ஸகாதுல் பித்ரை பணமாக கொடுத்தல்

0 874

ஸகாதுல் பித்ர் என்­பது வச­தி­யுள்ள அனைவர் மீதும் ரம­ழானில் கட­மை­யாகும் ஒரு வணக்­க­மாகும். பெருநாள் தினத்தில் தன் தேவையை பூர்த்தி செய்­யக்­கூ­டிய அளவு வச­தி­யி­ருந்தால் ஏழை பணக்­காரன் என்ற பாகு­பா­டில்­லாமல் ஸகாதுல் பித்ரை கொடுப்­­பது வாஜி­பாகும். இலங்­கையில் ஸகாதுல் பித்­ராக, பிர­தான உண­வாக உட்­கொள்ளக் கூடிய அரி­சி­யி­லி­ருந்து தலா ஒரு நப­ருக்கு நவீன கால அள­வையின் படி 2.3Kg அரிசி கொடுப்­பதே வழ­மையில் உள்­ளது. கட­மை­யான ஸகாதுல் பித்­ருக்கு தானியம் கொடுப்­ப­தற்கு பக­ர­மாக அதன் பெறு­ம­தியை கொடுப்­பது பற்றி அன்றும் இன்றும் இஸ்­லா­மிய அறி­ஞர்கள் மத்­தியில் கருத்­து­வே­று­பாடு நில­வு­கி­றது. இஸ்­லா­மிய சட்­டப்­ப­ரப்பில் இது குறித்து மூன்று வகை­யான சிந்­தனைப் பிரி­வு­களை நாம் காணலாம்

• எத்­த­கைய நிலை­யிலும் பெறு­ம­தியை வழங்­கவே முடி­யாது என்று கூறும் சிந்­தனைப் போக்கு. நாட்டின் பிர­தான உணவுப் பொருளில் இருந்து மாத்­தி­ரமே இது வாஜி­பாகும். இமாம்­க­ளான மாலிக், ஷாபி, ஹன்­பலி ஆகிய மூன்று சிந்­தனை முகாம்­களின் பிர­தான கருத்து அந்­தந்த நாட்டில் பிர­தான உண­வாகக் கொள்ளக் கூடிய தானி­யங்­களில் இருந்து மாத்­தி­ரமே ஸகாதுல் பித்ர் வழங்­கப்­பட வேண்டும். ழாஹிரி (சட்ட வச­னத்தின் வெளிப்­ப­டை­யான நேரடிக் கருத்தை மாத்­திரம் நோக்கும் அணு­கு­முறை கொண்டோர்) சிந்­த­னையைக் கடைப்­பி­டிப்­போரும் இதே கருத்­தையே குறிப்­பி­டுவர்.

• பெறு­ம­தியை எந்த நிலை­யிலும் எது­வித நிபந்­த­னை­களும் இன்றி தாரா­ள­மாக கொடுக்­கலாம். இது ஹனபி மத்ஹபின் கருத்­தாகும். இந்த கருத்தை இமாம் சுப்­யா­னுஸ்­ஸௌரி, இரண்டாம் கலீபா என வர்­ணிக்­கப்­படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரி போன்ற பல மூத்த ஆரம்­ப­கால அறி­ஞர்­களும் கூறி­யுள்­ளனர். ஷெய்குல் அஸ்ஹர் மஹ்மூத் ஷல்தூத், கலா­நிதி யூஸுப் கர்­ளாவி என பல அறி­ஞர்­களும் இதே பத்­வாவை தான் வழங்­கி­யுள்­ளனர். அவ்­வாறே சர்­வ­தேச ஸகாத் அமைப்பும் பெறு­மானம் கொடுக்க முடியும் என்ற தீர்­மா­னத்­தையே கூட்டுப் பிர­க­ட­ன­மாக அறி­வித்­துள்­ளது.

