திடீரென நிறுத்தப்பட்ட முஸ்லிம் சேவை ; மன்னிப்புக் கோரினார் இ.ஒ.கூ. தலைவர்

மீண்டும் வழமை போன்று 102.1 அலைவரிசையில்

0 438

(றிப்தி அலி)
இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சி­களில் ஏற்­பட்ட தடங்­க­லுக்கு மன்­னிப்புக் கோரு­வ­தாக அதன் தலைவர் ஹட்சன் சம­ர­சிங்க தெரி­வித்தார்.
கடந்த திங்­கட்­கி­ழ­மையும் , செவ்­வாய்க்­கி­ழமை காலையும் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்­சிகள் ஒலி­ப­ரப்­பா­க­வில்லை.

எனினும் செவ்­வாய்க்­கி­ழமை இரவு 8.00 மணிக்கு மீண்டும் வழமை போன்று 102.1 அலை­வ­ரி­சையில் ஒலி­ப­ரப்­பா­கி­யது.
இதன்­போது இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன தலைவர் ஹட்சன் சம­ர­சிங்க விசேட உரை­யொன்­றினை சிங்­கள மொழியில் நிகழ்த்­தினார். இதன்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

சுமார் 70 வரு­டங்கள் பழமை வாய்ந்த SLBC இன் தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகி­யன 102.1 அலை­வ­ரி­சையில் ஒலி­ப­ரப்­பாகி வந்­தன.
தமிழ் தேசிய சேவை நிகழ்ச்­சிகள் அதி­காலை 4.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒலி­ப­ரப்­பா­கி­யது. இதில் காலை 8.00 – 10.30 மணி வரையும், இரவு 8 – 9 மணி வரையும் முஸ்லிம் சேவை நிகழ்ச்­சிகள் ஒலி­ப­ரப்­பப்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில், கல்வி அமைச்சின் அனு­ச­ர­ணையில் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் ‘விசன் எப்.எம்’ எனும் கல்விச் சேவை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­காக இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன தமிழ் தேசிய சேவையின் 102.1 அலை­வ­ரி­சையும், பிறை எப்.எம் இயங்­கிய 102.3 அலை­வ­ரி­சையும் ஒதுக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து பிறை எப்.எம்.இற்கு விசேட அலை­வ­ரி­சை­யொன்று ஒதுக்­கப்­பட்­டுள்ள நிலையில், தமிழ் தேசிய சேவைக்கு எந்­த­வித அலை­வ­ரி­சையும் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.
இதனால் தமிழ் தேசிய சேவை மற்றும் அதில் ஒலி­ப­ரப்­பா­கிய முஸ்லிம் சேவை ஆகி­ய­வற்றின் நிகழ்ச்­சிகள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. அது மாத்­தி­ர­மல்லாம் ஐந்து வேளை ஒலி­ப­ரப்­பப்­பட்ட அதானும் இடை­நி­றுத்­தப்­பட்­டது.

இந்த விடயம் சமூக ஊட­கங்­களில் வைர­லாக பர­வி­யதை அடுத்து ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன தலைவர் ஹட்சன் சம­ர­சிங்­க­விற்கு பல்­வேறு மட்­டங்­க­ளி­லி­ருந்து அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை விசேட கூட்­ட­மொன்று இடம்­பெற்­றது. இதன்­போது, அதே அலை­வ­ரி­சையில் மீண்டும் முஸ்லிம் சேவை­யினை ஒலி­ப­ரப்­பு­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதற்­க­மைய மீண்டும் முஸ்லிம் சேவை நிகழ்ச்­சிகள் வழ­மை­போன்று ஒலி­ப­ரப்­பா­கின்­றன. “முஸ்லிம் மக்களின் மத உரிமையினை கௌரவிக்கின்றேன்” என ஹட்சன் சமரசிங்க இந்த கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்று தமிழ் சேவையும் நேற்று (18) புதன்கிழமை முதல் அதே அலைவரிசையில் ஒலிபரப்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.