ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸா அடக்கும் நடவடிக்கை முடிகிறது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தீர்மானம்

0 319

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்­றினால் மர­ணிக்கும் முஸ்­லிம்­க­ளதும், ஏனைய மதங்­களைச் சேர்ந்த சில­ரி­னதும் ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்கு இது­வ­ரை­காலம் அடைக்­கலம் கொடுத்து வந்த ஓட்­ட­மா­வடி மஜ்­மா­நகர் விசேட மைய­வா­டியின் செயற்­பா­டுகள் எதிர்­வரும் 28ஆம் திகதி முதல் முடி­வுக்கு வர­வுள்­ளன.

ஓட்­ட­மா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை அமர்வில் கடந்த மாதம் 30ஆம் திகதி இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச சபையின் தவி­சாளர் ஏ.எம்.நெளபர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். ஒரு­மாத காலத்­துக்குள் மஜ்மா நகர் மைய­வா­டியின் செயற்­பா­டுகள் முடி­வு­றுத்­தப்­ப­டு­மென அன்­றைய தினம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் 28 ஆம் திகதி மைய­வாடி செயற்­பா­டுகள் நிறுத்­தப்­படும் எனவும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், மஜ்மா நகர் மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. மைய­வா­டியில் 7 ஏக்கர் காணியும் நிறை­வுக்கு வர­வுள்­ளது. அத்­தோடு நாம் மழைக்­கா­லத்­தையும் எதிர்­நோக்­கி­யுள்ளோம். இந்தக் கார­ணங்­களைக் கொண்டு புதிய மாற்­றி­ட­மொன்­றினை ஏற்­பாடு செய்­யும்­படி தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ளோம். தீர்­மானம் சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் உட்­பட சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு முன்பு மைய­வா­டிக்கு மாற்­றுக்­காணி ஏற்­பாடு செய்­யும்­படி கோரி­யுள்ளோம்.

இவ்­வ­ருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஓட்­ட­மா­வடி மஜ்­மா­நகர் மைய­வாடி செயற்­பட்­டது. அன்­றைய தினம் முதல் கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்த ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வந்­தன. நேற்று 4 ஜனா­ஸாக்கள் இங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டன. இது­வரை 3119 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை வட்­ட­மடு பிர­தே­சத்தில் ஏற்­க­னவே இனங்­கா­ணப்­பட்டு அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்ள கொவிட் 19 மைய­வாடி தொடர்பில் கிண்­ணியா பிர­தேச சபை தவி­சாளர் கே.எம். நிஹா­ரி­விடம் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

“வட்­ட­மடு பிர­தே­சத்தில் மைய­வா­டிக்­காக 10 ஏக்கர் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மைய­வாடி தயார் நிலை­யிலே உள்­ளது. நாளை என்­றாலும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

இதேவேளை சுகாதார அமைச்சோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் இச்செய்தி எழுதப்படும்வரை பதிலளிக்கவில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.