி­ன­வா­திகள் விட்­டி­ருக்­க­மாட்­டார்கள். ஆகவே ஒரு புதிய மந்­தி­ர­வா­தியைத் தேட­லானார். அவர்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ.

ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ தோல்­வியின் இலக்­கணம். அவரின் தோல்விப் பட்­டி­யலை ஏற்­க­னவே விடிவெள்ளியில் வெளி­வந்த கட்­டு­ரைகள் சுட்­டிக்­காட்­டின. ஆனாலும் ராஜ­பக்­சாக்­களின் ஆத­ர­வாளன் என்­பதை அவர் பிர­த­மராய் இயங்­கிய ஆட்­சிக்­காலம் வெளிப்­ப­டுத்­தி­யது. ஆதலால் ரணில் ராஜ­பக்ச என்ற ஒரு புதிய பெய­ரையும் அண்­மையில் இவர் பெற்றுக் கொண்­ட­தாகத் தெரி­கி­றது. திக்­கற்­ற­வ­னுக்குத் தெய்­வமே துணை என்பர்.

ஆனால் திக்­கற்ற கோத்­தா­ப­ய­வுக்கு ரணிலே தெய்­வ­மானார். எனவே மாற்றுப் பிர­த­ம­ரா­கவும் நிதி அமைச்­ச­ரா­கவும் ரணில் பத­வி­யேற்றார். இந்த மந்­தி­ர­வாதி சர்வதேச நிதி நிறு­வ­னத்தின் சிபார்­சு­களை மந்­திரக் கோலாகக் கொண்டு அவற்­றிற்­க­மைய சில மாற்­றங்­களை அறி­முகம் செய்­துள்ளார். அந்த நிறு­வ­னத்தின் சிபார்­சு­க­ளுக்கு அமைய புதி­தாக நிய­மனம் பெற்ற மத்­திய வங்கி ஆளுனர் நந்­தலால் வீர­சிங்­ஹவும் வங்­கியின் பணக் கொள்­கையில் மாற்­றங்­களைக் கொண்டு வந்­துள்ளார். அவை­யெல்லாம் நாட்டின் தற்­போ­தைய பொரு­ளா­தார சிக்­கலைத் தீர்ப்­ப­தற்கு அவ­சியம் என்­பதை மறுக்­க­வில்லை. ஆனால் அவை­யெல்லாம் ஏற்­க­னவே பௌத்த சிங்­கள பேரி­ன­வாதத் தத்­து­வத்தில் அமைக்­கப்­பட்ட அர­சியல் பொரு­ளா­தார அமைப்­பு­களை உறு­திப்­ப­டுத்­து­வ­ன­வாக அமை­யுமே ஒழிய அறப்­போ­ரா­ளி­களை ஏமாற்­று­வ­தற்­காக ரணில் கூறு­வ­து­போன்று அவ்­வ­மைப்­பு­களை மாற்­று­தற்­காக அல்ல. இறு­தி­யாக அந்த அமைப்­பு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி இன்­னு­மொரு மந்­தி­ர­வா­தி­யையும் அண்­மையில் பின்­க­தவால் நுழை­ய­விட்டு பாராளுமன்ற உறுப்பினராக்கி­யுள்ளார். அவர்தான் தம்­மிக்க பெரேரா. அவரை தொழில்­நுட்ப முத­லீட்டு வளர்ச்சி அமைச்சராக நியமிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இவர் ஒரு மிகப்­பெரும் பணக்­காரர் என்­பது தெரியும். ஆனால் அவர்தான் மிகப்­பெரும் வரி­யி­றுப்­பா­ள­ரும் என்­பது தெரிந்து இருந்தும் அவரின் மந்­தி­ர­சக்­தியால் வெள்ளம்போல் வெளி­நாட்டு முத­லீ­டுகள் வந்து குவியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. காலம்தான் உண்­மையை உணர்த்த வேண்டும்.

இத்­தனை மந்­தி­ர­வா­தி­களும் ஒவ்­வொ­ரு­வராய் பவ­னி­வந்தும் அவர்களில் எவ­ரேனும் இலங்­கையின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தையும் சீர்­கு­லைத்து ஏறக்­கு­றைய மூன்­றி­லொரு பகுதி மக்­களை அன்­னி­ய­ராக்­கி­விட்ட பேரி­ன­வாதக் கொள்­கையை ஏனென்­று­கூடக் கேட்­ப­தற்குத் திரா­ணி­யற்­றவர்களாகக் காணப்­ப­டு­வது ஏன்? காரணம், அவர்கள் யாவரும் அந்தக் கொள்­கையால் உரு­வாக்­கப்­பட்­டவர்கள். சுமார் எழு­பத்­தைந்து வரு­ட­கால பேரி­ன­வாத ஆதிக்கம் அவர்களின் சிந்­த­னை­க­ளுக்கு ஓர் எல்­லையை வகுத்­து­விட்­டது. அந்த எல்­லைக்கு அப்பால் அவர்களால் சிந்­திக்க முடி­யாது.

