பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான நாடளாவிய போராட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்பு

தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்குமாறு பெண்கள் மன்றாட்டம்

0 357

எம்.எஸ்.எம். நூர்தீன், எச்.எம்.எம்.பர்ஸான், எம்.இஸட்.ஷாஜஹான்

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு கோரி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த இரு வாரங்­க­ளாக நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்டம் ஒன்றை நடாத்தி வரு­கின்­றது. இப் போராட்­டத்­திற்கு தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் பெரு­ம­ளவில் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றனர்.

இம்­முறை இப் போராட்­டத்­திற்கு முஸ்லிம் மக்கள் அதி­க­ளவில் ஆத­ரவு வழங்­கி­யமை ஊட­கங்­களில் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது. குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் ஏரா­ள­மான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு இச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளது உற­வி­னர்கள் பலரும் இப் போராட்­டத்தில் கலந்து கொண்­டனர். குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் இவற்றில் பங்­கேற்­ற­துடன் தமது உற­வு­களை விடு­விக்­கு­மாறு கண்ணீர் மல்க கோரிக்­கை­களை முன்­வைத்­தனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு கோரி மட்­டக்­க­ளப்பு காந்தி பூங்கா முன்­பாக கையெ­ழுத்து சேக­ரிப்பும், கண்­டன ஆர்ப்­பட்­டமும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­ற­போது அதில் கலந்து கொண்ட சகோ­தரி ஒருவர் தெரி­வித்த கருத்து அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தது. அவ­ரது முழு­மை­யான உரை இவ்­வாறு அமைந்­தது.

“ஈஸ்டர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர் எனது கணவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு 2 வரு­டங்கள் 8 மாதங்கள் சிறையில் இருக்­கிறார். கைது செய்­யப்­பட்­டுள்ள எனது கண­வரை அர­சாங்கம் இது­வரை விடு­தலை செய்­ய­வில்லை. அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை திருத்­தி­யுள்­ள­தாக கூறு­கி­றார்கள். அவர்கள் எதை திருத்­தி­யுள்­ளார்கள்? ஜெனீவா பேச்­சு­வார்த்தை நடக்­கப்­போ­கி­றது என்று அறிந்து கொண்­டுதான் இந்த சட்­டத்தை திருத்­து­வ­தென்று ஒரு பம்­மாத்து நாட­கத்தை ஆடு­கி­றார்கள்.
எனது கணவர் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வ­ரைக்கும் எந்தக் குற்­றமும் நிரூ­பிக்­கப்­ப­டாத நிலையில் சிறையில் இருக்­கிறார்.

இவ்­வாறு எனது கணவர் சிறையில் அகப்­பட்டுக் கிடப்­ப­தினால் நாங்கள் வீதியில் கிடந்து, கஷ்­டப்­பட்டு வீடு­வீ­டாகச் சென்று வேலை செய்து எங்­க­ளு­டைய பிள்­ளை­களை வளர்த்து, பாது­காத்­துக்­கொண்­டி­ருக்­கிறோம்.
இதே­போன்று எத்­த­னையோ சகோ­த­ரிகள் பல்­வேறு இன்­னல்­களை சந்­தித்துக் கொண்டு வரு­கி­றார்கள்.

இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்டம் என்­பது ஒரு மனி­தனை உயி­ருடன் எரித்து கொலை செய்­வ­தற்கு சம­மாக உள்­ளது.

இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்­குங்கள். நீக்­கா­விட்டால் எங்­க­ளு­டைய கடைசி மூச்சு இருக்கும் வரை நாங்கள் இதற்கு எதி­ராக போரா­டுவோம்.
இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தி­லுள்ள கஷ்­டங்கள், துன்­பங்கள், துய­ரங்கள் போன்­ற­வற்றை ஏற்­க­னவே தமிழ் சகோ­தர, சகோ­த­ரிகள் அனு­ப­வித்­துள்­ளார்கள்.

ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­தலின் பின்­னர்தான் அத­னு­டைய பார­தூரம் என்­ன­வென்று எங்­க­ளுக்கு தெரிந்­தது. அதனை நாங்கள் இப்­போது அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.
நான் அர­சாங்­கத்­திடம் சவால் விடு­கிறேன். நீங்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்­குதல் நடாத்­திய சூத்திர­தா­ரி­களை முதலில் கண்டு பிடி­யுங்கள். அவர்­களை சட்­டத்தின் முன் கொண்டு வாருங்கள்.

இது­வரை அதை அவர்கள் செய்­ய­வில்லை. ஏனென்றால் அதை செய்­தது முழுக்க அர­சாங்­கம்தான் என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.
அவர்கள் பத­வியில் இருப்­ப­தற்­கா­கத்தான் ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலை நடாத்தி, முஸ்லிம் சகோ­த­ரர்­களை பக­டைக்­காய்­க­ளாக பயன்­ப­டுத்­தி­னார்கள்.
எங்­க­ளு­டைய எதிர்­கா­லத்­தையும், பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­தையும் அவர்கள் குழி­தோண்டிப் புதைத்­து­விட்­டார்கள்.

இனி­வரும் எங்­க­ளு­டைய சந்­த­தி­க­ளுக்கு இப்­ப­டி­யா­ன­தொரு நிலைமை வரவே கூடாது. அதற்கு நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

இவ்­வ­ளவு காலமும் பொறுத்­தது போதும். அனை­வரும் ஒன்­றி­ணைந்து பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்க போராட வேண்டும்.

ஜெனீவா பேச்­சு­வார்த்தை இருக்­கி­றது என்­ப­தற்­காக சட்­டத்தை திருத்தம் செய்­தி­ருக்­கி­றார்­களாம். என்ன செய்­தி­ருக்­கி­றார்கள்? பன்­னி­ரண்டு மாதங்­க­ளாக குறைத்து இருக்­கி­றார்­களாம். 28 மாதங்கள் சிறையில் இருக்கும் எனது கண­வ­ருக்கு இந்த அர­சாங்கம் விடிவு கொடுத்­ததா?

அர­சாங்­கத்தின் நாடகம் வெளி­வந்­து­விட்­டது. ஈஸ்டர் தின தாக்­கு­தலை யார் செய்­தார்கள் என்ற நாடகம் வெளி­வந்து விட்­டது. நான் சவால் விடு­கிறேன். ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­தலில் சஹ்­ரா­னுக்கு பின்னால் இருந்து உதவி செய்­தது யார் என்று நிரூ­பி­யுங்கள்.
அப்­பாவி இளை­ஞர்­களை பலி கொடுக்­கா­தீர்கள், பெண்­களின் வாழ்க்­கையை சீர­ழிக்­கா­தீர்கள்.

தய­வு­செய்து கேட்­கிறேன். இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலில் அநி­யாயம் இழைக்­கப்­பட்ட அனைத்து சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கும் ஒரு முடிவு கொடுங்கள். ஊட­கங்­களும் இதனை உண்­மை­யான உள்­ளத்­தோடு தங்­க­ளது பணி­களை சரி­யாக செய்­யுங்கள்” என அந்த பெண்­மணி உருக்­க­மாக தனது கருத்­தினை முன்­வைத்தார்.

சாணக்­கியன் உரை
இப் போராட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கியன் உரை நிகழ்த்­தும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார்.

“வழக்­க­மாக தமிழ் மக்கள் தான் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­துக்கு எதி­ரான போராட்­டங்­களில் அதிகம் ஈடு­ப­டு­வார்கள். ஆனால் தற்­போது முஸ்லிம் மக்­களும் இந்த சட்­டத்­துக்கு எதி­ராக வீதியில் இறங்­கி­யுள்­ளார்கள்.

தற்­போது நாம் முன்­னெ­டுத்து வரும் இந்த கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்­டத்தில் நாட்டின் எல்லா பகு­தி­க­ளிலும் எம்­முடன் முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்­டார்கள்.
பல முஸ்லிம் தாய்­மார்கள் இந்த இடத்­துக்கு வந்­துள்­ளார்கள். இவர்­களில் சிலரை இதற்கு முன்னர் நான் சந்­தித்து அவர்­க­ளது குடும்­பத்தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் குறித்து கேட்­ட­றிந்­துள்ளேன்.

