தொழு­­கைக்கு வரு­ப­வர்­க­ளை ‘ஓரங்­கட்­டுதல்’ ஆரோக்­கி­ய­மா­ன­தல்­ல!

0 607

முஹாபிஸ், கொழும்பு.

‘அச்­சு­றுத்தல் விடுக்கும் அறி­வித்தல்’ எனும் தலைப்பில் கடந்­த­வாரம் ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கையில் செய்தி ஒன்று பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சலில் ஒன்றில், ஐங்­காலத் தொழு­கைக்­காக வரு­ப­வர்­களில், தௌஹீத் ஜமா­அத்­தி­னரின் தொழுகை சம்­பந்­தப்­பட்ட கொள்­கை­க­ளையும் நடை­மு­றை­க­ளையும் கொண்­ட­வர்கள் தொழு­கையில் ஈடு­ப­டு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது என்ற தொனி­யி­லான அறி­வித்தல் ஒன்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பா­கவே அச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மேற்­படி செய்­தி­யினை வாசித்­த­பின்னர் நான் மிகவும் கவ­லை­ய­டைந்தேன். இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தி­னுள்ளே ஆழ வேரூன்­றி­யி­ருக்கும் சமயக் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் நிலை­மாற்றம் செய்­யப்­பட வேண்­டிய கால­கட்­டத்தில் அவை மென்­மேலும் முரண்­பாட்­டினை வளர்ப்­ப­தற்­கான கார­ணி­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­னது மிகவும் அபா­ய­க­ர­மா­னதும், ஆபத்­தா­னதும் அதிக விலை கொடுக்க வேண்­டி­ய­து­மாக அமைந்­து­விடும் என்று நான் கரு­து­கின்றேன்.

1990 களில் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் தௌஹீத் அமைப்­பு­களின் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­ட­போது அதனை எவ்­வாறு சமய ரீதி­யாக அணு­கு­வது, அவர்­க­ளது கருத்­துக்­க­ளின்பால் உள்ள சாதக பாத­கங்­களை எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்பில் அறி­வு­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்குப் பதி­லாக உணர்­வு­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதனால் தௌஹீத் கருத்­துக்­களை சரி கண்­ட­வர்கள் மைய நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகி தனித்­த­னி­யாக பள்­ளி­வா­சல்­களை அமைத்து தமது பிர­சா­ரங்­களை மேற்­கொள்ளத் தொடங்­கினர். இந்­நிலை சமூ­க­மட்­டத்தில் பல்­வேறு விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. அதன் மிக மோச­மா­னதும் பாத­க­மா­ன­து­மான விளை­வுதான் கடும்­போக்கு தௌஹீத் சிந்­தனைப் பிரி­வி­னர்­களின் தோற்­ற­மாகும். இறு­தியில் அவர்கள் சம­யத்தின் பெயரால் வன்­முறைக் கலா­சா­ரத்­தி­னையே தமது இறுதி ஆயு­த­மாகத் தெரிவு செய்து பாரிய அழி­வு­களை இந்­நாட்டில் ஏற்­ப­டுத்திச் சென்­றுள்­ளனர்.

இந்தப் பாடங்­களில் இருந்து படிப்­பினை பெற்று சமய ரீதி­யான கருத்து வேறு­பா­டுள்ள அனை­வரும் தத்­த­மது நம்­பிக்­கைகள், நிலைப்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பொது நீரோட்­டத்தில் செயற்­ப­டு­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டுத்­தப்­ப­டாத போது அது தேவை­யற்ற முரண்­பா­டு­க­ளையும் அழி­வு­க­ளை­யுமே தொடர்ந்தும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­ப­டுத்தும்.
எனவே முஸ்லிம் சமூ­கத்தின் உள்ளே உள்ள சமய ரீதி­யான முரண்­பா­டுள்ள அமைப்­புக்கள், இயக்­கங்கள் தொடர்பில் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என்­பது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த நிறு­வ­னங்­க­ளான ஜம்­இய்­யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், வக்பு சபை என்­பன உட­னடிக் கவனம் செலுத்த வேண்­டி­யது காலத்தின் அவ­சியம் எனக் கரு­து­கிறேன்.

கடந்த காலங்­களைப் போன்று பொறுப்­போடு செய­லாற்ற வேண்­டிய மேற்­படி நிறு­வ­னங்கள் பொடு­போக்­கா­கவும், பக்­கச்­சார்­பா­கவும் நடந்து கொள்ள முய­லு­வார்­க­ளாயின் அதற்­கான விலை­யினை அப்­பாவிப் பொது­மக்­களே கொடுக்க வேண்டி வரும். எனவே இவ்­வி­டயம் தொடர்பில் உட­னடிக் கவ­ன­மெ­டுக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன்.

அத்­தோடு பள்­ளி­வா­சல்கள் என்­பது வணக்க வழி­பா­டு­க­ளுக்­கான ஒரு பொதுத் தள­மாகும். அங்கு வணக்க வழி­பாட்­டிற்கு ்டிற்கு வரும் அனைவரும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும் அல்லது இடமளிக்கப்படல் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. மாறாக தௌஹீத் சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்களுக்கு வக்­கா­லத்­து வாங்குவது எனது நோக்கமல்ல என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.