சரித்­திரம் படைத்த தரித்­தி­ரமும் தரித்­திரம் படைக்கும் சரித்­தி­ரமும்

0 398

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

நாட்­டை­விட்டுத் துரத்­தப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச, இலங்­கையை செல்­வமும் செழிப்பும் பொங்கும் ஒரு நாடாக மாற்­றுவேன் என்று சூளு­ரைத்து அதனை பஞ்­சமும் பட்­டி­னியும் வாட்டும் ஒரு தரித்­திர நாடாக மாற்­றி­விட்டுச் சென்­றுள்ளார். ஆனால் இந்தத் தரித்­திரம் அவ­ருடன் மட்டும் உரு­வா­க­வில்லை. அதற்­கொரு நீண்ட சரித்­தி­ரமே உண்டு.

ஆனால் பின்­வ­ழியால் நாடா­ளு­மன்­றத்­தினுள் நுழைந்து ராஜ­பக்ச அணியின் ஆத­ரவால் ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்­தி­ருக்கும் ரணில் விக்­ர­ம­சிங்ஹ, அவர் காட்டும் இன்­னொரு பாதை­வ­ழி­யாகப் பொரு­ளா­தா­ரத்தை நடத்திச் சென்றால் 2048 இல் இலங்கை முதலாம் உல­க­ நா­டு­களுள் ஒன்­றாக மல­ரலாம் என்று ஹேஷ்யம் கூறி­யுள்ளார். அந்த ஆண்டில் இந்த ஜனா­தி­பதி உயி­ருடன் வாழ்ந்தால் அவ­ருக்கு 99 வய­தாகி ஒரு நூற்­றாண்டை அடையும் வாய்ப்­பையும் பெறுவார். இந்தத் தரித்­திரச் சூழ­லி­லி­ருந்து அவர் ஒரு புதிய சரித்­திரம் படைக்க எத்­த­னிப்­பதை உண­ர­மு­டி­கி­றது. ஆனால் அவர் படைக்­க­வி­ருக்கும் சரித்­தி­ரத்­தை­விட புதி­யதோர் சரித்­தி­ரத்தை இன்­றைய இளைஞர் சமு­தாயம் படைத்­துக்­கொண்­டி­ருப்­பதை மறத்­த­லா­காது.

இலங்­கையின் சரித்­தி­ரத்­தி­லேயே என்­று­மில்­லாத ஒரு தரித்­திர நிலை ஏற்­பட்­ட­தற்­கு­ரிய உட­னடிக் கார­ணங்­களை பலரும் (இக்­கட்­டு­ரை­யாளர் உட்­பட) பல சந்­தர்ப்­பங்­களில் விமர்­சித்­துள்­ளனர். வரவை மீறிய செல­வு­க­ளாலும் கண்­மூ­டித்­த­ன­மான வரிச்­ச­லு­கை­க­ளாலும் அர­சாங்கம் வரு­வாயை இழந்து பாரிய கடன் சுமைக்குள் நாட்டைப் புகுத்­தி­யமை, பதவி துறந்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தனது கற்­ப­னை­யிலே வடித்த ஒரு சொர்க்­கத்தை நன­வாக்க நினைத்து நாட்டின் உணவு உற்­பத்தித் துறைக்கு ஏற்­ப­டுத்­திய சீர­ழிவு, பொரு­ளா­தார வளர்ச்சி என்ற பெயரில் தாமரைக் கோபுரம் போன்ற அலங்­கார அமைப்­பு­க­ளுக்­காக கடன்­பட்டுச் செல­வு­செய்து அந்தச் செல­விலே ஒரு பகு­தியை ராஜ­பக்­சாக்­களும் அவர்­களின் அமைச்­சர்­களும் அடி­வ­ரு­டி­களும் சொந்த வரு­வாய்க்­காக ஒதுக்­கிய ஊழல்கள், நீதித் துறையின் சுயா­தீ­னத்தை புறம்­தள்ளி சர்­வா­தி­காரப் போக்­குள்ள பொது நிர்­வா­கத்தை வளர்த்­தமை என்­ற­வாறு ஒரு நீண்ட பட்­டி­ய­லையே அமைத்­து­வி­டலாம். அவை­யெல்லாம் உண்­மைதான். ஆனாலும் அத்­த­னைக்கும் அடிப்­ப­டை­யான ஒரு கார­ணத்தை ஓரி­ரு­வரே துணிந்து சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அந்­தக்­கா­ரணம் வர­லாற்று ரீதி­யாக உரு­வாகி மற்­றைய கார­ணங்­க­ளுக்கு ஊற்­றாக அமைந்­துள்­ளது. அந்தச் சரித்­தி­ரத்தை மறந்து விக்­கி­ர­ம­சிங்ஹ புதிய சரித்­தி­ர­மொன்றைப் படைக்கக் கனவு காண்­கிறார். அந்தக் கன­வைப்­பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