• அந்­தந்த நாட்டில் பிர­தான உண­வாக உட்­கொள்ளக் கூடிய தானி­யத்­திலி­ருந்து கொடுப்­பதே அடிப்­ப­டை­யா­னது. எனினும் மக்கள் தேவையை கருத்தில் கொண்டும் நலன்கள் அடிப்­ப­டை­யிலும் பெறு­ம­தியை வழங்­கலாம். தானி­யங்­களை கொடுப்­பதை விட பணத்தை கொடுப்­பது பய­னுள்­ளது என்ற நிலை இருந்தால் பொரு­ளாக கொடுக்­காமல் பெறு­ம­தியை கொடுப்­பதே மிகவும் சிறந்­தது என்ற கருத்தை இவர்கள் கூறி­யுள்­ளனர். இதே சிந்­த­னையை தான் இமாம் அபூ இஸ்ஹாக், இமாம் இப்னு தைமியா போன்ற அறி­ஞர்­களும் தெரி­வித்­துள்­ளனர்.

இருந்த போதிலும் ஸகாதுல் பித்ரை பண­மா­கவோ அல்­லது வேறு பொருட்­க­ளா­கவோ கொடுக்க முடி­யாது, மாறாக நபி­ய­வர்கள் ஹதீஸில் குறிப்­பிட்டு கூறிய பொருட்­களை மட்­டுமே ஸகா­துல்­ பித்­ராவாக கொடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு கொண்டோர் கீழ்­வரும் ஆதா­ரங்­களை முன்­வைப்­பதை பார்க்­கலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்­லது ஒரு ஸாஃ அளவு வாற் கோது­மையை ஸகாதுல் பித்­ராகக் கட­மை­யாக்­கி­னார்கள் என்ற செய்­தியை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறி­வித்­துள்­ளார்கள். (புஹாரி)

இந்த ஹதீஸில் அதன் பெறு­ம­தியை கொடுப்­பது பற்றி எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. பெறு­மா­னத்தை கொடுப்­பது ஆகும் என்­றி­ருந்தால் நிச்­ச­ய­மாக இறை தூதர் அதனை தெளி­வாக கூறி­யி­ருப்­பார்கள். எனவே பெறு­மா­னத்தை வழங்­கு­வது ரஸூல் (ஸல்) அவர்கள் ஏவி­யதை நிறை­வேற்­றி­ய­தாக அமை­யாது என்ற நியா­யத்தை முதல் தரப்­பினர் முன்­வைக்­கின்­றனர். அவ்­வாறே ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத். அதில் மாற்­றங்கள் பற்றி ஆய்வு செய்­யாமல், உள்­ளதை உள்­ள­வாறே பின்­பற்­று­வதே அடிப்­படை விதி­யாகும். இதுவும் முதல் தரப்­பினர் முன்­வைக்கும் மற்­றொரு நியா­ய­மாகும்.

இந்த ஆதா­ரத்தை மறு­த­லிக்கும் அறி­ஞர்கள், மேலே குறிப்­பிட்ட ஹதீஸ் ஆதா­ரத்தில் நபி (ஸல்) அவர்கள் நேர­டி­யாக பேரீச்சம் பழம் அல்­லது கோது­மையை ஸகாதுல் பித்­ராக கொடுப்­பதை கட­மை­யாக்­க­வில்லை என்றும் அது நபித் தோழ­ரான இப்னு உமரின் கூற்­றா­கவே உள்­ளது என குறிப்­பி­டுவர். குறிப்­பிட்ட தானி­யங்கள் மாத்­திரம் தான் கொடுக்க வேண்டும் அதற்கு பக­ர­மாக வேறு எந்த தானி­யமும் கொடுக்­க­லா­காது எனவும் நபி (ஸல்) தெளி­வாக நேர­டி­யாக கூறி­ய­தாக எந்த ஒரு ஹதீஸ் வச­னமும் ஸுன்­னாவில் காண­மு­டி­யாது.

