பசில் வந்துவிட்டால் பசி நீங்குமா?

0 279

எஸ்.றிபான் 

அர­சாங்கம் கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையில் சிக்­கி­யுள்­ளது. உலக நாடு­களை தாக்­கிய கொவிட் – 19 வைரஸின் தாக்­கமே இலங்­கையின் பொரு­ளா­தாரப் பின்­ன­டை­வுக்கு பிர­தான கார­ண­மாகும். இதி­லி­ருந்து மீள்­வ­தற்கு அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா என்­பதில் பலத்த சந்­தே­கங்கள் உள்­ளன. ஏனெனில் இலங்­கையின் பொரு­ளா­த­ரத்தில் முன்­னேற்றம் ஏற்­பட வேண்­டு­மாயின் உலக நாடு­களின் பொரு­ளா­தா­ரத்­திலும் வளர்ச்சி ஏற்­பட வேண்டும். இந்த நிலை ஏற்­ப­டு­வ­தற்கு கொவிட் தொற்­றி­லி­ருந்து உலக நாடுகள் மீள வேண்டும். ஆனால், உலக வல்­ல­ரசு நாடு­க­ளினால் கூட கொவிட் வைரஸ் தொற்­றி­லி­ருந்து முழு­மை­யாக மீள முடி­ய­வில்லை. இதே வேளை, கொவிட் வைரஸ் தொற்றுக் காலத்தில் சீனாவின் பொரு­ளா­த­ரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

கொவிட் வைரஸ் தொற்றால் இலங்கை அர­சாங்­கத்தின் வரு­மான வழிகள் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் அடைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் இலங்­கையின் அமைச்­ச­ர­வையில் பாரிய மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தயா­ராகிக் கொண்­டி­ருப்­ப­தாக ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. இதற்கு அர­சாங்­கத்தின் தரப்­பி­லி­ருந்து எந்த மறுப்பும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இதேவேளை, பிர­தமர் மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷ­விடம் இருந்த நிதி அமைச்சர் பதவி பசில்­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் நாட்டு மக்­க­ளி­டையே காணப்­படும் வறு­மையும், பசியும் பசில் வந்­துள்­ளதால் பறந்து போய்­வி­டு­மென்று அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பலரும் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளார்கள். இவர்­களின் கருத்­துக்­களின் மூல­மாக ஏற்­க­னவே நிதி அமைச்­ச­ராக பதவி வகித்த பிர­தமர் மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ நாட்டின் நிதி நிலை­மையை கையா­ளு­வதில் தோல்வி கண்­டுள்ளார் என்று உணர்ந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

ஆயினும், பசில் ­ரா­ஜ­ப­க்ஷவின் திற­மையை குறைத்து மதிப்­பி­டவும் முடி­யாது. மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்­தி­னதும், கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்­தி­னதும் இருப்­புக்கு மறை­கர சக்­தி­யாக செயற்­பட்­டவர் பசில்­ரா­ஜ­பக்ஷ என்­ப­தனை யாரும் மறுக்க முடி­யாது. பொது­ஜன பெர­முனக் கட்­சியின் ஸ்தாப­க­ரா­கவும், ஒரு குறு­கிய காலத்தில் அக்­கட்­சியை மக்­க­ளி­டையே கொண்டு சென்று ஆட்­சியை கைப்­பற்றும் அள­வுக்கு வியூ­கத்தை வகுத்­தவர் பசில்­ரா­ஜ­பக்ஷ என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதனால், இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை உயர்­நி­லைக்கு கொண்டு வரு­வ­தற்­கு­ரிய திற­மைகள் அவ­ரிடம் உள்­ள­தென்று நம்­பலாம். ஆனால், அவ­ரது திற­மைக்கு கொவிட் தொற்றும், உலக பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள மந்­தமும் இடம் கொடுக்­குமா என்­பதே எமக்கு முன்னால் உள்ள கேள்­வி­யாகும். கொவிட் தொற்றால் உலக நாடுகள் கண்­டுள்ள பொரு­ளா­தர பின்­ன­டைவை சரி செய்­வ­தற்கு ஆகக் குறைந்­தது ஐந்து வரு­டங்கள் தேவைப்­படும் என்று பொரு­ளா­தார வல்­லு­நர்கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையின் பொரு­ளா­தார நிலை குறித்து முன்னாள் பிர­த­மரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் அவ­தா­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.