1980, 1990 காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து தமிழ் இளை­ஞர்கள் சிறிய சிறிய குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு 20 அல்­லது 30 வரு­டங்கள் சிறையில் இருந்­தி­ருக்­கி­றார்கள். அதே­போன்­றுதான் கடந்த மூக்று வரு­டங்­க­ளாக முஸ்லிம் இளை­ஞர்கள் பலர் இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இன்னும் பத்து வரு­டங்­க­ளுக்கு கூட அவர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­ப­டலாம்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களுள் ஸஹ்ரான் குழு­வினர் சிலர் பய­ணிப்­ப­தற்­காக பஸ் ஆசனம் பதிவு செய்து கொடுத்த ஒரு­வரும் இருக்­கிறார். இவ்­வாறு பஸ் ஆசனம் பதிவு செய்யும் நிலை­யத்தை நடாத்­திய குறித்த இளை­ஞ­ரையும் இன்று 30 மாதங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைத்­துள்­ளார்கள்.

இந்த சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்­கு­மாக இருந்தால் தமிழ், முஸ்லிம், சிங்­கள இளை­ஞர்கள் அனை­வரும் இதன் மூலம் அர­சாங்கம் குறி­வைக்கும்.
எனவே இந்த பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை முழு­மை­யாக நீக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இதில் சக­லரும் இன மத பேத­மின்றி கைகோர்க்க வேண்டும் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா.சாணக்­கியன் குறிப்­பிட்டார்.

மன்­னாரில் அஹ்னாப் ஜெஸீம் குடும்­பத்­துடன் பங்­கேற்பு
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ஒழிக்­கு­மாறு கோரும் கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்டம் கடந்த சனிக்­கி­ழமை மன்னார் நகரில் இடம்­பெற்­றது. இதன்­போது குறித்த சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் தனது குடும்­பத்­தி­ன­ருடன் வருகை தந்து கையெ­ழுத்­திட்டார். அங்கு அவர் உரை ஒன்­றையும் நிகழ்த்­தினார்.

குடும்பத்துடன் அஹ்னப் ஜெஸீம்

“பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ஒழிப்­ப­தற்­காக அனை­வ­ரையும் ஒன்­ற­ிணை­யு­மாறு அழைப்பு விடுக்­கிறேன். இது இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த பிறகு சிறு­பான்­மை­யி­னரை ஒடுக்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட மிக மோச­மான சட்­ட­மாகும். அதனால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டவன் என்ற வகை­யிலும் கடந்த 19 மாதங்­க­ளாக இச் சட்­டத்தின் கீழ் சிறை­யி­லி­ருந்து வெளியில் வந்­துள்­ளவன் என்ற வகை­யிலும் இதனைக் கூறு­கிறேன். என்னை சிறை­யி­லி­ருந்து வெளியில் எடுப்­ப­தற்­காக பலர் பாடு­பட்­டுள்­ளார்கள். அவர்­க­ளுக்கும் நான் இந்த இடத்தில் நன்றி கூறு­கிறேன்.

இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்டம் அடிப்­படை மனித உரி­மை­களை மதிக்­காத மிகக் கொரூ­ர­மான, குரூ­ர­மான சட்­ட­மாக உள்­ளது. சிறு­பான்­மை­யி­னரை மாத்­தி­ர­மன்றி பெரும்­பான்­மை­யி­னரைக் கூட இதன் கீழ் சிறை வைக்க முடியும். தங்­க­ளது அர­சி­யலை முன்­கொண்டு செல்ல யாரெல்லாம் தடை­யாக இருக்­கி­றார்­களோ, யாரெல்லாம் அவர்­க­ளது பிழை­களைச் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­களோ அவர்­க­ளை­யெல்லாம் இச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்க முடியும்.

முதலில் 18 மாதங்கள் தடுத்து வைத்து பின்னர் தேவைக்­கேற்ப தடுப்புக் காலத்தை நீடித்துக் கொண்டே செல்­வார்கள். ஒரு­வரை அவ­ரது வாழ்நாள் முழு­வதும் கூட இச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கலாம்.