இந்த ஹதீஸின் அடிப்­ப­டையில் நோக்கும் போது அந்­தந்த நாட்டு தானி­யங்கள் கூட கொடுக்க முடி­யாது என்­பதே உண்­மை­யாகும். அதில் அரிசி போன்ற தானியம் குறித்து நபி (ஸல்) பேசி­யதே கிடை­யாது. இருந்தும் பெறு­மதி கொடுக்க மறுக்கும் அறி­ஞர்கள் கோது­மைக்கு பக­ர­மாக பிரதான உண­வாக கொடுக்கும் தானி­யங்­களை கொடுப்­ப­தற்கு அனு­ம­தி கொடுத்­துள்­ளார்கள். இதுவும் ஹதீஸின் நேரடிக் கருத்­துக்கு முர­ணா­னதே. கோதுமை அல்­லது பேரீத்தம் பழத்­துக்கு பக­ர­மாக எமது நாட்டில் அரிசி கொடுப்­பது பொருத்­த­மா­னது என ஒப்­பீட்டு அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு சிந்­திக்க முடி­யு­மாயின், அரிசி கொடுப்­ப­தற்கு பதி­லாக பெறு­மானம் கொடுப்­ப­தையும் அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்­பதே அடுத்த தரப்­பி­னரின் வாத­மாக உள்­ளது.

உண்­மையில் ஸகாதுல் பித்ர் என்ற கடமை அறிவை பயன்­ப­டுத்தி ஆய்வு செய்­வதை தடுக்கும் ஒரு வணக்க வழி­பாடு அல்ல. ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத் போலவே அதில் சமூக நலன்­களும் இணைந்­துள்­ளன. எனவே அந்த வணக்­கத்தை இருப்பதை உள்­ள­வாறே பின்­பற்றும் கட­மை­யாக நோக்க முடி­யாது. காரணம் அந்த வணக்­கத்தை நிறை­வேற்­று­வது ஏழை­களின் தேவை­யோடு தொடர்புபட்­டுள்­ளது. இது அடுத்த சகோ­த­ரனின் உரி­மை­யு­டனும் சம்­பந்­தப்­பட்­டுள்­ளது.

ஸகாதுல் பித்ரின் பிர­தான நோக்­கங்­களில் ஒன்று பெருநாள் தினத்தில் இல்­லா­தோ­ருக்கு கொடுத்­து­த­வு­வ­தாகும். அவர்­களின் அடிப்­படைத் தேவை­களை நிறைவு செய்­வதன் மூலம் ஏழை­களின் விழியில் ஆனந்­தக் கண்­ணீரை காண்­பதே அதன் ஒரு இலக்­காக உள்­ளது. எல்­லோரும் உணவுப் பொருட்­களை அள்ளி அள்ளி கொடுப்­பதன் மூலம் இலக்கை அடை­யவே முடி­யாது என்­பது மிகவும் தெளிவு. எனவே கால­மாற்­றத்தை கரு­த்திற் கொண்டு பணத்தை கொடுப்­பதன் மூலமே அவர்­களின் தேவைகள் நிறை­வேறும். இந்த உண்­மையை புரிந்த ஸஹா­பாக்கள் அன்றே பகுத்­த­றிவை பயன்­ப­டுத்தி இதில் பல மாற்­றங்­களை செய்­தார்கள். இல்­லா­தோ­ருக்கு பொருத்­த­மான தேவை­யான உண­வு­களை ஹதீஸ் சொல்­லா­விட்­டாலும் அவர்கள் பொருத்­த­மா­னதை தேர்ந்து எடுத்­தார்கள். கொடுக்கும் அளவு போதாது என்று கரு­திய போது அதன் அள­வை­விடக் கூட்டிக் கொடுத்­தார்கள். முஆ­வியா (ரழி) அவர்கள் மதீ­னாவின் பேரீத்தம் பழத்தின் நிறை­யா­னது ஷாமின் கோது­மைக்கு நிகராக இருக்க வேண்­டு­மானால் அளவை கூட்ட வேண்டும் என்று கரு­தி­ய­போது அபூ ஸஈத் குத்ரி (ரழி) அந்த மாற்­றத்தை செய்ய அனு­ம­தித்­தார்கள்.