இலங்கை தற்­போது 430 கோடி அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான கடன்­களை மீளச்­செ­லுத்த வேண்­டிய நிலையில் இருப்­ப­தாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நெருக்­கடி நிலையில் சர்­வ­தேச நாண­ய­நி­தி­யத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி, எதிர்­வரும் 2 – 3 வரு­ட­கா­லத்­திற்கு அவ­சி­ய­மான நிதி­யு­த­வி­களை அத­னி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். சர்­வ­தேச நாண­ய­நி­தி­யத்­தி­ட­மி­ருந்து நிதி­யு­தவி கிடைப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் இந்­தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடு­க­ளி­ட­மி­ருந்தும் நிதி­யு­த­வியைப் பெற­மு­டியும்.

எமது வெளி­நாட்டு இருப்­பான 4 பில்­லியன் டொலர்­களில் பிணை­யங்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு செலுத்­தப்­பட்­டதன் பின்னர் ஒரு பில்­லியன் டொலர் குறை­வ­டையும். தற்­போது எம்­மிடம் இருக்கும் வெளி­நாட்டு இருப்பின் பெறு­மதி 3 பில்­லியன் டொலர்­க­ளாகும். அதே­போன்று எரி­பொருள் கூட்­டுத்­தா­பனம் 130 கோடி டொலர்­களைச் செலுத்­த­வேண்­டிய நிலை­யி­லி­ருக்­கின்­றது.

எமது நாட்டின் வணிக வங்­கி­களில் டொலர்­க­ளுக்குப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. வங்­கிகள் கட­னா­ளி­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன. இது­வ­ரையில் அது­கு­றித்த தர­வுகள் வெளி­யி­டப்­ப­டாத போதிலும், தற்­போது கிடைத்­தி­ருக்கும் தக­வல்­க­ளின்­படி அக்­க­டன்­களின் பெறு­மதி 300 கோடி அமெ­ரிக்க டொல­ராகும்.

ஆகவே இப்­போது எமது நாடு மீளச் செலுத்த வேண்­டி­யி­ருக்கும் கடனின் பெறு­மதி 430 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். இருப்­பினும் எம்­மிடம் தற்­போ­தி­ருக்கும் 300 கோடி டொலர்­களில் இவ்­வ­ருடம் முடி­வ­டை­வ­தற்குள் 10 கோடி டொலர்­களைப் பிணை­யங்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வாகச் செலுத்த வேண்­டி­யுள்­ளது. எமது நாட்­டுக்கு அவ­சி­ய­மான பொருட்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்குப் போதி­ய­ளவு நிதி இல்­லா­ததன் கார­ண­மாக, இறக்­கு­ம­திகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. உரத்தை இறக்­கு­மதி செய்­வ­தற்குப் பண­மில்லை. இதனால்;தான் உர இறக்­கு­ம­தியைக் கட்­டுப்­ப­டுத்தி, சேதன உரத்தை உற்­பத்தி செய்­யப்­போ­வ­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது.

அதே­போன்று நாட்­டு­மக்கள் அனை­வ­ருக்கும் வழங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மான தடுப்­பூ­சியைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான பணம் இல்­லா­ததன் கார­ண­மா­கவே 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மாத்­திரம் தடுப்­பூசி வழங்­கப்­படும் செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அண்­மையில் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது அதில் அங்கம் வகிக்கும் 198 உறுப்பு நாடு­க­ளுக்கு அவ­சி­ய­மான நிதி­யு­த­வியை வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. அத­னூ­டாக எமது நாட்­டிற்கு 80 கோடி டொலர் நிதி கிடைக்­கப்­பெறும். எனினும் தற்­போது நாடு முகங் கொடுத்­தி­ருக்கும் நிதி நெருக்­க­டியை ஈடு­செய்­வ­தற்கு அதுவும் போது­மா­ன­தல்ல.

எதிர்­வரும் வரு­டத்தில் தொழில் அற்­ற­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­துடன் வாழ்­வா­தா­ரத்தை உழைப்­ப­திலும் பாரிய சிக்­கல்கள் ஏற்­படும் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டின் பொரு­ளா­தாரம் குறித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.
ஆகவே, நாட்டின் இத்­த­கைய நிதி நிலை­மையை புதிய நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பசில் ராஜ­ப­க்ஷ­வினால் மேம்­படச் செய்ய முடி­யுமா என்­பது சிந்­திக்க வேண்­டி­ய­தாகும்.