மறுக்க முடி­யாத ஓர் உண்மை
சுமார் 173 கோடி மக்­களைக் கொண்ட நாடு வங்­கா­ள­தேசம். இலங்­கைக்குச் சுதந்­திரம் கிடைத்­த­போது உலகப் படத்­தி­லேயே அந்த நாடு இடம்­பெ­ற­வில்லை. மூன்­றா­வது உலகின் வறு­மைக்கு ஓர் எடுத்­துக்­காட்­டாக அண்மைக் காலம்­வரை விளங்­கிய ஒரு நாடு அது. எவ்­வாறு அந்த நாடு இலங்­கைக்கே பிச்சை போடும் நாடாக மாறி­யது? 733 சதுர கிலோ­மீற்றர் நிலப்­ப­ரப்­புக்குள் (அதிலும் ஒரு பகுதி கட­லி­லி­ருந்து மீட்­கப்­பட்ட நிலங்கள்) 6 கோடி மக்­க­ளுடன் கொடி­கட்டிப் பறக்கும் நாடு சிங்­கப்பூர். எவ்­வாறு அந்த நாடு 2019இல் 20 கோடி சுற்­றுலாப் பய­ணி­களை வர­வேற்­றது? சுற்­றுலாப் பய­ணி­களை மேலும் கவர நாலா­வது விமா­ன­மு­னை­யத்தை சிங்­கப்பூர் இப்­போது நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் சுமார் 65 ஆயிரம் சதுர கிலோ­மீற்றர் வள­மான நிலப்­ப­ரப்­பையும் 21 கோடி மக்­க­ளையும் எத்­த­னையோ புரா­தன வர­லாற்றுச் சின்­னங்­க­ளையும் உள்­ள­டக்­கிய இலங்கை ஏன் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்­காக உல­கெலாம் கையேந்­து­கி­றது? அது கட­னா­ளி­யாக ஏன் மாறி­யது? காவி­ரிப்­பூம்­பட்­டி­னத்­துக்கே உணவூட்டிய ஈழம் ஏன் தமிழ் நாட்டின் சோற்றுப் பிச்­சையில் பசி தீர்த்­தது? வங்­கா­ள­தே­சமும் சிங்கை நகரும் உணர்த்தும் ஓர் உண்­மையை எந்தப் பொரு­ளியல் நிபு­ணனும் மறுக்­க­மு­டி­யாது. அதா­வது நாட்­டு ­மக்கள் அனை­வ­ரி­னதும் ஒன்­று­பட்ட அர்ப்­ப­ணிப்புச் சக்­தி­யின்றி எந்தப் பொரு­ளா­தா­ரமும் அதன் முழுத்­தி­ற­னையும் வெளிப்­ப­டுத்தி பூரண வளர்ச்சிகாண முடி­யாது. அவ்­­வா­றாயின் 30 சத­வீ­த­மான மக்­களை அன்­னி­யப்­ப­டுத்திக் கொண்டு இலங்கை எவ்­வாறு வளர்ச்சி காண முடியும்? இத­னா­லேதான் கடந்த எழு­பத்தி நான்கு வரு­டங்­க­ளாகத் தத்­தித்­தத்தி நடந்த இலங்கைப் பொரு­ளா­தாரம் இன்று முட­மாகிக் கிடக்­கின்­றது. பிரித்­தாள்­வதால் அர­சியல் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றலாம். ஆனால் பொரு­ளா­தார மேம்­பாட்டை அடைய முடி­யாது. பேரி­ன­வாதச் சிறைக்குள் அடை­பட்டுக் கிடக்கும் மந்­தி­ர­வா­திகள் இதனை உண­ரா­தி­ருப்­பதில் என்ன புதுமை?