இது வணக்க வழி­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது சமூகக் கார­ணிக்கும் இடம் கொடுத்தே ஸஹா­பாக்கள் யோசித்­துள்­ளார்கள். இங்கு அவர்கள் அறி­வுக்கு வேலை கொடுத்து கட­மையை நிறை­வேற்­றி­யுள்­ளர்கள்.

ஒரு முறை ஸகாத் பொருட்­களை வசூலிப்­ப­தற்­காக யமன் தேசத்­திற்கு முஆத் (ரழி) அவர்கள் அனுப்­பி­வைக்­கப்­பட்ட போது தானி­யங்­க­ளுக்கு பதி­லாக அதன் பெறு­ம­திக்­கு­ரிய ஆடை­களை தரு­மாறு கேட்­டார்கள். அது சுமப்­ப­தற்கும் இல­கு­வா­னது. மதீனா வாழ் மக்­க­ளுக்கும் தேவை­யாக உள்­ளது. இத்­த­கைய பொருள் பரி­மாற்­றத்தை நபி­களார் அங்­கீ­க­ரித்­துள்­ளாகள். பணப் பெறு­மானம் பார்க்­காமல் இதனை செய்ய முடி­யாது. எனவே இன்­றைய எமது தேவைக்கு ஏற்ப அதன் பெறு­மா­னத்தை கொடுப்­பது ஸஹா­பாக்­களின் சிந்­த­னை­யுடன் ஒத்துப் போகும் முறை­யா­கவும் உள்­ளது. இது தவிர நல்­லாட்சி புரிந்த நான்கு கலீ­பாக்­களும் கட­மை­யான ஸகாத் பொருட்­களை வசூலிக்கும் போது பணப் பெறுமா­னங்­களை கணித்து பரி­மாற்றம் செய்த வர­லாற்று நிகழ்­வுகள் ஏரா­ள­மாக உள்­ளன. உதா­ர­ண­மாக ஒட்­ட­கத்தின் ஸகாத்தை பெறும்­போது அதன் வயது வித்­தி­யா­சத்தை சரி செய்­வ­தற்­காக பணப் பெறு­மானம் பெறப்­பட்­டுள்­ளது. அல்­லது அதற்கு நிக­ராக ஆடுகள் பெறப்­பட்­டுள்­ளன. இந்த நிகழ்­வுகள் மிகவும் பிர­பல்­ய­மா­னவை.

அறி­ஞர்­களின் கருத்­தா­டல்­களை அவ­தா­னிக்கும் போது ஸகாதுல் பித்ரை பெறு­மா­ன­மாகக் கொடுக்க முடியும் என்­பது தெளி­வா­கி­றது. வர­லாற்றில் வலு­வான கருத்­தா­கவும் காணப்­ப­டு­கி­றது. எனவே பொரு­ளாக கொடுக்க முடியும் என்­பது அடிப்­ப­டை­யாக இருந்­தாலும் எந்த வழி­முறை ஏழை­களுக் மிகுந்த பய­ன­ளிக்­குமோ அதனை தேர்ந்­தெ­டுப்­பதே அறி­வார்ந்த செய­லாகும். மேற்­கூ­றிய அறி­ஞர்­களின் கருத்­தா­டல்­களை அவ­தா­னிக்கும் போது பின்­வரும் உண்­மைகள் புல­னா­கின்­றன.
1. ஸகாதுல் பித்ர் பற்றி பேசும் ஹதீஸின் நேரடிக் கருத்தை அவ­தா­னிக்கும் போது பொரு­ளாக கொடுக்க வேண்டும் என்ற சிந்­த­னையை அது சுட்­டு­கி­றது. இந்தக் கருத்தை யாருமே மறுக்கவில்லை.