இதே வேளை, இலங்கை தற்­போது சந்­தித்துக் கொண்­டி­ருக்கும் நிதி நெருக்­க­டியில் இருந்து ஓர­ள­வுக்கு தலை நிமிர்ந்து கொள்­வ­தற்கு நாட்டின் வெளி­நாட்டுக் கொள்­கையில் மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்டும்.

எல்­லா­வற்­றிக்கும் சீனாவை நம்பிச் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை தவிர்க்க வேண்டும். சீனா இலங்­கைக்கு நிதி அடிப்­ப­டையில் உத­வி­களை செய்து கொண்­டி­ருந்­தாலும், அந்­நாடு வழங்கும் கட­னுக்கு அதிக வட்­டியும், அதிக கட்­டுப்­பா­டு­களும் உள்­ளன. இத­னால்தான் இலங்கை சீனாவின் கொல­ணி­யாக மாறிக் கொண்­டி­ருப்­ப­தாக பௌத்த தேரர்கள் முதல் அர­சியல் தலை­வர்கள், பொரு­ளா­தார நிபு­ணர்கள் எனப் பலரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும், இலங்­கையில் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்துக் கொண்டு வரு­வ­தனை ஏனைய வல்­ல­ரசு நாடு­களும், மேற்­கத்­தைய நாடு­களும், இந்­தி­யாவும் விரும்­ப­வில்லை. இலங்­கையில் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்துக் கொண்டு வரு­வது இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக மாறிக் கொண்டு வரு­வ­தாக இந்­தி­யாவின் பாது­காப்­புத்­து­றை­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையின் சீனச் சார்பு கொள்­கையால் ஏனைய வல்­ல­ரசு நாடு­களும், பொரு­ளா­தார உயர்­நிலை நாடு­களும் இலங்­கையின் மீது பல்­வேறு அழுத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. வேண்­டாத பெண்­டாட்டி கைபட்­டாலும் குற்றம், கால்­பட்­டாலும் குற்றம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அந்­நா­டுகள் இருக்­கின்­றன. இந்­நி­லையை சீனா தனக்கு சாத­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கைக்கு உத­வு­வது போன்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை உறுஞ்­சிக்­கு­டிக்கும் வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இலங்­கையின் பொரு­ளா­தார நிலை இவ்­வாறு இருந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் ஆளுங் கட்­சி­யி­ன­ரி­டைய பலத்த முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன. அந்த முரண்­பா­டுகள் வலுத்துக் கொண்டு வரு­வ­த­னையும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றன.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாதக் கருத்­துக்­களை முன் வைத்து இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் வெற்­றிக்கு பங்­க­ளிப்பு செய்த அமைச்­சர்கள் விமல்­வீ­ர­வன்ச, உத­யன்­கம்­ம­வில ஆகி­யோர்­களும், அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் பசில்­ரா­ஜ­ப­க்ஷவின் பாராளுமன்ற வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களின் அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் அல்லது பறிக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எந்த வேளை­யிலும் ஆளும் தரப்­பி­லி­ருந்து விலகிச் செல்லும் சூழல் வலுத்துக் கொண்டு வரு­கின்­றன. இச்­சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகிச் செல்ல விருப்­ப­மு­டை­ய­வர்கள் விலகிச் செல்­லலாம். அவர்கள் வெளி­யே­று­வ­தற்கு கத­வுகள் திறந்­துள்­ளன என்று அண்­மையில் பிர­தமர் மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­மாயின் ஆளுந் தரப்­பி­ன­ரி­டையே காணப்­படும் முரண்­பா­டுகள் மேலும் வலுக்கச் செய்­யு­மென்­பதில் ஐய­மில்லை.

இத்­த­கைய சவால்கள் நிறைந்­துள்ள சூழ­லில்தான் நிதி அமைச்­ச­ராக பசில்­ரா­ஜ­பக்ஷ நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அர­சியல் நகர்­வு­களை மேற்­கொள்­வதில் வெற்­றி­வாகை சூடிய பசில்­ரா­ஜ­பக்ஷ நாட்டின் நிதி நெருக்­க­டியை வெற்றி கொள்­வ­திலும் வாகை சூடு­வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.