முதலில் இந்தத் தரித்­தி­ரத்தைப் படைத்த சரித்­திரம் எது? பல்­லி­னங்கள் வாழும் ஒரு நாட்டில் குறிப்­பிட்ட ஓர் இனம் தனது எண்­ணிக்­கையின் பலத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, அந்த நாட்டை தனக்கே சொந்­த­மெனக் கருதி அந்த ஓர் இனத்தின் நல­னுக்­கா­கவே அர­சியல், பொரு­ளா­தாரம், சட்டம், பொது நிர்­வாகம், கல்வி சம்­பந்­த­மான அமைப்­பு­க­ளை­யெல்லாம் உரு­வாக்கிச் செயற்­படத் தொடங்­கினால் அந்த நாட்டில் செழிப்பும் அமை­தியும் நிலைத்து நிற்­குமா? அப்­ப­டிப்­பட்ட ஒரு நாடா­கத்தான் இலங்கை 1948க்குப் பின் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை ஒரு சிங்­கள பௌத்த நாடு. அங்கு வாழும் ஏனைய சிறு­பான்மை இனங்கள் பெரும்­பான்மை இனத்தின் தயவில் வாழும் நீண்­ட­கால குத்­தகைக் குடிகள் என்ற கருத்து ஓர் அர­சியல் சித்­தாந்­த­மாக வளர்த்­து­விடப்பட்­டுள்­ளது.

இந்தச் சித்­தாந்தம் 19ஆம் நூற்­றாண்டின் இறு­திப்­ப­கு­தி­யிலேயே உரு­வா­கி­விட்­ட­தென்­றாலும் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­புதான் அது வேக­மான வளர்ச்­சியை கண்­டது. பெரும்­பான்மை இனத்தின் அர­சியல் தலை­வர்­களும், அறி­வி­ய­லா­ளர்­களும், சம­ய­வா­தி­களும் ஊட­கங்­களும் ஏதோ நாட்­டி­னது சர்வ பிணி­க­ளையும் தீர்க்கும் ஒரு சஞ்­சீவி மாத்­தி­ரை­யாக அந்தத் தத்­து­வத்தை சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு ஊட்­டி­யுள்­ளனர்.

இந்த இன­வாதத் தத்­து­வத்தின் சரித்­தி­ரமே இன்­றைய தரித்­தி­ரத்­திற்கு மூல­கா­ரணம் என்­பதை முதலில் விளங்­குதல் வேண்டும். அந்தத் தத்­து­வத்தை ஓர் அர­சியல் போர்­வை­யாகப் போர்த்­திக்­கொண்டு அதன் மறை­விலே ஒழிந்­தி­ருந்து ஏழு தசாப்­­தங்­க­ளாக அர­சியல் தலை­வர்கள் அரங்­கேற்­றிய இன­வாத நாட­கமே இந்தப் பொன் விைளயும் நாட்டைச் சீர­ழித்­துள்­ளது என்­பதை புதிய ஜனா­தி­ப­தியும் அவரை ஜனா­தி­ப­தி­யாக மேடை­யேற்­றிய நாடா­ளு­மன்றப் பிர­மு­கர்­களும் ஏன் உணர மறுக்­கின்­றார்­களோ? அடுக்­க­டுக்­காக அவிழ்த்­து­வி­டப்­பட்ட இனக்­க­ல­வ­ரங்கள், இனச்­சுத்­தி­க­ரிப்­புகள், ஆயு­தப்போர் யாவுமே அந்தத் தத்­துவம் ஏற்­ப­டுத்­திய சீர­ழி­வு­கள்­தானே. இந்தச் சரித்­திரப் புத்­த­கத்தை முற்­றாக மூடி­விட்டு, புதி­ய­தொரு சரித்­தி­ரத்தைப் படைக்­காமல் பழைய புத்­த­கத்தின் அடுத்த அத்­தி­யா­ய­மாக எழு­தப்­படும் எந்தப் பாடமும் பலன் தர­மாட்­டாது. அதைத்தான் முத­லா­வது உலக நாடு என்ற புதிய கன­வு­லகைப் படைக்க எத்­த­னிக்கும் ஜனா­தி­ப­தியும் உண­ர­வேண்டும்.

