இஸ்லாம் பாட நூல் விவகாரம்: உலமா சபை பிரதிநிதிகள் ஆணையாளருடன் சந்திப்பு

0 247

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் இஸ்லாம் சமய பாட­நூல்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட திருத்­தங்கள் தொடர்பில் என்னைச் சந்­தித்து விளக்கம் கோரினார்கள். திருத்­தங்கள் தொடர்பில் எம்மால் தெளி­வான விளக்­கங்கள் வழங்­கப்­பட்­டன. உலமா சபை­யினர் எவ்­வித எதிர்ப்பும் வெளி­யி­ட­வில்லை. கலந்­து­ரை­யாடல் சுமு­க­மா­கவே இடம்­பெற்­றது’ என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என்.அயி­லப்­பெ­ரும விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், திருத்­தங்­க­ளுடன் கூடிய இஸ்லாம் சமய பாட­நூல்கள் தற்­போது அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன. எதிர்­வரும் சிங்­கள, தமிழ் புது­வ­ரு­டத்தின் பின்பு பாட­சா­லைகள் ஆரம்­ப­மாகும் வேளையில் மாண­வர்­க­ளுக்கு பாட­நூல்­களை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பாட­நூல்­களில் பாரிய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. சிறிய திருத்­தங்கள் அதா­வது ஓரிரு சொற்­களே மாற்­றப்­பட்­டுள்­ளன என்றார்.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ள ஆணை­யாளர் நாயகம் மற்றும் திணைக்­கள அதி­கா­ரி­க­ளு­டன் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தலை­மை­யி­லான குழு­வினர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதால் அவற்றை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்க வேண்­டா­மெ­னவும் விநி­யோ­கிக்­கப்­பட்ட நூல்­களை உட­ன­டி­யாக மீளப்­பெ­று­மாறும் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்தை உலமா சபை பிர­தி­நி­திகள் கலந்­து­ரை­யா­டலின் போது வாசித்துக் காட்­டி­னார்கள். இவ்­வா­றான ஒரு கடிதம் அனுப்­பப்­பட்­டதால் பரீட்சை எழு­த­வுள்ள மாண­வர்கள் குழப்­ப­நி­லைக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இக்­க­டிதம் தொடர்பில் அதி­ருப்­தியும் வெளி­யி­டப்­பட்­டது.
எதிர்­கா­லத்தில் மார்க்க விட­யங்கள் தொடர்­பான திருத்­தங்­களை பாட­நூல்­களில் மேற்­கொள்­வ­தாயின் உலமா சபையின் ஆலோ­ச­னை­யையும் பெற்­றுக்­கொள்­ளு­மாறு உல­மா­சபை பிர­தி­நி­திகள் கோரிக்கை விடுத்­தனர். அதற்கு ஆணை­யாளர் நாயகம் இணக்கம் தெரி­வித்தார்.

இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்­களை செய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களே முக்­கிய கார­ண­மாக அமைந்­தது எனவும் அவர் கூறினார்.
பாட­நூல்­களில் சமய விவ­கா­ரங்கள் தொடர்­பான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாயின் அந்­தந்த மதங்­களின் சமய பேர­வை­களின் ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தையின்போது உலமா சபை வலியுறுத்தியது.

திணைக்­க­ளத்தில் பணி­யாற்றும் முஸ்லிம் அதி­கா­ரி­களின் அங்­கீ­கா­ரத்­து­டனே அனைத்து திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளிடம் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.