வன்செயல் நஷ்டஈடுகள் தாமதப்படுத்தப்படக்கூடாது

0 813

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்கள் பாரிய சொத்­த­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் பள்­ளி­வா­சல்­களும் பாரி­ய­ளவில் சேதங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு உரிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் என உறுதி வழங்கி வந்­துள்­ளது என்­றாலும் அர­சாங்கம் உரிய நஷ்ட ஈடுகள் வழங்­கு­வதில் இது­வ­ரை­காலமும் அச­மந்தப் போக்­கி­னையே கடைப்­பி­டித்து வந்­தது.

என்­றாலும் அண்­மைக்­கா­ல­மாக அரசு நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வதில் ஆர்­வம்­காட்டி வரு­கி­றது. ஜனா­தி­பதித் தேர்தல், மாகா­ண­சபைத் தேர்தல், பாரா­ளு­மன்­றத்­தேர்தல் என்று தேர்­தல்கள் அண்­மித்த நிலையில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கு­வது துரி­தப்­ப­டுத்தப்பட்­டுள்­ளது.

கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி அம்­பா­றையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்­க­ளுக்கு வயது ஒரு வரு­டமும் 5 மாதங்­க­ளு­மாகும். அம்­பாறை காசிம் ஹோட்­டலில் கருத்­தடை மாத்­திரை கலந்த உண­வுகள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக பொய்க் குற்றம் சுமத்­தப்­பட்டு வன்­செ­யல்கள் அப்­ப­கு­தியில் அரங்­கேற்­றப்­பட்­டன.

வன்­செ­யல்­க­ளினால் அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் பெரும் சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யது. அத்­தோடு மேலும் 13 சொத்­து­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டது.
இந்தச் சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக மதிப்­பீட்டுத் திணைக்­களம் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளினால் சேத மதிப்­பீட்­டுப்­ப­ணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேதம் 27 மில்­லியன் ரூபா­வெ­னவும் ஏனைய 13 சொத்­து­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேதம் 3.6 மில்­லியன் ரூபா­வெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த நஷ்­ட­ஈட்டுத் தொகை­யினை வழங்­க­மு­டி­யாது, பள்­ளி­வா­ச­லுக்கு ஒரு மில்­லியன் ரூபாவே வழங்க முடியும் என அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. புனர்­வாழ்வு அமைச்சின் சுற்­று­நி­ரு­பத்­துக்கு அமைய ஒரு மில்­லியன் ரூபாவே நஷ்ட ஈடாக பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­க­மு­டியும் என அமைச்­ச­ரவை தெரி­வித்­தது. அத்­தோடு 13 சொத்­து­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நஷ்டம் 3.6 மில்­லியன் ரூபா­வென மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் நஷ்­ட­ஈ­டாக அச்­சொத்­துக்­க­ளுக்கு 6 இலட்சம் ரூபாவே வழங்க முடியும் என அமைச்­ச­ரவை தெரி­வித்­தது.

இந்­நி­லையில் அம்­பாறை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் பல போராட்­டங்­களின் பின்பும் முஸ்லிம் அமைச்­சர்­களின் அழுத்­தங்­களின் பின்பும் பள்­ளி­வா­ச­லுக்கு 27 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய 13 சொத்­து­களின் நஷ்­ட­ஈட்டுத் தொகை பற்றி இன்னும் இறு­தித்­தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை.

இதே­போன்று 2018 மார்ச் மாதம் இடம்­பெற்ற கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள 173 சொத்­து­களில் 119 சொத்­து­க­ளுக்கு எதிர்­வரும் 6 ஆம் திகதி நஷ்­ட­ஈ­டாக 134 மில்­லியன் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. ஏனைய 54 சொத்­து­களின் நஷ்­ட­ஈட்டு கோவை­யி­லுள்ள குறைகள் நிவர்த்தி செய்­யப்­பட்­டதும் நஷ்­ட­ஈடு வழங்­கப்­படும் என புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டுப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு குரு­நாகல், கம்­பஹா, புத்­தளம் மாவட்­டங்­களில் அண்­மையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. நாத்­தாண்­டியா பகு­தியில் பாதிக்­கப்­பட்ட 98 குடும்­பங்­களில் 50 குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 7 மில்­லியன் ரூபா நேற்று வழங்­கப்­பட்­டது.

கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம் மாவட்­டங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டன. நூற்­றுக்­க­ணக்­கான சொத்­துகள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. சுமார் 30 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. இவற்­றுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அம்பாறை மற்றும் கண்டி – திகன வன்செயல்களுக்கான நஷ்டஈடுகள் தாமதப்படுத்தப்பட்டது போன்று தொடர்ந்தும் தாமதப்படுத்தக்கூடாது.

புனர்வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதமர் நஷ்டஈடுகளை மேலும் தாமதப்படுத்தாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தினுள் அனைத்து நஷ்டஈடுகளும் வழங்கப்படவேண்டும். இதனை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.