இன­வா­தத்தின் சரித்­தி­ரத்தை நன்­றாக உணர்ந்து அதற்­கொரு முற்­றுப்­புள்ளி வைக்­காமல் இந்த நாடு பொரு­ளா­தார சுபீட்சம் காண­மு­டி­யாது என்ற ஒரு மகத்­தான உண்­மையை காலி­மு­கத்­தி­டலிற் குவிந்த இளைஞர் கூட்டம் நாட்டின் தலை­வர்­க­ளுக்கு கிளிப்­பிள்­ளைக்குச் சொல்லிக் கொடுப்­ப­து­போன்று ஓயாது எடுத்­து­ரை­த்­­தனர். அவர்­கள்தான் புதிய சரித்­தி­ர­மொன்றை இன்­றைய தரித்­தி­ரத்தின் மடி­யி­லி­ருந்து படைத்துக் கொண்­ருக்­கின்­றனர். விழிப்­பு­ணர்வு பெற்ற அந்த இளைஞர் கூட்டம் நடத்­திய ஆர்ப்பாட்டங்­கள்தான் ஒரு பிர­த­ம­ரையும் ஜனா­தி­ப­தி­யையும் துரத்­தி­ய­டித்து புதிய இரு­வரை இப்­போது அப்­ப­த­வி­களில் அம­ரச்­செய்­துள்­ளன. ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ அந்தப் போரா­ளி­க­ளுக்குப் பெரிதும் கடமைப்பட்­டுள்ளார். ஆனால் போரா­ளிகள் படைக்­க­வி­ருக்கும் புதிய சரித்­தி­ரத்­துக்கு ஒரு மாற்றுச் சரித்­தி­ர­மாக தனது பொரு­ளா­­தார வளர்ச்சிக் கனவை முன் வைக்­கிறார் இந்த ஜனா­தி­பதி. அந்தக் கனவு சாத்­தி­யப்­ப­டுமா என்­பதை இனி ஆராய்வோம்.

அந்தக் கனவை நன­வாக்கும் முயற்­சியின் முதற்­ப­டி­யாக அவ­ரது கரி­சனை பொது­மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­திலே நாட்டம் கொண்­டுள்­ளது. மக்­க­ளது ஆத­ர­வில்­லாமல் ஜனா­தி­ப­தி­யாகி இருக்கும் விக்­கி­ர­ம­சிங்ஹ, அவ­ரது பத­வியை பிரச்­சி­னை­யில்­லாமல் நீடிக்க வேண்­டு­மென்றால் பொது மக்­களின் பொரு­ளா­தாரக் கஷ்­டங்­களை விரைவில் குறைக்­க­வேண்டும். எரி­வா­யு­வுக்கும் மருந்­துக்கும் மற்றும் அத்­தி­யா­வ­சியப் பொருள்­க­ளுக்கும் நீண்­ட­ வ­ரி­சை­க­ளிலே கால்­க­டுக்க நின்று ஏமாந்­து­போன எத்­த­னையோ நுகர்­வோரின் குமு­றல்­களை அடக்க வேண்­டு­மாயின் அந்தப் பொருள்கள் தாரா­ள­மாகக் கிடைப்­ப­தற்கு ஜனா­தி­பதி வழி­செய்ய வேண்டும். எரி­வா­யுவின் விலை சிறிது குறைக்­கப்­பட்டு நீண்ட ­வ­ரி­சை­களும் குறையத் தொடங்­கி­யதன் மர்மம் என்­னவோ? அதுவும் எத்­தனை நாட்­க­ளுக்கோ? இந்த விரை­வான மாற்­றங்­களைக் கண்­ணுற்ற சில அவ­தா­னிகள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹதான் இந்த நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுவார் என்ற ஒரு அவ­சர முடி­வுக்கு வந்­துள்­ள­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

ஆனால் உண்மை நில­வரம் என்ன? திறை­சே­ரியோ வங்­கு­றோத்­தாகி விட்­டது. ஆகவே அன்­னியச் செலா­வணி அவ­சியம் தேவை. இந்த நிலையில் உட­ன­டி­யாக அன்­னியச் வெலா­வ­ணியைத் தேடு­வ­தற்­காக அவர் எடுக்கும் பிர­தான முயற்சி சர்­வ­தேச நாண­ய­நிதியத்தின் உத­வியை நாடு­வ­தாகும். ஆனால் அதிலே பல சிக்­கல்கள் உள்ளன.