2. பெறு­மா­னத்தை கொடுப்­பது ஆகும் என்ற சிந்­தனை ஒரு பல­மான கருத்­தாகும். அன்று தொட்டு இன்று வரை நியா­ய­மான அறி­ஞர்கள் அக்­க­ருத்தை தெரி­வித்­துள்­ளார்கள். எனவே அந்தக் கருத்தை குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது புறக்­க­ணிக்­கவோ முடி­யாது. அதற்­காக சமூக ஊட­கங்­களை பயன்­ப­டுத்தி மோதல்­களை உரு­வாக்­கவும் தேவை­யில்லை. மாற்றுக் கருத்­துக்­களை சீர­ணிக்க பழ­கு­வதே இன்­றைய தேவை­யாகும். வித்­தி­ய­சா­மான சிந்­த­னை­களை பக்­கு­வ­மாக கலந்­து­ரை­யாடும் போது முன்பு புரி­யாத பல உண்­மைகள் புரியும். அப்­போது அது அருள் என்று தெரியும்.

3. இஸ்லாம் நடை­மு­றைக்கு இல­கு­வான ஒரு மார்க்கம். கட­மை­களை செய்யும் போது கஷ்­டத்தை நீக்­கு­வது அதன் சிறப்­பம்­ச­மாகும். பணப் பெறு­மா­னத்தை அங்­கீ­க­ரிப்­ப­தா­னது பித்­ராவை திரட்­டு­வ­தற்கும் விநி­யோ­கிப்­ப­தற்கும் இல­கு­வா­னதே. பொது­வாக எல்­லோரும் அரிசை அள்ளி அள்ளிக் கொடுத்தால் பாவம் அந்த ஏழைகள் குறைந்த விலைக்கு விற்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டலாம். ஆனால் ஸஹா­பாக்கள் இத்­த­கைய கடி­னமா போக்கை கடைப்­பி­டிக்கவில்லை. எளி­மைப்­ப­டுத்­தி­னார்கள். உரி­யது பொருள் வடிவில் கிடைக்­காத போது அதன் பெறு­மா­னத்தை பெறு­வ­தற்கு வழி­காட்­டி­னார்கள்.

4. ஸகாதுல் பித்ரின் நோக்கம் மிகவும் தெளி­வா­னது. ஏழை­களின் தேவையை நிறை­வேற்­று­வதே முதன்­மை­யான நோக்­க­மாகும். எனவே பண­மாக கொடுக்கும் போது அவர்கள் தங்­க­ளு­டைய பல்­வகை தே­வை­க­ளையும் நிறைவு செய்து கொள்­வார்கள்.

5. சில போது பணப் பெறு­மானம் கொடுக்க முடியும் என்­பது ஹனபி அறி­ஞர்கள் மாத்­திரம் முன்­வை­த்த சிந்­தனை என தவறாக எண்­ணு­வ­துண்டு. அதனால் அந்த சிந்­தனை பெரும்­பான்மை அறி­ஞர்­க­ளுக்கு மாற்­ற­மான கருத்தாக கற்பிதம் செய்யப்படுகிறது. ஸகாதுல் பித்ராக பணப் பெறுமானத்தை வழங்க முடியும் என்பதை ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை தொடர்ந்து வந்த அறிஞர்கள், ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஒரு சிலர், இப்னு தீனார், இப்னு வஹாப் போன்ற சில மாலிக் மத்ஹப் அறிஞர்கள் மற்றும் ஸைதீக்கள் என பலரும் இந்த கருத்தை ஆதரித்து, நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர். அவ்வாறே ஐந்தாம் கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரீ போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் என பல இமாம்கள் இந்த சிந்தனையை தான் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.

பெரும்­பான்­மை­யான நவீன கால அறி­ஞர்­களும் பெறு­ம­தியை கொடுக்க முடியும் என்ற சிந்­த­னையே காலத்­திற்கு பொருத்­த­மா­னது என சான்று பகர்ந்­துள்­ளனர்.
1996ஆம் ஆண்டு சார்­ஜாவில் நடை­பெற்ற ஸகாத் தொடர்­பான மாநாட்டில் அறி­ஞர்கள் ஒன்­றி­ணைந்து பணப் பெறு­மானம் கொடுப்­பது ஆகும் என கூட்­டாக ஒரு தீர்­மா­னத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.