மு.கா., அ.இ.ம.கா. தீர்மானத்தை மீறி எம்.பி.க்கள் சர்வ கட்சி மாநாட்டில்

0 282

(றிப்தி அலி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சர்­வ­கட்சி மாநாட்­டினை பகிஷ்­க­ரிப்­பது என மேற்­கொண்ட தீர்­மா­னத்­தினை மீறி அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் இம் மாநாட்டில் பங்­கேற்­றுள்­ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹாபீஸ் நசீர் அஹமட், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி றஹீம் ஆகியோர் இதில் பங்­கேற்­றுள்­ளனர்.

தற்­போது நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி குறித்து கலந்­து­ரை­யா­டவும் ஆலோ­ச­னை­களை முன்­வைக்­கவும் கூட்­டப்­பட்ட இந்த சர்­வ­கட்சி மாநாடு ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்­றது.
இதில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன, மக்கள் ஐக்­கிய முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தேசிய காங்­கிரஸ், தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள், மலை­யக மக்கள் முன்­னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஸ்ரீலங்கா மக­ஜன கட்சி, ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி, லங்கா சம­ச­மாஜ கட்சி, அபே ஜன­பல கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்கள் விடு­தலை அமைப்பு மற்றும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி ஆகிய கட்­சிகள் இம்­மா­நாட்டில் கலந்­து­கொண்­ட­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு தெரி­வித்­தது.
ஐக்­கிய மக்கள் சக்தி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் போன்ற பல கட்­சிகள் இந்த மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தில்லை என அறி­வித்­தி­ருந்­தன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரண்டு கட்­சி­களும் குறித்த மாநாட்­டினை பகிஷ்­க­ரிப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தன.

எனினும், மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு கட்­சி­களின் தீர்­மா­னத்­தினை மீறி அக்­கட்­சி­களின் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இதில் ஹாபீஸ் நசீர் அஹமட் ஏற்­க­னவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஸ். எம்.எம்.முஷாரப் மற்றும் அலி சப்ரி றஹீம் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.