சர்­வ­தேச நாணய நிதி என்­பது முத­லா­ளித்­துவ அடிப்­ப­டையில் இயங்கும் உலக ஒழுங்­கினைக் கட்­டிக்­காப்­பாற்ற முனையும் ஸ்தாப­னங்­களுள் மிகப் பிர­தா­ன­மான ஓர் அமைப்பு. அதனை செல்­வந்த நாடு­களின் பாது­கா­வலன் என்­று­கூட அழைக்­கலாம். ஆகை­யினால், நெருக்­க­டிக்­குள்­ளான இலங்கை போன்ற முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தார நாடு­க­ளுக்கு உதவும் அதே­வேளை அவ்­வாறு உத­வு­வதால் செல்­வந்த நாடு­க­ளுக்கு அதிகம் இழப்­புகள் ஏற்­ப­டா­வண்­ணமும் அந்த நிறு­வனம் செயற்­ப­டுதல் வேண்டும்.

இலங்­கையின் கடன் தொகை 52 பில்­லியன் டொலர்­களை எட்­டி­யுள்­ளது. அந்­தக்­க­டனில் பெரும்­ப­குதி செல்­வந்த நாடு­களின் பணச்­சந்­தைக்குச் சொந்­த­மா­ன­தாகும். ஆகவே அந்­தப்­பணச் சந்­தை­யிலே பட்ட கடனை எவ்­வாறு இறுப்­பது என்­ப­து­பற்றி முதலில் இலங்கை அரசு சர்­வ­தேச நாணய நிதிக்கு பதில் கூற­வேண்டும். அதைப் பொறுத்­துத்தான் அவ­சர உத­வி­களை அந்த நிதி­யி­லி­ருந்தும் உலக வங்கி, ஆசிய அபி­வி­ருத்தி வங்கி போன்ற ஏனைய நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்தும் பெற முடியும். இத­னி­டை­யிலே சீனம் தான் கொடுத்த கடனை சர்­வ­தேச நாணய நிதி­மூலம் சீர்­ப­டுத்­துவ­தற்கு இணங்­கா­த­தனால் அந்த நாட்டு அர­சுடன் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­ஹவின் அரசை முதலில் பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு நாணய நிதி கேட்­டுள்­ளது. ஏற்­க­னவே சீனா­விடம் பட்ட கடனை அடைக்க முடி­யாமற் போன­த­னா­லேதான் அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கம் சீனா­வுக்கு 99 வரு­ட­கால குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டது. அதன் விளை­வுகள் எவ்­வ­ளவு பார­தூ­ர­மா­ன­தென்­ப­தற்கு இப்­போது உரு­வா­கி­யுள்ள சீனஆய்வுக் கப்பல் பிரச்­சினை ஓர் உதா­ரணம். எனினும் சீனா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் ஒரு­வாறு சமா­ளிக்­கப்­பட்­டாலும், நாணய நிதி சுமத்­தப்­போகும் பொரு­ளா­தாரப் பரி­கா­ரங்கள் பொது மக்­களின் கஷ்­டங்­களை விரைவில் தீர்க்கப் போவ­தில்லை. மாறாக அவை மேலும் அதி­க­ரிக்கும். அதனால் ஏற்­ப­ட­வி­ருக்கும் மக்­களின் கொந்­த­ளிப்­பு­களைச் சமா­ளிக்­கவே ஜனா­தி­பதி சர்­வ­கட்சி அர­சாங்­க­மொன்றை உரு­வாக்கி அதனுள் எல்­லாக்­கட்­சி­க­ளிலும் இருந்து அங்­கத்­த­வர்­களைப் பொறுக்கி அமைச்­சர்­க­ளாக்கி பொரு­ளாதாரப் பழியை தன் தலையில் மட்டும் போடாமல் எல்லாக் கட்­சி­க­ளு­டனும் பகிர்ந்­து­கொள்ள விளை­கின்றார். அந்தச் சூழ்ச்­சிக்குப் பலி­யா­காமல் புத்­தி­சா­து­ரி­ய­மாக விலகி நிற்­பவை மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் அதன் சகா­வான தேசிய மக்கள் முன்­ன­ணி­யுமே.

மக்­களின் கொந்­த­ளிப்­பு­களை அடக்­கு­வ­தற்கு முப்­ப­டை­க­ளையும் இந்த ஜனா­தி­பதி செயற்­ப­டுத்துவார் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை. அதற்­கான வெள்­ளோட்­டத்­தையே காலி­மு­கத்­திடல் அன்று கண்­டது.

இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் ஜனா­தி­ப­தியின் முதலாம் உலக நாடாக நாட்டை மிளி­ரச்­செய்யும் கனவை அணு­க­வேண்டும். அதை நன­வாக்க அவர் கூறிய வழிதான் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளு­டனும் நவீன தொழில் நுட்பத் திற­னு­டனும் புதுப்­பிக்­கத்­தக்க சக்­தி­யு­டனும் வேண்­டு­மானால் அணு சக்­தி­யு­டனும் ஒரு ஏற்­று­மதிப் பொரு­ளா­தா­ர­மாக மாற்­று­வது. கேட்­ப­தற்கு இது மகிழ்ச்­சி­யூட்­டு­வ­தா­கினும் நடை­மு­றையில் சாத்­தி­யப்­ப­டுமா என்­ப­துதான் பிரச்­சினை.

பல்­லின மக்­களைக் கொண்ட ஒரு நாட்டில் எந்த ஒரு பொரு­ளா­தார அமைப்பும் இன­வாதப் பின்­ன­ணியில் வெற்­றி­பெற மாட்­டாது என்­பதை ஜனா­தி­பதி முதலில் உண­ர­வேண்டும். நாட்டு மக்­களுள் மூன்­றி­லொரு பகு­தி­யி­னரை ஒதுக்­கி­விட்டு பொரு­ளா­தார வளர்ச்சி காணலாம் என்று நினைப்­பது ஒரு பகற்­க­னவு. ஆனால் இன­வா­தத்­தையும் இன­வா­தி­க­ளையும் வளர்க்­கின்ற ஓர் அர­சியல் சித்­தாந்­தத்தை அர­சியல் யாப்­பிலே வைத்­துக்­கொண்டு இலங்­கையைச் சொர்க்க பூமி­யாக மாற்­றலாம் என்று நினைக்­கிறார் இந்த ஜனா­தி­பதி. அந்த யாப்­பினைக் கிழித்­தெ­றிந்­து­விட்டு எல்­லாரும் இந்­நாட்டு மன்­னர்கள் என்ற பாணியில் ஒரு புதிய யாப்­பினை உருவாக்க இவரால் முடியுமா? அந்த முயற்சியில் இறங்கிய மறுகணமே இவர் பதவியிலிருந்து நீக்கப்படுவது நிச்சயம். இன்றைய நாடாளுமன்றம் அந்த முயற்சிக்கு ஒரு பெரும் தடை. இதனை உணர்ந்தவர்களே காலிமுகத்திடலின் சரித்திர நாயகர்கள். அதனாலேதான் “கோத்தாவே போ” என்றதுடன் “225 வேண்டாம்” என்றும் கோரினர்.

காலி­மு­கத்­திடல் இளஞ்­சந்­ததி தரித்­திரம் நிறைந்த இன்­றைய இலங்­கையில் புதிய சரித்­திரம் ஒன்றைப் படைக்க முற்­பட்ட முற்­போக்குப் படை. அவர்­களின் போராட்­டத்தின் இதய நாடியே இன­வாத இலங்­கையை ஒழித்து இலங்­கையின் எல்லா இனத்­தி­னரும் மக்­களும் சம­வு­ரி­மை­பெற்ற பிர­ஜைகள் என்ற கொள்கை. ஏழு தசாப்­தங்­களின் பின்னர் சிங்­கள பௌத்த மக்­க­ளி­டை­யே­யி­ருந்து எழுந்த முதற்­குரல் அவர்­களின் குரல். காலி­மு­கத்­தி­டலைக் கலைத்­த­த­னாலோ அவ்­வி­ளை­ஞர்கள் தாமாகக் கலைந்­த­த­னாலோ அந்தக் குரல் அடங்­க­வில்லை. அடிப்­படை மாற்றம் தேவை என்று அவர்கள் கேட்­பதன் அந்­த­ரங்கம் இதுவே. அந்த மாற்றம் ஏற்­ப­டும்­வரை முதலாம் உலக நாடாக இலங்கை விளங்­கு­மென நினைப்­பது கன­வா­கவே முடியும். இந்தச் சரித்­திர நாய­கர்­களின் கோரிக்­கையை முன்­னெ­டுத்துச் செல்­வது மக்கள் விடு­தலை முன்­னணி போன்ற முற்­போக்­கு­வா­தி­களின் தலை­யாய கடன். அவர்­களின் பின்னே அணி­தி­ர­ளாமல் பொதுவாக எல்லா மக்களுக்கும் குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கும் விடிவில்லை.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.