இந்த சட்டம் பல நூற்றுக் கணக்­கான இளை­ஞர்­க­ளு­டைய வாழ்க்­கையை அழித்­தி­ருக்­கி­றது. இதற்கு மேலும் நாம் அமை­தி­யாக இருப்­போ­மானால் எதிர்­கா­லத்தில் இதை­விட மோச­மான நிலை­மை­களைச் சந்­திக்க வேண்டி வரும்.

அத­னால்தான் நான் இன்று எனது தாய், தந்தை, சகோ­தரன், சகோ­த­ரி­க­ளுடன் குடும்­ப­மாக வந்து இந்த சட்­டத்தை ஒழிப்­ப­தற்­கான மக­ஜரில் கையெ­ழுத்­திட்­டுள்ளேன்” என்றார்.

காலம் கடந்­தா­வது முஸ்­லிம்கள் போரா­டு­கின்­றனர்
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை ஒழிக்­கு­மாறு கோரி காலம் கடந்­தேனும் முஸ்லிம் சமூ­கமும் போரா­டு­வது திருப்­தி­ய­ளிக்­கி­றது என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரி­வித்தார்.
மட்­டக்­க­ளப்பு நகரில் இடம்­பெற்ற கையெ­ழுத்து சேக­ரிக்கும் போராட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், “தமிழ் இளை­ஞர்­களை இலக்கு வைத்து அவர்­களை அநி­யா­ய­மாக தண்­டிப்­ப­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட இச்­சட்டம் இன்று முஸ்லிம் இளை­ஞர்­களை இலக்கு வைத்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஒரு இனத்­துக்கு நடக்­கின்ற அநீ­தியை, கொடு­மையை இன்­னு­மொரு இனம் பல வரு­டங்கள் காத்­தி­ருந்து வேத­னையை அனு­ப­வித்து புரிந்து கொண்­டுதான் இச் சட்­டத்தை நீக்கும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு கொடுக்­கு­மாக இருந்தால் அதில் எனக்கு உடன்­பாடு கிடை­யாது, உண்­மையில் தமிழ் மக்­க­ளுக்கு இந்த அநி­யாயம் நடந்த வேளை­யி­லேயே இது போன்று அனை­வரும் ஒன்­றி­ணைந்து போரா­டி­யி­ருக்க வேண்டும். எனினும் காலம் கடந்­தா­வது இப்­போ­தா­வது இப் போராட்டம் நடப்­பது திருப்தி தரு­கி­றது” என்றார்.

முற்­றாக நீக்க வேண்டும் : அமீர் அலி
மட்­டக்­க­ளப்பில் நடந்த போராட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எஸ்.எஸ். அமீர் அலி உரை­யாற்­று­கையில், சிறு­பான்மை இனங்­களை இலக்கு வைத்தும், அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்துக் கொண்­ட­வர்­களைப் பழி வாங்கும் நோக்­கிலும் இச்­சட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதால் இப்­ப­யங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் முற்­றாக நீக்­கப்­பட வேண்டும் என்பதே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிலைப்பாடாகும்.
எனவே இந்­நாட்­டி­லுள்ள முற்­போக்கு சக்­தி­க­ளுடன் இணைந்து இப்­போ­ராட்­டத்­திற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் தமது பூரண பங்­க­ளிப்பை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளது என்றார்.

நீர்கொழும்பிலும் முஸ்லிம்கள் பங்கேற்பு
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு வலி­யு­றுத்தும் குறித்த போராட்டம் நீர்­கொ­ழும்பு பிர­தான பஸ் நிலையம் முன்­பாக கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்பெற்றது.
இந்­நி­கழ்வை தேசிய மீனவ ஒத்­து­ழைப்பு இயக்­கத்­துடன் இணைந்து பல்­வேறு சிவில் அமைப்­புக்கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மனித உரிமை செயற்பாட்டாளர்களான பிரிட்டோ பெனாண்டோ, ஹேர்மன் குமார உட்பட பல்வேறு சிவில் அமைப்புகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­மாறு வலி­யு­றுத்தி அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த மக­ஜரில் பலர் கையெ­ழுத்­திட்­டனர். குறிப்­பாக முஸ்­லிம்கள் பலரும் இதில் பங்­கேற்று தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.