பாவ­வி­மோ­ச­னத்தின் விடிெவள்ளி
எல்லா இருள் மேகங்­களின் முடி­விலும் ஒளிக்­கோ­டொன்று தெரி­வ­து­போலும் உத­யத்தை அறி­விக்கும் விடிவெள்ளியா­கவும் ஒரு புதிய சமு­தாயம் இலங்­கையில் உரு­வா­கு­வதை யாரும் வர­வேற்­காமல் இருக்க முடி­யாது. எந்த இனத்தின் ஆதிக்­கத்­துக்­காகப் பேரி­ன­வா­திகள் இது­வரை நாட்­டையே குட்டிச் சுவ­ராக்­கி­னார்­களோ அந்த இனத்தின் மடி­யி­லி­ருந்தே இளம் வாலிபர்களும் யுவ­தி­களும் விழிப்­புற்று அடிப்­படை மாற்­றம்­கோரி ஓர் அறப்­போ­ராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். தம்மை ஆட்­சி­செய்யும் அர­சியல் பொரு­ளா­தார அமைப்­புகள் தம்­மையும் நாட்டின் பெரும்­பான்­மை­யான மக்­க­ளையும் வறு­மைக்­கோட்­டுக்குத் தள்ளி ஒரு சுய­நல வர்க்கம் தனது நிலையை மட்டும் உயர்த்தப் பாடு­படும் அபா­யத்தை உணர்ந்து அதற்குக் கார­ணமாய் அமைந்த தலை­மைத்­து­வங்­க­ளையும் வெளி­யே­று­மாறு கோரி அனைத்து இனங்­க­ளையும் அர­வ­ணைத்து இந்த வாலி­பக்­கூட்டம் போரா­டு­கின்­றது. அதன் போர்க்­க­ளத்தின் மைய­மாக காலி­மு­கத்­திடல் உரு­வா­கி­யுள்­ளது.

இந்தப் போராட்­டத்தின் வெற்­றி­யி­லேயே ஜென்­ம­பா­வத்­துக்கு விமோ­ச­ன­முண்டு என்­பதை இக்­கட்­டுரை விலி­யு­றுத்­து­கி­றது. ஆனால் அவர்கள் வெற்றி பெறு­வார்­களா?
அர­சியல் என்­பது நாம் வாழும் யுகத்தின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு. அதிலே இறங்குவது சாகசக்காரன் கத்தியில் நடப்பது போன்ற ஒரு நிலை. அதனாற்தானோ என்னவோ இதுவரை அறப்போராளிகள் எந்த அரசியல் கட்சிகளையும் சாராது நடுநிலையில் நின்று போராடுகின்றனர். ஆனால் அந்த நிலையிலேயே அயராது நின்று போராடி வெற்றி காண முடியாது. ஆகவே ஒத்த சிந்தனையுள்ள அரசியல் குழுக்களுடனோ கட்சிகளுடனோ அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது நன்று. அவ்வாறான குழுக்­களும் கட்­சி­களும் ஏற்­க­னவே பெரும்­பான்மை ஆத­ர­வின்றித் தவிக்­கின்­றன. இலங்­கையின் வாக்­காளர் தொகையில் வாலி­பர்­களின் வாக்குகள் மூன்றிலிரண்டு பங்கை எட்டும் என்பது நம்பக்கூடிய ஒரு கணிப்பு. எனவே அவர்களின் வாக்குப்பலம் இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. இதனாலேதான் இளையவர்களின் போராட்டச் சிந்தனையை மாற்றுவதற்காகப் பிற்போக்காளர்கள் மறைமுகமாக இப்போது சதியில் இறங்கியுள்ளனர். வன்முறை கொண்டும் இப்போராட்டத்தை ஒழிக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். எனவே அறப்­போ­ரா­ளிகள் ஒத்த சிந்­த­னை­யுள்ள அர­சியல் குழுக்­க­ளு­டனும் கட்­சி­க­ளு­டனும் காலம் தாழ்த்­தாது பேச்­சு­வார்த்­தையில் இறங்கி ஆக்கபூர்வமான ஒரு செயற்திட்டத்துடன் பொதுமக்களை அணுகவேண்டும். பாவவிமோசனம் வேண்டுமானால் அவர்களின் போராட்டம் ஜெயிக்க வேண்டும்.

ஒரு வேண்டுகோள்
இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் சுமார் 30 சத­வீ­தத்­தினர் ஒதுக்­கப்­பட்ட பிர­ஜை­க­ளா­கவே பேரி­ன­வா­தி­களால் இது­வரை மதிக்­கப்­பட்டு வந்­துள்­ளனர். அந்த நிலை மாறி அவர்களும் இலங்கையரே. ஆதலால் அவர்கள் சம உரிமையுள்ள பிரஜைகள் என்ற நிலையை அடைய வேண்டுமானால் ஒதுக்கப்பட்ட இனங்கள் அறப்போராளிகளுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். அதைவிடுத்து, அன்னிய நாடுகள் தமது விடிவுக்கு வழிவகுக்கும் என்று நினைப்பது வெறும் பகற்கனவே. இந்த உண்மையை தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்வார்களா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.