சஹ்ரானின் சிப்பிக்குளம் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞனும் கைது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பிலும் விசாரணை

0 183

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யான சஹ்ரான் ஹஷீம், தாக்­கு­த­லுக்கு முன்னர் அம்­பாந்­தோட்டை சிப்­பிக்­குளம் பகு­தியில் நடாத்­திய பயிற்சி முகாமில் பங்­கேற்­ற­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சி.ரி.ஐ.டி. எனும் பயங்­கரவாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரிகள் குறித்த இளை­ஞனைக் கைது செய்­துள்­ளனர். கடந்த 21 ஆம் திகதி குறித்த இளை­ஞனைக் கைது செய்­த­தா­கவும், அவ்­வி­ளைஞன் கண்டி பகு­தியைச் சேர்ந்த அப்­துல்லாஹ் எனும் பெயரை உடை­யவர் எனவும் சி.ரி.ஐ.டி. தக­வல்கள் தெரி­வித்­தன.

பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட தக­வல்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்தி இந்த கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த இளைஞன் கொழும்பில் தங்­கி­யி­ருந்­த­வாறு, தொலை­பேசி வாடிக்­கை­யாளர் சேவை மையம் ஒன்றில் சேவை­யாற்றி வந்­துள்ள நிலை­யி­லேயே கைது செய்­யப்பட்­ட­தாக கூற­ப்படு­கிறது.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ள இளைஞன் அம்­பாந்­தோட்டை சிப்­பிக்­குளம் இர­க­சிய முகாமில், சஹ்­ரா­னின் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பயிற்­றப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­குதல் சந்­தேக நபர்­க­ளுடன் அவ­ருக்கு நெருங்­கிய தொடர்­புகள் இருந்­ததா என விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் உதவி ஒத்­தா­சை­களை முன்­னெ­டுத்­தமை, தக­வல்­களை மறைத்­தமை தொடர்பில் சந்­தேக நப­ருக்கு எதி­ராக சி.ரி.ஐ.டி.யின் சிறப்­புக்­கு­ழு­வினர், பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.